உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு

தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது.தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், அச்சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தது. பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்திற்கு எந்த வகையிலும் தடை விதிக்கக்கூடாது. சட்டத்திற்கு எதிராக அரசியல் காரணங்களுக்காகவும், இடையூறு செய்யும் நோக்கத்துடனே வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையர்களின் நற்பெயர்ப் பற்றி கேள்வி எழுப்பப்படவில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் கமிஷனர்களின் திறன் குறித்தும் கேள்வி எழுப்பவில்லை. அரசியல் சாசனத்தின்படி பதவி வகிக்கும் நபர்களின் தகுதி குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் மனுதாரர்கள், அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதனால், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மத்திய அரசு பதிலில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

abdulrahim
மார் 21, 2024 09:42

சர்வாதிகாரத்திற்கு முன்னாள் உச்சநீதிமன்றமும் அடிபணிய வேண்டிய துர்பாக்கிய நிலை....


CHARUMATHI
மார் 20, 2024 19:57

Yes correct


sankaranarayanan
மார் 20, 2024 19:53

இந்த வழக்கை நீதிமன்றங்கள் தள்ளுப்படி செய்வதல்லாமல் வழக்கை சுயநல விளம்பரத்திக்காகவும் மத்திய அரசுக்கு கலங்கம் விளைவிக்க எண்ணம்கொண்டதாகவும் கருதி இனி இது போன்ற வழக்குகளை போடுபவர்களுக்கு நீதிமன்ற அலுவல்கள் நேரத்தை வீணாக்குபவர்கள் என்று கூறி ஒரு பெரிய அபராதத்தை கட்டுமாறு உத்திரவு அளிக்க வேண்டும் அப்போதுதான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வரும்


தாமரை மலர்கிறது
மார் 20, 2024 19:44

உச்சநீதிமன்றத்திற்கு வேறுவழியே கிடையாது. அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டியது தான். மத்திய அரசின் சட்டங்களை மீறி நடக்கமுயல்வது ஜனநாயகப்படுகொலை ஆகிவிடும். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் கைகள் அரசியலமைப்பு சட்டப்படி கட்டப்பட்டுள்ளன.


kulandai kannan
மார் 20, 2024 17:30

காங்கிரஸ் ஆண்டபோதெல்லாம் கடைபிடிக்கப்பட்டுவந்த, பிரதமர் பரிந்துரையில் தேர்தல் கமிஷனர் களை ஜனாதிபதி நியமிக்கும் நடைமுறையில், பாஜக ஆட்சி வந்ததும் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டது ஏன்?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி