உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா பெண் டாக்டர் கொலை வழக்கு: நீதியை நிலைநாட்ட மம்தா உறுதி

கோல்கட்டா பெண் டாக்டர் கொலை வழக்கு: நீதியை நிலைநாட்ட மம்தா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், அரசு மருத்துவ கல்லுாரியில் , பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, பெண் பயிற்சி டாக்டரின் குடும்பத்தினரை முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். அவர், வழக்கில், நீதி வழங்கப்படும் என உறுதி அளித்தார். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் ஜி.ஆர்.கார் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, முதுநிலை மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த 9ம் தேதி, கருத்தரங்கு வளாகத்தில் மர்மமான முறையில் அரை நிர்வாணக் கோலத்தில் இறந்து கிடந்தார்.பிரேத பரிசோதனையில், கொலை செய்யப்படுவதற்கு முன், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ur3q3kyq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

போராட்டம்

இது குறித்து விசாரித்த போலீசார், சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். மாணவிக்கு நீதி கேட்டு பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் குடும்பத்தினரை இன்று (ஆகஸ்ட் 12) முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்தார்.

சி.பி.ஐ., விசாரணை

பின்னர், ''வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் விசாரணையில் முன்னேற்றம் எற்படாவிட்டால், சி.பி.ஐ., விசாரணை கோரப்படும். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கப்படும். மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கை, விரைவில் நீதிமன்றம் விசாரிக்க விரும்புகிறோம்'' என மம்தா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 12, 2024 21:37

கற்பின் மகத்துவம், உயிரின் அருமை தெரிந்தவர் மம்தா .....


Duruvesan
ஆக 12, 2024 19:24

கிரிமினல் நீதி நிலை நாட்டுமாம்?


Nandakumar Naidu.
ஆக 12, 2024 16:37

இந்த மம்தா பேகம் ஆட்சியை விட்டுப்போனால் மட்டுமே பெங்கால் உருப்படும். இவரும் ,இவர் ஆட்சியும் மேற்கு வங்காளம் மற்றும் இந்தியாவிற்கு கேடு. அழிக்க பட வேண்டிய ஒன்று.


அசோகன்
ஆக 12, 2024 16:10

ஆட்டுக்கு ஓநாய் காவல் ???


P. VENKATESH RAJA
ஆக 12, 2024 15:58

நீதி கிடைத்தால் நன்றாக இருக்கும்... ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இப்படியொரு சோக நிகழ்வு நடந்தது வருத்தம் அளிக்கிறது


S. Narayanan
ஆக 12, 2024 14:42

நீதியை நிலை நாட்டி என்ன செய்வது போன உயிர் திரும்பி வராதே. மானம் போகும் முன் சாவு வரு முன் காத்திருந்தாள் பாராட்டலாம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி