UPDATED : ஏப் 29, 2024 06:24 PM | ADDED : ஏப் 29, 2024 10:36 AM
புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பேசியது போன்று போலி வீடியோவை சமூகவலைதளங்களில் பரவிய விவகாரம் தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மே 1ல் ஆஜராகுமாறு டில்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பேருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.தேர்தல் பிரசாரத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக அமித்ஷா பேசிய வீடியோவை திரித்து, பட்டியல் சாதியினர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பேசுவது போன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1a158nj9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தவறான தகவல்களை குறிப்பிட்டு பரப்பப்பட்ட இந்த வீடியோவை, உருவாக்கி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய உள் துறை அமைச்சகம் சார்பிலும் நடவடிக்கை கோரி, புகார் அளிக்கப்பட்டுள்ளது. டில்லி போலீசார், அமித்ஷாவின் அசல் வீடியோவையும், சித்தரிக்கப்பட்ட வீடியோவையும் ஒப்பிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மே 1ல் ஆஜராகுமாறு டில்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பேருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ஒருவர் கைது
அமித்ஷா பேசியதுபோல் போலியாக வீடியோ பரப்பிய விவகாரத்தில் அசாமை சேர்ந்த ரிதோம் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அஞ்சமாட்டோம்
இது குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது: சி.பி.ஐ., அமலாக்கத்துறை போல் டில்லி போலீசார் மூலம் பிரதமர் மோடி, அமித் ஷா அச்சுறுத்துகின்றனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு அஞ்சமாட்டோம், போராடுவோம் எனக் கூறியுள்ளார்.