உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜன்தன் திட்டத்தில் முடங்கிய 14.28 கோடி வங்கி கணக்குகள்

ஜன்தன் திட்டத்தில் முடங்கிய 14.28 கோடி வங்கி கணக்குகள்

புதுடில்லி: 'ஜன்தன்' திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளில் துவங்கப்பட்ட கணக்குகளில், 14.28 கோடி வங்கிக் கணக்குகள் செயல்படாத நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2014ல் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கி சேவை எளிதாக கிடைப்பதை உறுதி செய்ய, 'ஜன்தன்' என்ற திட்டத்தை துவங்கினார். இத்திட்டத்தின்படி, பொதுத் துறை வங்கிகளில், பூஜ்ய இருப்புத் தொகை உடைய வங்கிக் கணக்குகளை துவங்க முடியும். கடந்த செப்., நிலவரப்படி, ஜன்தன் திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளில், 54.55 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இவற்றில், 14.28 கோடி வங்கிக் கணக்குகள், அதாவது, 26 சதவீத கணக்குகள் செயல்படாத நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக, பாங்க் ஆப் இந்தியாவில், 33 சதவீதம்; யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், 32 சதவீத வங்கிக் கணக்குகள் செயல்படாத நிலையில் உள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், 2024 செப்டம்பரில், 19 சதவீதமாக இருந்த செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, கடந்த செப்டம்பரில், 25 சதவீதமாக அதிகரித்து உள்ளது. பொதுத் துறை வங்கிகளில், ஜன்தன் வங்கிக் கணக்குகளுக் கும், ரூபே கார்டு வழங்கலுக்கும் இடையேயான இடைவெளி, 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்படி, மொத்த 54.55 கோடி வங்கிக் கணக்குகளில், 37.53 கோடி வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூபே கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. 17.02 கோடி வங்கிக் கணக்குகளுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Muthukumaran
அக் 22, 2025 18:20

பணப்பறிமாற்றத்திற்கு வாய்ப்பில்லாதிருந்தால் என்ன செய்வது. மீண்டும் குறைந்த பட்ச இருப்புக்கு அபராதம் வேறு.


spr
அக் 22, 2025 17:36

ஜன்தன் திட்டம் தோல்விக்கு காரணம் அதன் நடைமுறை செயல்பாடுகள்தான் இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவை இல்லை. ஆனால் பல வங்கிகளில் வருமான வரி அட்டை கேட்கப்படுகிறது. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதை வைத்து நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். என்று சொன்னாலும், மாநில அரசு கொடுக்கும் மழை வெள்ள கால இழப்பீட்டுச சலுகைகள் கூட வங்கியின் மூலம் செலுத்தப்படாத நிலையில் வருமானமே இல்லாதவன் எதற்கு வருமான வரி அட்டை வைத்திருக்க வேண்டும்? எப்படி ஏ.டி.எம் பயன்படுத்த முடியும்? ஆனால், ஏழைகளுக்காக துவங்கப்பட்ட இந்த கணக்கில் இந்திய அரசு 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது இந்த கணக்குகளில் மட்டும் 87,000 கோடி ரூபாய் சட்டவிரோதமான பணம் வைப்பு வைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. பொதுவாக இந்தியாவின் நடுத்தர வர்கத்துப் பிரிவினர் சிலரைத் தவிர இதர மக்களும் பல வழிகளிலும் கடன் பெறுவதற்காக மட்டுமே வங்கிகளை நாடுகிறார்கள் கோவிட் வந்த பிறகு, டாஸ்மாக் தாக்கத்தால், சேமிப்பு குறைந்து வாங்கிப் பயன்பாடு குறைந்து போனதுவும் ஒரு காரணம்


RAMAKRISHNAN NATESAN
அக் 22, 2025 13:45

அதாவது வங்கிக்கணக்குகளை நிர்வகிக்கத் தெரியாத அப்பாவி ஏழைகளின் பணம் அரசின் கையில்.... இனிமே என்ன சுருட்டல்தானே ?


Rengaraj
அக் 22, 2025 12:44

அனைத்து வங்கிகளும் மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவதற்கு எல்லா உதவிகளையும் செய்துவருகின்றன. ஆனால் குறைந்தபட்ச இருப்புத்தொகை வங்கிக்கு வங்கி, ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. இன்று வங்கிக்கு தினமும் செல்ல அவசியம் இல்லாமலேயே ஒருவர் தனது வங்கிக்கணக்கை தொடர்ந்து இயக்கமுடியும். அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தை வங்கித்துறை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. அரசு தனது பணத்தை நேரடியாக மக்களுக்கு வழங்குவதற்காகவே வங்கி கணக்கையும், தொலைபேசி எண்ணையும் வங்கிக் கணக்கில் இணைப்பதற்கு நிர்பந்தப்படுத்த்தியது. ஆனால் அந்த கணக்கை தொடர்ந்து இயக்குவதற்கு மக்கள்தான் முன்வரவேண்டும். மக்கள் வங்கியை கண்டு பயப்படாமல் இருக்கும் அளவுக்கு வங்கிகளும் சேவைகளை தரவேண்டும். மக்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் தங்களது திட்டங்களை விளக்க தகுந்த பணியாளர்களை அமர்த்தவேண்டும். இது ஒருவர் மட்டுமே மாற்றக்கூடிய விஷயம் அல்ல. ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி. எப்படி ஜீ பே, போன் பே உபயோகிக்கப்படுகிறதோ அதே போன்று ஜன்தன் கணக்குகளுக்கு க்யூ ஆர் கோட் பிரிண்ட் செய்யப்பட்ட ரூபே கார்டுகளை வழங்கி அதை அனைத்து சில்லறை வர்த்தக பரிவர்தனைகளிலும் ஈடுபடுத்த அரசு முயற்சிக்கலாம். ஓ.டீ. பி மூலம் கார்டு வைத்திருப்பவர் பணம் செலுத்துவதை அங்கீகரிப்பதன் மூலம் பரிவர்த்தனையை உறுதிப்படுத்த வழி செய்யலாம். மொபைல் போன் இல்லாமலும் பணபரிவர்தனைகளை மேற்கொள்ளும் வண்ணம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவேண்டும்.


திகழ்ஓவியன்
அக் 22, 2025 12:29

அப்படியா இந்த தொகையில் தான் ஏழை கார்பொரேட் களுக்கு BADDEBTS WRITEOFF செய்தார்கள் அப்போ ஏதோ பிரச்னை இருக்கு , வெள்ளை அறிக்கை வேண்டும்


jss
அக் 22, 2025 13:36

உங்களை பொன்றவரகளின் ஆதரவு திமுக போன்ற கட்சிகளுக்கு இருப்பதுதான் தமிழகததின் மிகப்பெரிய ஆபத்து


Venugopal S
அக் 22, 2025 11:51

ஜன்தன் திட்டம் வெற்றி பெறும் வரை பாஜகவின் சாதனை. இதுபோல் ஏதாவது நடந்தால் அதற்குக் காரணம் காங்கிரஸ், திமுக,டாஸ்மாக் என்று ஏதாவது உருட்டி விட்டுப் போக வேண்டும்!


Rathna
அக் 22, 2025 11:04

மக்களுக்கு டாஸ்மேக் தண்ணி அடிப்பது, பணம் கட்டி மொபைலில் கேம் விளையாடி பணத்தை தொலைப்பது, போதை பொருள் அடிப்பது, வட்டிக்கு கடன் வாங்கி சாகும் வரை வட்டி கட்டி வீழ்வது, திருடனிடம் சீட்டு கட்டி பின்னால் போலீஸ் ஸ்டேஷன் முன்னால் போய் அழுவது, இருக்கிர பணத்தை எல்லாம் தொலைத்து விட்டு நடுத்தெருவில் நிற்பது போன்ற செயல்களில் உள்ள ஆர்வம் சேமிப்பதில் இல்லை என்பது தான் உண்மை. இந்த மக்களையும் அவர்கள் ஏழ்மையையும் யாராலும் மாற்ற முடியாது.


Krishna
அக் 22, 2025 09:53

Abolish All AadharBased Citizen Services incl BankAccounts as Billions of Foreign Infiltrators are Using them incl 90%UnDue Bribing Freebies-Concessions etc etc Denied to NativeCitizenServices compel NRC AND Due to Extensive WideSpread Misuse of Powers& MegaLoots by All RulingAllianceParties& Stooge Officials esp Police, Bureaucrats,Judges


அப்பாவி
அக் 22, 2025 09:27

அம்மாடியோவ். இதுக்குத்தானே மெடல் குத்திக்கொண்டாய்..


GMM
அக் 22, 2025 08:05

ஜன் தன் மக்கள் நல திட்டம் தான். ஜீரோ பாலன்ஸ் என்றால் பராமரிக்க மாட்டார்கள். UPI - குறைந்த விலை செல் போன் கொடுத்து, பாஸ் புக், பண அட்டை நிறுத்தி செலவை குறைக்க வேண்டும். நடமாடும் வங்கி வசூல் மாதம் ஒரு நாள். பண பரிவர்த்தனை 100 சதம் எங்கும் இருக்க கூடாது. இலவசம் ஒழிக்க வேண்டும். பஸ் ஏறும் உடல் தகுதி பெற பஸ் கட்டணம் போல் நூறு மடங்கு சம்பாதித்து இருக்க வேண்டும். பின் ஏன் இலவசம். நீதிபதி தான் இலவசம் நிறுத்த வேண்டும். உணவு மானியம் பெற்றால் பள்ளி போன்ற பொது இடங்களை ஒரு நாள் சுத்தம் செய்ய வேண்டும். இலவச கல்வி 10 வகுப்பில் பெற்றால் 2 பேருக்கு 5 முதல் 1 வகுப்பு கல்வி பள்ளி விடுமுறை நாளில் இலவச மாணவர் போதிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை