உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையா ராஜினாமா கோரி பாதயாத்திரை நடத்த முடிவு

சித்தராமையா ராஜினாமா கோரி பாதயாத்திரை நடத்த முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா கோரி, பெங்களூரில் இருந்து மைசூருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி, அம்மாநில பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 'மூடா' என்ற மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் மைசூரு மற்றும் பெங்களூரில் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அடுத்தகட்டமாக, பெங்களூரில் இருந்து முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூரு வரை பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று பா.ஜ., - ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழுவினர் முக்கிய ஆலோசனை நடத்தினர். அதன்பின், கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியதாவது:பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் 3ம் தேதி பாதயாத்திரை ஆரம்பிக்கிறோம். மைசூரு செல்வதற்கு ஏழு நாட்கள் தேவை. மூத்த தலைவர்களான எடியூரப்பாவும், குமாரசாமியும், பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர். மைசூரில் ஆகஸ்ட் 10ம் தேதி பிரமாண்டமான நிறைவு பொதுக்கூட்டம் நடக்கும். அன்றைய தினம் இரு கட்சிகளின் தேசிய தலைவர்களான தேவகவுடாவும், நட்டாவும் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anonymous
ஜூலை 29, 2024 10:21

எப்படியும் போக வேடிய நேரம் வந்தாச்சு, ஒப்பந்த படி, அடுத்து டி. கே.சிவகுமார் முதலமைச்சர் ஆக வேண்டிய கட்டம், ஒரு வேளை அவர் தான் இந்த பாத யாத்திரைக்கு plan போட்டு கொடுத்தாரா, இல்லைனா சித்தராமையா பதவி விலக மாட்டார் போல.யார் கண்டது உள்ளுக்குள்ள என்ன அடி தடியோ?


sethu
ஜூலை 29, 2024 09:34

கர்நாடக கருணாநிதி வாழ்த்துக்கள் ஜி .


Kasimani Baskaran
ஜூலை 29, 2024 05:48

14 துணைவி தேடவில்லையே என்று இந்திக்கூட்டணி பாராட்டுப்பத்திரம் கூட கொடுக்கும்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை