உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலெக்டர் வழங்கும் ஆவணமே திருநங்கையரின் அடையாளம்

கலெக்டர் வழங்கும் ஆவணமே திருநங்கையரின் அடையாளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரைச் சேர்ந்த திருநங்கை ரேஷ்மா பிரசாத், தன் ஆதார் அட்டையுடன், பான் எனப்படும் வருமான வரிக்கணக்கு தாக்கலுக்கான அட்டையை இணைக்க முயன்றார். கடந்த 2012ல் பெறப்பட்ட அவரது பான் அட்டையில், அவரது பாலினம் ஆண் என உள்ளது. திருநங்கையாக மாறிய அவரது ஆதார் அட்டையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரிவு இருப்பதால், அதில் திருநங்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், ஆதாருடன் பான் அட்டையை இணைக்கும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பான் அட்டையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரிவை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி, 2018ல் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, 'மூன்றாம் பாலினத்தவர்கள் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, திருநங்கை உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கலெக்டர்கள் வழங்கும் பாலின மாற்றத்துக்கான அடையாள சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அது, உரிய ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
ஆக 30, 2024 15:10

ஒரு ஆளுக்கு ஐநூறு கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்..... பிறகு என்ன கூட்டம் கூடி ஓவராக கும்மி இடிக்கிறாங்க!


அப்பாவி
ஆக 30, 2024 08:43

இவிங்க ஜனத்தொகை ஓவராப் போயிட்டிருக்கு. என்ன காரணம்?


Kasimani Baskaran
ஆக 30, 2024 05:49

இதற்க்கெல்லாம் ஒரு வழக்கு என்று போனால் நீதிமன்றங்கள்தான் நாட்டில் எங்கு பார்த்தாலும் இருக்கும். அதன் பின்னர் நீதிமன்றம் சொல்லாமல் யாரும் வேலை செய்ய மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை