உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. பிஜாப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=niobcgl8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டெக்மெட்லா கிராமத்திலுள்ள வனப்பகுதியில் 7 பேரும், பெல்சார் கிராமத்தில் 6 பேரும், கண்டாகர்கா கிராமத்தில் 9 பேரும் என மொத்தம் நக்சலைட்டுகள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்ட நக்சல்களிடமிருந்து துண்டுப்பிரசுரங்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

c.mohanraj raj
ஏப் 18, 2025 01:21

இவ்வளவு பெரிய அளவில் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள் என்றால் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பின்னணி இல்லாமல் இருக்க முடியாது அந்தக் கட்சியை சேர்த்து அளிக்க வேண்டும் அப்பொழுதுதான் நக்சல் ஒளியும்


Nada Rajan
ஏப் 17, 2025 18:50

சத்தீஸ்கரில் நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்


Nada Rajan
ஏப் 17, 2025 18:49

நல்ல முயற்சி பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக்கள்


Nada Rajan
ஏப் 17, 2025 18:34

பாதுகாப்பு படையினர்களுக்கு வாழ்த்துக்கள்... நல்ல முயற்சி நல்ல நடவடிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை