உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிப்பு : 4 குற்றவாளிகள் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு

மோடி பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிப்பு : 4 குற்றவாளிகள் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு

பாட்னா: பீஹாரில் பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் 4 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ., பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.இதையடுத்து 2013-ம் தேதி பீஹார் மாநிலம் பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் பல்வேறு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் பலர் பலியாயினர்.தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறப்பு என்.ஐ.ஏ., சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதனை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த தனி நீதிபதி ஆஷூதேஷ் குமார், 4 குற்றவாளிகளுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

subramanian
செப் 12, 2024 13:07

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்ய சதி.


Va.sri.nrusimaan Srinivasan
செப் 12, 2024 08:24

"uruppudum"! innamum, needhi Thuraya nambinaa, indhiya naadu 200 thundu aahum!!


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 07:29

The death sentences awarded by a trial court to convicts Haider Ali, Mohammad Majibullah, Numan Ansari, and Imtiaz Alam have been converted by the HC to 30 years imprisonment. On the other hand, the life imprisonment of the two more accused, Omar and Azharuddin, has been upheld by the trial court in the case.


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 07:26

அத நான்கு பேரின் பெயர்கள் என்னென்ன ???? மிகவும் ரகசியமோ ????


Kasimani Baskaran
செப் 12, 2024 05:48

தமிழக சட்டத்துறை அமைச்சர் தலையிட்டு தண்டனை குறைந்ததாக பேசிக்கொள்கிறார்கள் - உடன்பிறப்புக்கள்.


Duruvesan
செப் 12, 2024 05:03

பாஸ் 4 பேரையும் விடுதலை பண்ணி இருக்கலாம், அடுத்தவன் உயிர் உஙகளுக்கு அவ்வளவு அலட்சியம்


Sathyanarayanan Sathyasekaren
செப் 12, 2024 03:33

மூளைச்சலவை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டும் நீதிபதிகளின் குடும்பத்தினர் இறந்திருந்தால் இப்படித்தான் செய்வார்களா? என்ன காரணத்தினால் தண்டனை குறைக்கப்பட்டது என்று மக்களுக்கு சொல்ல வேண்டும். கான் காங்கிரஸ் கொத்தடிமையாக இருப்பர், இப்போது அரசு மேல்முறையீடு செய்தால் ஐயோ சிறுபான்மையிரனுக்கு கொடுமை என்று கத்த கான் பப்பு கான் போலி காந்திக்கு வாய்ப்பு . அது தான் இந்த நீதிபதியின் திட்டம்.


சமீபத்திய செய்தி