உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 ஆண்டில் நக்சலைட் தாக்குதல் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமித்ஷா பேச்சு

3 ஆண்டில் நக்சலைட் தாக்குதல் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமித்ஷா பேச்சு

கவுஹாத்தி: ''பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் அடுத்த 3 ஆண்டுகளில் நக்சலைட் தாக்குதல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். அசாம் மாநிலம் தேஜ்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: கடந்த 9 ஆண்டுகளில், எல்லை பாதுகாப்பு படையினர் நலனுக்காக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். நட்பு நாடுகளான நேபாளம் மற்றும் பூட்டானின் எல்லையைப் பாதுகாப்பதோடு, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களில் நக்சலைட் தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில், சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், போலீசார் ஆகியோர் ஒன்றிணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவர்களின் துணிச்சல்கள் பற்றி நக்சல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யும் போது தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் அடுத்த 3 ஆண்டுகளில் நக்சலைட் தாக்குதல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

RAMAKRISHNAN NATESAN
ஜன 21, 2024 14:11

திமுக அன்றும் இன்றும் நகர்ப்புற நக்ஸல்களை வளர்த்து வருகிறது ........ என்றும் அது தொடரவும் செய்யும் ..... அதனுடன் நீங்க ஐந்தாண்டுகள் கூட்டணியே வைத்தீர்கள் .....


NicoleThomson
ஜன 21, 2024 06:07

தென்மாநில அவுரங்கசீப்பிடம் இருந்து எங்களுக்கு எப்போ விடிவுகாலம்


வெகுளி
ஜன 21, 2024 01:00

2026ல் தலைவர் அண்ணாமலையின் ஆட்சியில் தமிழகத்தில் அர்பன் நக்சல்கள் கொட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும்...


RAMAKRISHNAN NATESAN
ஜன 21, 2024 14:35

அர்பன் நக்சல்களின் கூடாரமே திமுகதான் ....... பாஜக அதனுடன் சேர்ந்து பொங்கி தின்னாச்சு ....... முரசொலி மாறனும் இலாகா இல்லாத மந்திரியாக பாஜக அமைச்சரவையில் தொடர்ந்தவர்தான் ...... தனக்குன்னு வந்தா பாஜக சட்டம் ஒழுங்கையோ, அரசியல் நாகரீகத்தையோ, மரபையோ பார்க்காது .......


g.s,rajan
ஜன 21, 2024 00:52

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அடி போடுகிறார்,அஸ்கு ,புஸ்கு ....


A1Suresh
ஜன 21, 2024 00:44

பிற்படுத்தப்ப்ட்டோர், பட்டியலினத்தவர், காட்டுவாசிகள் என்று அனைவரும் தரித்திரம் நீங்கி ஆட்சி -அதிகாரம்-பொருளாதார ரீதியில் முன்னேறி விடுவதால் தீவிர பயங்கர நக்சலைட் காரியங்களை துறந்துவிடுவார்கள் என்று பொருள். இது "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது" என்ற பாட்டை விட புரட்சிகரமானது இந்த செயல். இன்னும் மூன்று வருடங்களில் பாரதம், உலகின் மூன்றாம் பொருளாதார வல்லரசாகி விடும் . வாழ்க மோடிஜி. வாழ்க அமித்ஷாஜி. முதலில் கஷ்மீர் பிரச்னை முடிந்தது. இன்னும் சீ.யே.யே , ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற திட்டங்கள் நடந்தால் மட்டுமே சாத்தியம்


g.s,rajan
ஜன 20, 2024 23:51

In the Past 10 years ....???.


Ramesh Sargam
ஜன 20, 2024 23:50

அதற்கு முன்பு அவர்களுக்கு, நேர்முகமாக, மறைமுகமாக உதவுபவர்களை கண்டறிந்து, முதலில் அவர்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.


g.s,rajan
ஜன 20, 2024 20:58

பி.ஜே.பி பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பொழுது உலகத்தில் உள்ள எல்லா நாடுகளை எல்லாம் ஒன்று விடாமல் சுற்றியாச்சு இப்போ தான் இந்தியாவைப் பற்றிய ஞாணோதயம் வந்திருக்கு ...,ஆச ,தோச அப்பளம் வட....


அப்புசாமி
ஜன 20, 2024 15:43

மூன்று மூன்று ஆண்டுகளுக்கு இவ்வாறு சொல்லப்படும்.


babu
ஜன 20, 2024 15:12

அடுத்த 3 வருஷமா 10 வருஷமா என்ன பண்ணீங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை