உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செல்பி மோகத்தால் விபரீதம் 100 அடி பள்ளத்தில் விழுந்த பெண்

செல்பி மோகத்தால் விபரீதம் 100 அடி பள்ளத்தில் விழுந்த பெண்

புனே: மஹாராஷ்டிராவின் சடாரா மாவட்டத்தில், நீர்வீழ்ச்சியில் செல்பி படம் எடுக்க முயன்றபோது, 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த, 29 வயது பெண், பத்திரமாக மீட்கப்பட்டார்.மஹாராஷ்டிராவின் புனேயைச் சேர்ந்த சிலர், சடாரா மாவட்டம் போர்னே காட் பகுதியில் மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு தோஷேகார் நீர்வீழ்ச்சியில், அந்த குழுவைச் சேர்ந்த, 29 வயது பெண், செல்பி எடுக்க முயன்றார். மழை பெய்து கொண்டிருந்ததால், பாறையில் வழுக்கி, 100 அடி பள்ளத்தில் அவர் விழுந்தார்.உடன் வந்த மலையேற்றக் குழுவினர் மற்றும் போலீசார் இணைந்து கயிறு கட்டி, அந்த பெண்ணை மீட்டனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மஹாராஷ்டிராவின் ராய்கடில் கும்பே நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற, 26 வயது, சமூக வலைதளப் பிரபலம், பள்ளத்தில் விழுந்து சமீபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சுற்றுலா தலங்களில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, சுற்றுலா துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை