தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி; திருவிழா கொண்டாட்டத்தில் சோகம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கோகுலாஷ்டமி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=avvvhhmb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோகுலாஷ்டமி பண்டிகையையொட்டி ராமந்தபூரில் உள்ள கோகுலேநகரில் கிருஷ்ணர் சிலை அமர வைக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. தேரை இளைஞர்கள் இழுத்துச் சென்ற போது, தேர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், 9 பேர் மீது மின்சாரம் தாக்கியது, 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிருஷ்ணா யாதவ்,21, சுரேஷ் யாதவ்,34, ஸ்ரீகாந்த் ரெட்டி,35, ருத்ரா விகாஸ்,39, ராஜேந்திர ரெட்டி,15, ஆகியோர் உயிழந்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.