வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐயோ பாவம் இந்த ஆளை சுத்தி சுத்தி அடிக்கிறாங்க
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இன்று (ஏப்ரல் 14) மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான் கான் வசிக்கும் மும்பையின் பந்த்ரா இல்லத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தற்போது இன்று ஓராண்டு கழித்து அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.மும்பையின் போக்குவரத்து துறைக்கு வாட்ஸ் அப் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், ''சல்மான் கானை இல்லத்தில் குண்டு வைத்து கொலை செய்து விடுவோம். வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம்'' என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, பாலிவுட் நடிகருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து பல மிரட்டல்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயோ பாவம் இந்த ஆளை சுத்தி சுத்தி அடிக்கிறாங்க