உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்துக்கு 3 கோடி ஸ்மார்ட் மின் மீட்டர் ஒதுக்கீடு: ராஜ்யசபாவில் அமைச்சர் தகவல்

தமிழகத்துக்கு 3 கோடி ஸ்மார்ட் மின் மீட்டர் ஒதுக்கீடு: ராஜ்யசபாவில் அமைச்சர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; தமிழகத்துக்கு 3 கோடி ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று ராஜ்யசபாவில் மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறி உள்ளார்.இதுகுறித்து ராஜ்ய சபாவில் கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு;நாடு முழுவதும் 2025ம் ஆண்டுக்குள் 25 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, கடந்த நவ.29ம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் 73 லட்சம் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக 19.79 கோடி மீட்டர்கள் பொருத்த அனுமதி தரப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மட்டும் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. திரிபுராவில் 5.47 லட்சம், ராஜஸ்தான் 1.42 கோடி, பஞ்சாப் 87.84 லட்சம் மீட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் இந்த மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மீட்டர்கள் இதுவரை பொருத்தப்படவில்லை.இதேபோன்று நாகலாந்து (3.17 லட்சம்), மேகாலயா (4.60 லட்சம்), மிசோரம் (2.89 லட்சம்) ஜார்க்கண்ட் (13.41 லட்சம்), கேரளா (1.32 கோடி), அருணாச்சலபிரதேசம் (2.87லட்சம்), கோவா (7.41லட்சம்) மின் மீட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. தமிழகம், திரிபுரா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்று இந்த மாநிலங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் வீடுகளில் பொருத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
டிச 17, 2024 10:47

ஸ்மார்ட் மீட்டர் வைத்தால் ரீடிங் எடுக்க ஆள் தேவையில்லை. நேரடியாக செல்பேசிக்கு பில் விவரங்கள் வந்துவிடுகின்றன. ஆனாலும் மாதாந்திர பில் அனுப்புவதில்லை.( இருமாத பில் தான் வருகிறது). அது தேர்தலுக்காக அவிழ்த்துவிட்ட திராவிட மாடல் பொய் வாக்குறுதி.


sridhar
டிச 17, 2024 10:07

திமுக ஒரு கால் ஒடிந்த கோடி .


ராமகிருஷ்ணன்
டிச 17, 2024 10:05

ஏற்கனவே விடியாத விடியலின் மீட்டர் வந்த பிறகு கட்டணம் 2 மடங்காக அதிகரித்துள்ளது. இப்ப புது மீட்டரா?


GMM
டிச 17, 2024 09:56

தமிழகத்திற்கு 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் மத்திய அரசு ஒதுக்கீடு. ஆனால் இதுவரை பொருந்தவில்லை. எப்படி பொருத்தும். 3 கோடி மீட்டருக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் போச்சு? ஊழியர்களை எளிதில் வேலை வாங்க முடியாது. பல பிரச்சினை உள்ள வீடுகள் அதிகம். குடியிருப்பு அதிகம். உரிய முறையில் மாட்ட வில்லை என்றால், அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கை கொடுத்து பயன்? வீட்டு உரிமையாளர் அறிந்து அவர்களிடம் நேரடியாக கொடுங்கள். சொந்த செலவில் பொருத்தி கொள்வர். இணைப்பு மட்டும் மின் வாரியம்.


Sivagiri
டிச 17, 2024 09:39

ஓஹோ அது ஒங்க வேலைதானா? எல்லாம் த்ராவை மாடல்னு நினைத்தார்கள், ஆனாலும் நீங்க குடுத்தாத்தத்தை யூஸ் பண்ண முடியாது, அப்புறம் எங்க சாக்கு எப்படி ரொம்பும்? அதெல்லாம் கொஞ்ச நாள் அப்டியே வச்சிருந்து, துருபிடிச்சப்புறம், உங்களுக்கே திருப்பி அனுப்பிடுவோம், நீங்க கொடுத்த மீட்டர்லாம், தரமற்றவை என்று மீடியாவில் போட்டு விட்டு, நாங்க எங்க மாடல் கம்பெனில வாங்கி அதுல ஒரு லாம்ப் அமௌண்ட்டை பாக்கணுமா இல்லையா ? . . அதான் த்ராவை மாடல்னு தெரியாதா ? ,


பாமரன்
டிச 17, 2024 08:02

எதாவது சொல்லனும்னு ஸ்டேட்மெண்ட் விட்ட மாதிரி இருக்கு... இவை வீடுகளில் பொறுத்தன்னா மூன்று கோடி வீட்டு கனெக்சன் தமிழ் நாட்டில் இருக்கா என்ன? மேலும் மின் மீட்டர் பொருத்துவது மற்றும் அவற்றை நிர்வகிப்பது அந்தந்த பகுதிகளில் செயல்படும் மின் விநியோக சேவைகள் செய்யும் நிறுவனங்கள் செய்வது. இதுல என்ன மத்திய அரசு அலாகேட் செய்யறதுக்கு இருக்கு? சொம்மா டைம் பாஸ் பண்ண ஒரு நியூஸ் அவ்ளோ தான்....


veera
டிச 17, 2024 09:09

பாமரன் தமிழ் நாட்டு மக்களுக்கு இப்போ என்ன சொல்ல வர


பாமரன்
டிச 17, 2024 11:03

வீரா... உனக்கு என்ன புரிஞ்சிது இந்த நியூஸ்லன்னு சொல்லு


Minimole P C
டிச 17, 2024 07:54

TN always lag in implementing good things like introduction of ombudsman in local administration to monitor the corruption at local bodies after 18 years since the Kerals the pioneer introdroduced in 1996, that too a toothless ombudsman headed by a corrupt IAS officer, whereas it is be headed by a well known retired HC judge, despite the hard goarding by the central Govt.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை