உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 32 ஆண்டுக்கு பின் காஷ்மீரி பண்டிட் பெண் வேட்பாளர்

32 ஆண்டுக்கு பின் காஷ்மீரி பண்டிட் பெண் வேட்பாளர்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலில், 32 ஆண்டுக்குப் பின், காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார்.ஜம்மு - காஷ்மீர் சட்டசபைக்கு, வரும், 18, 25, அக்., 1ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ராஜ்போரா சட்டசபை தொகுதியில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்தாஸ் அதவாலேயின் குடியரசு கட்சி சார்பில் டெய்சி ரெய்னா போட்டியிடுகிறார்.கடந்த, 1990களில், காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டிட்கள் பயங்கரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். அதில், டெய்சி ரெய்னாவின் குடும்பமும் ஒன்று. டில்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், 2020ல் காஷ்மீருக்கு திரும்பினார்.புல்வாமா மாவட்டம் பிர்சால் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்வானார். தற்போது சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதன் வாயிலாக, 32 ஆண்டுக்குப் பின், சட்டசபை தேர்தலில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
செப் 11, 2024 12:33

பாஜகவினால் ஜனநாயகம் மலரப்போகுது அங்கே ..... இல்லைன்னா பரம்பரை ஆட்சிதான் ..... தமிழகத்திலும் ஜனநாயகம் மலரும் ......


Sampath Kumar
செப் 11, 2024 09:58

இந்த ஆண்டிடுகளை அக்கவேய்ந்த.....


Duruvesan
செப் 11, 2024 06:46

மூர்க்க கூட்டணி என்ன சொல்லும், முதுகில் குத்தும். அய்யா அப்துல் கலாம் முதுகில் குத்திய துரோகிகள் அவங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை