உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு முறைகேடு புகார்; சி.பி.ஐ., விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

நீட் தேர்வு முறைகேடு புகார்; சி.பி.ஐ., விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து மத்திய அரசு விரிவான விசாரணைக்காக சி.பி.ஐ., விசாரணைக்கு நேற்று( ஜுன்-22) உத்தரவிட்டதுமத்திய கல்வி அமைச்சகம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் மே 5ல் நாடு முழுவதும் 4,700க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்.ஜுன் 4ல் நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்தன.இதில் 67க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றிருந்தனர். அவர்களில் சிலர் ஒரே நீட் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக புகார்கள் எழுந்ததையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் இவ்விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுகிறது. நீட் தேர்வு முறைகேடு புகாரில் காவல்துறையின் விசாரணையில் பீகாரில் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
ஜூன் 23, 2024 04:42

அண்ணாமலை சொன்னமாதிரி உயிரே போனாலும் நீட் போகாது. விவசாய சட்டங்களை எதிர்த்து போராடியது போன்று வெறுமனே போராடி கலையவேண்டியது தான். நீட் இருக்கும் தான். படித்து பாஸ் செய்யுங்கள். இல்லையெனில் மூடிக்கிட்டு உட்காருங்கள்.


venugopal s
ஜூன் 23, 2024 07:22

மத்திய பாஜக அரசுக்கு ஒரு நீட் தேர்வை ஒழுங்காக நியாயமாக நடத்த துப்பில்லை, வாய் மட்டும் அடுத்த தெரு வரை நீளும் இந்த பாஜகவினருக்கு!


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ