வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எம்பி எம்எல்ஏ சிபாரிசு கடித தரிசனம் நியாயமற்றது. விஐபி க்கள் அவரவர் ஊர் ஆலயங்களிலேயே வழிபாடு செய்யலாம்.
செயற்கை நுண்ணறிவு என்பது உணர்ச்சியில்லாதது. மனிதனைப்போல சிந்திக்க முயலுமே தவிர - முழுவதும் சாத்தியமில்லை. கூட்டம் அதிகம் வரும் என்பதை அது சொல்லவில்லை என்றால் இவர்கள் என்ன செய்வார்கள்?
நாயுடு அவர்கள் முதலில் இந்த VIP, VVIP மற்றும் சிபாரிசு தரிசனத்தை நிறுத்தவேண்டும். அப்படி நிறுத்தினாலே, மற்ற பொதுவான பக்தர்களுக்கு சிரமமில்லா தரிசனம் கிடைக்கும்.
ஐயா, உங்கள் கோரிக்கை நடைமுறை சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது என்பது என் தாழ்வான அபிப்பிராயம். ஒரு VVIP எப்படி கூட்டத்துடன் வரிசையில் சில மணி நேரம் இருக்க முடியும்? கூட்டத்தில் நெரிசல் ஏற்படுமே அதில் சில பலருக்கு காயம் ஏற்படுமே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அவருடன் கூட இருப்பார்களே அது மற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அச்சுறுத்துமே எனவே தனித்தனி நடைவரிசை இருப்பது நல்லதே. என் கருத்திற்கு எதிர்மறை கருத்து இருப்பின் தயவு செய்து பதிவு செய்யவும்.
திரு வாசன் ஐயா அவர்களுக்கு, ஹைதெராபாத் நகரம் அருகில் சிலுகூர் பெருமாள் கோவில் உள்ளது. அதற்கு விசா பெருமாள் கோவில் என்றும் ஒரு பெயர். ஏன் என்றால் அந்த கோவில் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு நூறுமுறை வலம் வந்தால் விசா கிடைக்கும் என்று நம்பிக்கை பக்தர்களிடையே. நாம் நம் விஷயத்துக்கு வருவோம். அந்தக்கோவில் வெளியே ஒரு நோட்டீஸ் போர்டு இருக்கும். அதில் இந்த கோவிலில் VIP, VVIP தரிசனம் கிடையாது. எல்லோரும் ஒரே கியூவில் வந்து தரிசனம் செய்யவேண்டும் என்று எழுதியிருக்கும். கோவில் நிர்வாகமும் அதை மிகவும் கடுமையாக நிறைவேற்றுகிறது. ஆகையால் VIP, VVIP தரிசனமுறையை நிறுத்துவது சாத்தியமே. வணக்கம். என் கருத்துக்கு மறுக்கறுத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி.