உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு தர்மசங்கடம் அரவிந்த் லிம்பாவளி வருத்தம்

பா.ஜ.,வுக்கு தர்மசங்கடம் அரவிந்த் லிம்பாவளி வருத்தம்

விஜயபுரா: ''ம.ஜ.த.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வழக்கால், பா.ஜ.,வுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது,'' என அக்கட்சியின் மூத்த தலைவர் அரவிந்த் லிம்பாவளி தெரிவித்தார்,விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வழக்கால், பா.ஜ.,வுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது உண்மை தான். இதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் தவறு செய்தவரை பா.ஜ., ஆதரிக்காது; அவருடன் நிற்காது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறோம். விசாரணையில் கட்சி குறுக்கிடாது. பிரஜ்வல் ரேவண்ணா விஷயத்தை அரசியல் நோக்கத்துக்கு, காங்கிரஸ் பயன்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ