அடிப்படை கட்டமைப்பு ஊரக வளர்ச்சி உட்கட்டமைப்புக்கு, 2.66 லட்சம் கோடி ரூபாய் நாடு முழுதும், 12 தொழிற்பூங்காங்கள் உருவாக்கப்படும் சென்னை - விசாகபட்டினம், ஹைதராபாத் - பெங்களூரு தொழில் வழித்தடம் அமைக்கப்படும் புதிதாக, 100 உணவு தர பாதுகாப்பு சோதனை மையங்கள் துவங்கப்படும்.'ஜாக்பாட்' மாநிலங்கள் ஆந்திராவின் அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு சிறப்பு நிதியாக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு விமான நிலையங்கள், மருத்துவ கல்லுாரிகள் அமைக்க பீஹாருக்கு 26,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி பீஹார் மாநிலத்தில் வெள்ளத்தடுப்பு நிவாரண நிதிக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் பீஹாரில், 2,400 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு மின் ஆலைகள் அமைக்க 21,400 கோடி ரூபாய் அசாம், ஹிமாச்சல், உத்தரகண்ட், சிக்கிமில் வெள்ள பாதிப்புகளுக்கு உதவி வழங்கப்படும்.சொந்த வீடு கனவு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு 10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. இந்த திட்டத்தின் கீழ், மேலும் மூன்று கோடி வீடுகள் கட்டப்படும் 1.28 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளதால், 'ஒரு கோடி வீடுகளில் சோலார் மின்சாரம்' வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும். பெண்கள் முன்னேற்றம் மகளிர், பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு பெண்கள் பெயரில் வாங்கும் சொத்துகளுக்கு, முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க மாநிலங்களுக்கு வலியுறுத்தப்படும்.தொழில் வளர்ச்சி சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த, இந்தாண்டு 24 சிறுதொழில் வளர்ச்சி வங்கி - சிட்பி கிளைகள் துவங்கப்படும் பிற மாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, குறைந்த செலவில் அரசு - தனியார் பங்களிப்பில் தங்குமிடம் அமைக்கப்படும் முதலீட்டாளர்களுக்கான 'ஏஞ்சல் வரி' ரத்து வடகிழக்கு மாநிலங்களில் புதிதாக, 100 தபால் நிலைய வங்கிக் கிளைகள் துவங்கப்படும்.இளைஞர் நலன் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் துறைக்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஐந்து ஆண்டுகளில், 500 முன்னணி நிறுவனங்களில், ஒரு கோடி பேருக்கு ஒருமுறை ஊக்கத்தொகை 6,000 ரூபாய், மாதம் 5,000 ரூபாய் ஊதியத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் சிறு தொழில் செய்பவர்களுக்கான முத்ரா கடன் திட்டத்தின் 'தருண்' பிரிவில், ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் பெற்று திருப்பி செலுத்தியவர்களுக்கு கடன் தொகை, 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு உள்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக்கடன், 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் தொழிலாளர் வைப்பு நிதியில் முதன்முறை சேரும் பணியாளருக்கு முதல் மாத ஊதியம், மூன்று தவணைகளில் அதிகபட்சம் 15,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.விவசாயம் அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஒரு கோடி பேருக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி வழங்கப்படும் கடுகு, நிலக்கடலை, எள், சோயாபீன், சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் விண்வெளி பொருளாதார வளர்ச்சியை 10 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்த்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக கடல்சார் உணவு 60,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி. வரி சலுகை புதிய வருமான வரி திட்டத்தில் நிலையான கழிவு 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்வு குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு, 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்வு வருமான வரி தாமதமாக தாக்கல் செய்வது, இனி குற்றமாக கருதப்படாது.