கேரளாவில் நான்கு நாட்கள் பலத்த மழை எச்சரிக்கை
மூணாறு:கேரளாவில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது வலுவடைந்து வரும் நிலையில் இன்று முதல் செப்.2 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. அதன்படி இன்று கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. எல்லோ அலர்ட்
இன்று இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கும், நாளை மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், இதே மாவட்டங்களுக்கு செப். 1 லும், செப்.2ல் எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.