உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உள்நாட்டு பயிர்களுக்கு விதை வங்கி

உள்நாட்டு பயிர்களுக்கு விதை வங்கி

 தோட்ட விளைச்சல்களில், நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் நோக்கில், 'தோட்ட உற்பத்திகள் மேம்பாட்டு திட்டம் - 2' செயல்படுத்தப்படும். இதற்காக 95 கோடி ரூபாய் ஒதுக்கீடு தோட்ட விளைச்சல் பகுதிகளை விஸ்தரிக்க, சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மார்க்கெட்டிங் வசதி செய்ய, விளைச்சல்களின் ஆரோக்கியம் குறித்து, விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில் 'அறிவு களஞ்சியம்' அமைக்கப்படும் கர்நாடகாவின் 20 ஜி1 டேக் கொண்டுள்ள விளைச்சல்கள், உள்நாட்டு பயிர் வகைகள் அழிந்து வருவதை தடுக்கும் நோக்கில், உள்நாட்டு பயிர் வகைகள் விதை வங்கி அமைக்கப்படும் பேடகி மிளகாய் வகையை பாதுகாக்கவும், நோய்களை தடுப்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படும் அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில், பூ விவசாயம், அலங்கார செடிகள், மருத்துவ குணம் கொண்ட செடிகள் வளர்க்க ஊக்கப்படுத்தப்படும் கதக் மாவட்டத்தின், டம்பளாவில், தோட்டக்கலை கல்லுாரி அமைப்பது குறித்து, வல்லுநர்களிடம் அறிக்கை பெறப்படும் தோட்ட விளைச்சல்களுக்கு சொட்டு நீர்ப்பாசன வசதி செய்ய, 52,000 பயனாளிகளுக்கு 462 கோடி ரூபாய் உதவித்தொகை மலைப்பகுதி மாவட்டங்களில், இலைப்புள்ளி நோய் பாதிப்பால், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதை கட்டுப்படுத்தி, பயிர்களை காப்பாற்ற 62 கோடி ரூபாய் ஒதுக்கீடு தென்னை விளையும் பகுதிகளில், விளைச்சலை கருப்பு தலை புழுக்கள் அழிப்பது குறித்து, ஆய்வு செய்யப்படும். அறிக்கை அடிப்படையில் விளைச்சலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி