வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நடந்து முடிந்த பெய்ஜிங் மாநாட்டில் சீனா தன் ராணுவப் பலத்தை வெளிப் படுத்தியது குறிப்பாக அமெரிக்காவிற்கு மட்டும் சவால்விட வில்லை. இந்தியாவிற்கும் சேர்த்து விடப்பட்ட மறைமுக சவால். ஒருநாள் இந்த உண்மை தெரிய வரும். இவர் எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் அமெரிக்காவை மட்டும் எச்சரிப்பதில் எந்தப் பயன்களும் கிடைக்கப் போவதில்லை. நாளைய சீனாவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியா இப்போதே தங்களின் ராணுவ பலத்தை மேம்படுத்தி பெருக்கிக் கொள்ள முன்வரவேண்டும்.
இந்தியாவை யார் அந்நியப்படுத்தினார்கள். இந்தியாவில் இருந்து கொண்டு பேச வேண்டாம். அங்குச் சென்று நேரடியாக பேச வேண்டிய இடத்திலிருந்து பேச முடியுமா என்று பாருங்கள்? அப்போதுதான் உண்மைகள் தெரிய வரும், நியாயமும் கிடைக்கும்.
இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்கா கனவுடன் இருப்பவர்கள். நேரடியாய் சொல்வதானால் அமெரிக்கா அடிமைகள். ஆகவே அமெரிக்கா ஒன்றும் கவலைப்படாது.
இக்கருத்துக்கள் எந்த நேர்காணலில் சொல்லப்பட்டதெனத் தெரியவில்லை. ஆனால் அவரளித்த ஒரு பேட்டி அண்மையில் இணையத்தில் வெளியானது. அவற்றில் இது போன்ற கருத்துக்கள் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை .அவர் மிக மென்மையாக நாகரீகமாக அவர் சொல்ல வந்தது இதுதான்.