விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தில், அதிவேகமாக வந்த வாகனம் மோதி, ஸ்கூட்டரில் சென்ற இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் நைமண்டி காகித தொழிற்சாலை ஊழியர்களான விக்கி,25, அபய்,20, ஆகிய இருவரும் நேற்று காலை ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்றனர். அப்போது, அதிவேகமாக வந்த வாகனம் ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. துாக்கி வீசப்பட்ட இருவரும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இரு உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர் . இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.