உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அ.தி.மு.க., உள்கட்சி விவகார வழக்கில் மீண்டும் இடியாப்பம்

அ.தி.மு.க., உள்கட்சி விவகார வழக்கில் மீண்டும் இடியாப்பம்

புதுடில்லி : அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல், எந்த முடிவும் எடுக்கக்கூடாது எனக் கோரி, பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., உள்கட்சி விவகாரத்தில் மீண்டும் இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட, அ.தி.மு.க., உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது; தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய பழனிசாமியின் மனுவையும் தள்ளுபடி செய்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5j2c4o3x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதிகாரம் இல்லை

தீர்ப்புக்குப் பின் பேட்டியளித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 'உள்கட்சி விவகாரங்களை விசாரிக்க, தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. 'கட்சியின் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் செய்து, அதன் விபரங்களை தெரிவித்தால். அதை அப்படியே ஏற்கும் குமாஸ்தா பணி தான் தேர்தல் ஆணையத்தின் வேலை' என, கூறியிருந்தார்.இச்சூழலில், பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இரட்டை இலை சின்னம் குறித்தும், தேர்தல் ஆணையம் விசாரிக்க இருப்பது சிக்கலை ஏற்படுத்தலாம்; இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என்ற அச்சம், அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பன்னீர் செல்வம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அதில், 'அ.தி.மு.க., உள்கட்சி விவகாரம் தொடர்பான, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, யாரேனும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால், எங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பின்னரே, எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், 2022 ஜூனில் பழனிசாமி -- பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது.

பிரச்னை தீரவில்லை

இரு தரப்பும் நீதிமன்றம் செல்ல, அ.தி.மு.க., உள்கட்சி விவகாரம், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. அதில், அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், பழனிசாமி பொதுச்செயலராக தேர்வான பின்னும் பிரச்னை தீரவில்லை. இந்நிலையில், உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க, உயர் நீதிமன்றத்தால் அனுமதி தரப்பட்டுள்ளது. அதற்கு உச்ச நீதிமன்றம் சென்று, பழனிசாமி தடையுத்தரவு பெற்று விடக்கூடாது என்பதால், பன்னீர்செல்வம் முந்திக் கொண்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 14, 2025 21:50

நன்றி பேசும் தமிழன். ஆனால் இதை நான் சொல்லல.


venugopal s
பிப் 14, 2025 21:45

இப்படி எல்லாம் மிரட்டி, பயமுறுத்தி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுக ஆதரவாளர்களே பாஜக கூட்டணிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்!


Ramalingam Shanmugam
பிப் 14, 2025 17:13

இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது வருமான வரி துறை லஞ்ச ஒழிப்பு துறை என்ன பண்ணுது கோடி கணக்கில் செலவாகிறது யார் கொடுக்கிறார்கள்


krishna
பிப் 14, 2025 17:07

DEAD BODY ADMK 3NNUM UNNADHA MANIDHAR MGR URUVAAKIYA KATCHIYAI SUDUKAATUKKU ANUPPAMAL THOONGA MAATAR ENA THONDRUGIRADHU.


visu
பிப் 14, 2025 15:35

சரியோ தவறோ ops க்கு இழைக்கப்பட்டது அநீதி அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டு தேர்தலில் நிக்க விடாமல் செய்தனர் EPS பொது செயலராம்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 14, 2025 12:04

இரட்டை இலை விவகாரத்தை மீண்டும் எடுத்து போட்டு இ பி எஸ் க்கு பாஜக டென்ஷன் குடுக்கிறது. கூடவே ஓ பி எஸ் ஸை யும் பாஜக கிளப்பி விட்டு தலைவலியும் குடுக்கிறது. இந்த பிராசஸ் ஸில் அதிமுக, பாஜக இரண்டு கட்சிகள் மீதும் மக்களுக்கு வெறுப்பு உருவாகிறது. அதிமுக வை பாஜக தான் அழிக்கப் பார்க்கிறது. பாஜக பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது.


krishna
பிப் 14, 2025 17:08

OK EERA VENGAAYAM 200 ROOVAA OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN UN DNAATHAM PIDITHA TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI DRAVIDA MODEL AATCHI JAIKK7MAAVENBADHU PATHI YOJI.THOOTHAA 200 ROOVAA VOOLIE CUT JAAKIRADHAI.EPPODHUM MODI VERI BAYAM INDHA KEVALA JENMATHUKKU.


பேசும் தமிழன்
பிப் 14, 2025 18:50

ஆமாம்... திருட்டு மாடல் ஆட்கள் ஒன்றும் செய்யவில்லை.... வைகுண்டம் அவர்கள் சொன்னால் சரியாக தான் இருக்கும் ???


R.PERUMALRAJA
பிப் 14, 2025 12:00

ஆ தி மு க விற்கு நீதி மன்றம் மூலம் வரும் பிரச்னைகள் அனைத்தின் பின்னணியில் பா ஜா கா இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும், இதை EPS பிரச்சாரம் மூலம் கொண்டு சென்று சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்துவது சிறந்தது, பன்னீர் பா ஜா கா ஆள் என்று என்றோ உறுதியாகிவிட்டது, அவர் மூலம் வரும் நீதிமன்ற வழக்குகளும் பா ஜா கா தான் என்று மேலும் உறுதியாகிவிட்டது இதை மக்களும் நன்கு அறிவர், chess விளையாட்டில் எங்கோ ஒரு நகர்வை நகர்த்துவது போல இருக்கும் நகர்த்திய பின் ராஜாவுக்கு cheque என்பார்கள், ஆ தி மு க வை அழிக்க நினைக்கும் தி மு க , பா ஜா கா விற்க்கு மறைமுகமாக பல இடங்களில் பல வழிகளில் உள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுக்கிறது , கொடுத்தபின் , ஏதோ silentmode இல் இருப்பது போல பாவலா காண்பிக்கிறது , இதை அறியாமல் ப ஜா கா ஆட்டத்தை ஆரம்பிக்கிறது ஆ தி மு க விற்கு எதிராக நீதிமன்றம் வாயிலாக ..எந்த பிரச்னை வந்தாலும் சரி , மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்னையுடன் இந்த பிரச்சனையையும் EPS மக்கள் முன் நாள்தோறும் கொண்டு செல்வாராயின் பா ஜா கா - தி மு க மறைமுக கூட்டணியிற்கு சங்கு தான்


M.COM.N.K.K.
பிப் 14, 2025 10:47

ஓ பி எஸ் அவர்களை வில்லன் என்று சொன்னால் சசிகலாவின் ஆதரவில் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து அவரையே கட்சியை விட்டு நீக்கியது எப்படி இதை எப்படி அழைப்பது. எடப்பாடி பழனிசாமியை வில்லனுக்கு வில்லன் என்று அழைப்பதுதான் சரியாக பொருந்தும். பழனிசாமியால் மட்டுமே கட்சி அழிந்துகொண்டுள்ளது இதுதான் உண்மை தான்தான் பெரியவன் என்ற ஆணவத்தால் மக்கள் திலகம் கட்சி அழிவின் விளிம்பில் உள்ளது.2026 ஆண்டு இதற்கு கண்டிப்பாக விடை கிடைக்கும் பழனிசாமி தனது ஆணவத்தை அகங்காரத்தை விட்டொழித்து கட்சி நலன் காக்க வேண்டும் இதுதான் கட்சியின் மக்கள் திலகத்தின் உண்மையான தொண்டர்களின் விருப்பம்.


Madras Madra
பிப் 14, 2025 10:43

அதிமுக வின் வீழ்ச்சிக்கு காரணம் எடப்பாடி மட்டுமே பாஜக வை குறை சொல்வது பழி போடுவது எல்லாம் கீழான காரணங்கள் பாஜக தவறு செய்து விட்டது உண்மை முதலில் இருந்தே அதிமுக வை கண்டு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும் உதவி செய்ய பொய் கெட்ட பேர் வந்ததுதான் மிச்சம் பாஜக நினைத்திருந்தால் அப்போதே அதிமுக வை அழித்திருக்க முடியும் என்பதே நிதர்சனம் அதை செய்யாமல் விட்டதே பாஜக செய்த தவறு


SaiBaba
பிப் 14, 2025 10:27

இல்லை இட்லி, சட்னி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை