உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் விஷ சாராய பலி 21ஆக அதிகரிப்பு

பஞ்சாப் விஷ சாராய பலி 21ஆக அதிகரிப்பு

அமிர்தசரஸ் : பஞ்சாபில், விஷ சாராயம் குடித்த 21 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக, முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பங்கலி, படல்புரி, மராரி கலான், தெரேவால், தல்வண்டி குமான் ஆகிய ஐந்து கிராமங்களில், விஷ சாராயம் குடித்த 21 பேர், நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.

தகவலறிந்த போலீசார், ஐந்து கிராமங்களுக்கும் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். விஷ சாராயம் விற்பனை செய்த முக்கிய குற்றவாளியான பிரப்ஜித் சிங் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் கூறுகையில், 'பங்கலி, படல்புரி உள்ளிட்ட கிராமங்களில், விஷ சாராயம் அருந்திய நபர்கள் உயிரிழந்து வருவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக இது குறித்து விசாரித்தோம். 'விஷ சாராயத்தை விற்பனை செய்த முக்கிய குற்றவாளி பிரப்ஜித் சிங், அவரது கூட்டாளி சஹாப் சிங் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளோம். 'அமிர்தசரஸ் உட்பட மாநிலத்தின் வேறு எந்த பகுதியிலாவது விஷ சாராயம் விற்கப்படுகிறதா என விசாரித்து வருகிறோம். இதை விற்பனை செய்வோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.இந்த விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், சிரோன்மணி அகாலி தளம் தலைவருமான சுக்பீர் சிங் பாதல், 'காங்., ஆட்சியிலும் இந்த கொடூரம் நிகழ்ந்தது. தற்போதும் நடக்கிறது' என குறிப்பிட்டார்.இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, அமிர்தசரசின் மஜிதா பகுதி டி.எஸ்.பி., அமோலக் சிங், இன்ஸ் பெக்டர் அவ்தார் சிங் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மீனவ நண்பன்
மே 14, 2025 08:51

விளையாட்டு மைதானங்களில் வேடிக்கை பார்க்க நாலு நபர்கள் நின்றிருந்தால் அங்கே ஒரு வாகனத்தில் சரக்கு விற்பனை செய்ய வந்து விடுவார்கள்


bharathi
மே 14, 2025 07:45

Typical copy of TN


மீனவ நண்பன்
மே 14, 2025 04:59

விடியல் ஆட்சியில் செத்திருந்தா பத்து லட்சம் கிடைத்திருக்கும்


Palanisamy Sekar
மே 14, 2025 04:08

இண்டி கூட்டணி தலைவர்கள் இதில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அப்பாவிகளின் ஊதியங்களில் சாராயம் விற்று ஆட்சி நடந்தும் அவலம் இங்கே தான் அதிகம். ஆழ்ந்த அனுதாபங்களோடு முடித்துக்கொள்வார்கள் ஆட்சியில் இருப்போர். அதிலும் இந்திய அளவில் எங்களது ஸ்டாலின் ஆட்சியில் நடந்ததைப்போல 68 பேர் சாகவிலைலயே..இதில் கூட எங்கள் தானைத்தலைவர் ஸ்டாலின் ஆட்சியை முந்த முடியவில்லை. இதில் கூட எங்கள் ஸ்டாலின் ஆட்சிதான் முதன்மை மாநிலம் என்று பெருமையோடு சொல்வேன்.


Kasimani Baskaran
மே 14, 2025 03:42

அதெப்படி இது மட்டும் விஷ சாராயமாகியது - எத்தனால் கலந்த சாராயம் என்றுதானே இருக்கவேண்டும்? ஓ அது திராவிட பாரம்பரியம் - இது சிங் பாரம்பரியம்... வெளங்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை