உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐயோ தாங்க முடியலப்பா..! ஒரே வாரத்தில் 4வது பாலம் "டமால்": பீஹாரில் அடுத்தடுத்து அதிர்ச்சி

ஐயோ தாங்க முடியலப்பா..! ஒரே வாரத்தில் 4வது பாலம் "டமால்": பீஹாரில் அடுத்தடுத்து அதிர்ச்சி

பாட்னா: பீஹார் மாநிலத்தில் கன்காய் ஆற்றில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. ஏற்கனவே மூன்று பாலங்கள் இடிந்து விழுந்தன. ஒரே வாரத்தில் நான்கு பாலங்கள் இடிந்து விழுந்தது பீஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீஹார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கன்காய் ஆற்றில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால், பாலத்தின் தூண்கள் சேதமடைந்தது. இதனால் 2011ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம், இன்று (ஜூன் 27) இடிந்து தரைமட்டமானது. இந்த பாலம் 70 மீட்டர் நீளம் உடையது.சில தினங்களுக்கு முன்பு, சம்கரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி பகுதியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த சிறிய பாலம் இடிந்து விழுந்தது. அராரியா பகுதியில் பக்ரா ஆற்றின் மீது, 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருந்த பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது. இதேபோல் சிவான் மாவட்டத்தில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது. ஒரே வாரத்தில் 4 பாலங்கள் இடிந்து விழுந்தது, பீஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

J.Isaac
ஜூன் 29, 2024 13:05

பாதுகாப்பாக ஊழல் செய்ய தகுதியான துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை. இப்படி இடிந்து விழ வாய்ப்பே இல்லை. சாலை பழுதடைந்தால் கனரக வாகனங்கள் மீது பழி போடலாம்.தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கிற சுங்கச்சாவடிகள் மூலம் அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கலாம்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 28, 2024 06:57

தமிழகத்தில் வாங்கப்படும் கமிஷனை விட அதிகமாக வாங்கியவர்கள் போலும்


தாமரை மலர்கிறது
ஜூன் 28, 2024 01:30

ராம் தேஜஸ்வி துணை முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட பாலங்கள் விழுகின்றன. இந்தியா கூட்டணியில் இவர் துணை பிரதமராக ஆசைப்பட்டார். இந்தியா சர்வநாசத்திலிருந்து தப்பித்து விட்டது.


S. Narayanan
ஜூன் 27, 2024 20:22

மொத்த தொகை போல இரு மடங்கு கட்டியவர்களிடம் வசூலிக்க வேண்டும்


Vathsan
ஜூன் 27, 2024 18:40

JDU பிஜேபி ஊழலோ ஊழல். வடநாட்டில் மக்கள் முட்டாளாக இருக்கும் வரை ஊழல் தொடரும்.


தமிழ்வேள்
ஜூன் 27, 2024 19:55

உன்னுடைய தமிழகம் ஊழல் என்றால் என்ன என்றே தெரியாத உத்தமர்களால் ஆளப்படுகிறது பாரு....போவியா?..


nagendhiran
ஜூன் 27, 2024 20:11

பாலம் எப்ப கட்டப்பட்டது தெரியுமா?


Lion Drsekar
ஜூன் 27, 2024 17:14

தாங்கித்தான் ஆகவேண்டும் இன்னமும் பல பல செய்திகள் வரும் . உடைந்தது பாலம் ஆகையால் வெளிச்சத்துக்கு வந்தது ஜனநாயகம். பல பெயர்களில் இடிந்து விழாமல் கண்ணுக்கே தெரியாமல் பல லட்சம் கோடி உள்ளன ,அவைகள் அனைத்தும் கல்விபோல் , தீ பிடிக்காது , கள்வரால் கொள்ளை போகமுடியாது , ஏன் கண்ணுக்கே தெரியாது அப்படிப்பல ப்ரொஜெக்ட்டுக்கள் உள்ளன . இதற்க்காகத்தான் படிக்காமல் , வேலைக்கு செல்லாமல், மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்ற ஒரே நோக்கில் நாளுக்கு கட்சிகள் குடும்பங்கள் , தொண்டர்கள் பெருகிக்கொண்டே போகிறார்கள் . வாழ்க முடியாட்சி . வந்தே மாதரம்


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 27, 2024 19:11

ஊழல் காரர்கள் என்று தெரித்தே லல்லு குடும்ப கட்சிக்கு வோட்டை போட்ட மக்களை தான் சொல்ல வேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ