வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஏர் இந்தியாவை அம்பானியிடம் கொடுத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
ஏர் இந்தியாவை நடத்த கேம்பெல் வில்சன்னு ஒரு வெளிநாட்டு ஆளைப் போட்டு அந்நிய அடையாளங்களை அழிக்கிறாங்கோ. அதான் சாப்பாட்டில் கூட இந்திய கரப்பான் பூச்சி போட்டிருக்காங்கோ.
விமானப்பயணம் மேற்கொள்ளும் கனவான்களே. பயணத்தில் உள்ள குறைகளை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தெரியப்படுத்துங்கள். உங்களின் விரும்பத்தகாத அனுபவத்தை விவரித்து நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். இப்படி கக்கூஸ் சுவற்றில் கிறுக்கி நாறடிக்காதீர்கள். அந்த நாட்டு விமான கம்பெனி சூப்பர், இந்த நாட்டு கம்பெனி சூப்பர் என்று வெளிநாட்டு விமான கம்பெனிக்கு பஜனை போடாதீர்கள். பல்லாயிரக்கணக்கான கோடி நஷ்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகும் நிலைக்கு தள்ளப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் பல தடைகளை தாண்டி டாடா குழுமத்துக்கு வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத உள்ளே இருக்கும் பழைய ஊழியர்களே ஏர் இந்தியாவுக்கு கெட்ட இமேஜை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். போட்டி நிறுவனங்கள் அதை சர்வதேச நியூஸாக்கும். இந்தியாவின் கலைசிறந்த டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை 2022 ஜனவரி வாங்கியது. அன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை பழைய ஊழியர்களை நீக்க கூடாது என்று ஒரு ஒப்பந்தம் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஜனவரி 2025 க்கு மேல் உள்ளே இருக்கும் கருங்காலிகளை காலி செய்துவிட்டால் ஏர் இந்தியா நிறுவனம், டாடா குழுமம் போல் நிச்சயம் இந்தியாவின் ஒரு பிராண்ட் ஆகும். எழுதி இதுக்கொள்ளுங்கள் 2030 ஆம் ஆண்டில் உலகின் டாப் 5 விமான நிறுவனங்களில் ஏர் இந்தியா நிச்சயம் இருக்கும்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில்தான் பயணித்தேன். சென்னை விமான நிலையம் வந்ததும் எனது லக்கேஜ் வருவதற்கு ஒருமணி நேரம் வரை காத்திருந்தேன். நள்ளிரவு வேறு. இறுதியில் வந்தது ஒரு பிளாஸ்டிக் பை. அதனை தவிர வெறும் எதுவுமே வரவில்லை. அங்கிருந்த ஏர் இந்திய ஊழியரிடம் விசாரித்தேன். அவர் அந்த பையை திறந்து பார்த்துவிட்டு அதில் உள்ள சூட்கேஸை காட்டினார். ஆம் அது என்னுடையதுதான். லாக்கை உடைத்து பொருட்கள் எல்லாம் கீழே கிடந்தது. அந்த சூட்கேசில் எனது ஆடைகள் மற்றும் எனது சில பைல்களும் இருந்தன. எல்லாமே நீரில் நனைந்திருந்தன. அங்கிருந்த ஏர் இந்திய ஊழியர்களிடம் கேட்டால் ஒருவருக்கு கூட சரியான பதில் சொல்ல தெரியவில்லை. பொறுப்பான அதிகாரி என்று யாருமே அங்கே இல்லை. சப்தம் போட்ட பிறகு எங்கிருந்தோ ஒருவர் வந்து ஒரு மெல்லிய தாளை கொடுத்து அதில் எனது புகாரை எழுதி தரும்படி கேட்டார். கொடுமையாக இருந்தது. பசிவேறு . அந்த கொடுமையான நேரத்தை இனி என்வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று வேண்டிக்கொண்டேன். இதுவரை எழுதி கொடுத்த புகாருக்கு பதில் ஏதும் வரவே இல்லை. ஆடைகள் வீணாகியிருந்தது. என் செய்வது. டாட்டா காட்டிவிட்டது டாடா நிறுவனம். உலகில் மிக மோசமான விமான சேவையில் தொடர்ந்து ஏர் இந்தியா பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. டாட்டா நிறுவனத்தின் சாதனை.
அரசாங்கம் கையிலிருந்து தற்போது தான் தனியாரிடம் வந்துள்ளது ஏர் இந்தியா...அரசு வேலை செய்யும் அனைவரும் தாங்கள் தான் நாட்டின் ராஜா என்பது போலவே வாழ்கிறார்கள்...தனியார் வசம் வந்தபின் தற்போது சற்று பரவாயில்லை
டாடா வாங்குவதற்கு முன்னால் பயணம் செய்தேன் ஒரே மூட்டை பூச்சி கடி கொசு வேற கடி மும்பையில் இருந்து சவுதிக்கு வர போதும் போதும் என்றாகி விட்டது கேள்வி பட்டேன் பெருச்சாளி எல்லாம் ஓடுமாம் .இப்பொழுது பயந்து போய் பயணம் செய்வது இல்லை .
வழக்கமா ஷேர் ஆட்டோ போறவங்க எல்லாம் கருத்து போட்டா இப்படித்தான்
2003 இல் இருந்து வெளி நாட்டில் தான் இருக்கிறேன் வருடத்திற்கு மூணு தடவை போயிடு வந்துகிட்டே இருக்கேன் நீங்கள் ஷேர் ஆட்டோவில் போவராக இருப்பதினால் என்னை சேர்க்க கூடாது
ஏர் இந்தியா விமானம் நம் நாட்டு விமானம் அதை நாம் குறை கூற கூடாது ஆனால் அதற்காக நம் பயணத்தில் அசோகரியங்கள் இருந்தால் அதை நாம் சுட்டி காட்ட தவற கூடாது
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்பவர்கள் டாடா வின் நிறுவனம் என்பதால் பிரச்சனை ஒன்றும் இருக்காது என்று நினைத்து பயணம் செய்கின்றனர்.ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் பிரச்சனை அதிகமாகி கொண்டேய இருக்கிறது. இதற்கு பொறுப்பானவர்கள் உடனடியாக தலையிட்டு வருங்காலத்தில் எல்லோருக்கும் இனிதாக பயணத்தை கொடுக்க வேண்டும்.