உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து ராஞ்சியில் ‛இண்டியா கூட்டணி கூட்டம்: ராகுல் பங்கேற்கவில்லை

கெஜ்ரிவால் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து ராஞ்சியில் ‛இண்டியா கூட்டணி கூட்டம்: ராகுல் பங்கேற்கவில்லை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ‛ இண்டியா ' கூட்டணி கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்கவில்லை.ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து அவர் பதவி விலகினார். அதேபோல், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கைதாகி டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனைக் கண்டித்து ஜார்க்கண்டில் ‛இண்டியா' கூட்டணி சார்பில் ராஞ்சியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கெஜ்ரிவால் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, காங்கிரஸ் தலைவர் கார்கே, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர்கள் ராஞ்சி வந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ervar5pv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் இப்பேரணியில் பங்கேற்க மாட்டார் என அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக டில்லியை விட்டு அவரால் செல்ல முடியாது எனக்கூறினார். இதனால் காங்., சார்பில் மல்லிகார்ஜூன கார்கே மட்டும் பங்கேற்கிறார்.இந்தக் கூட்டத்தில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பேசியதாவது: அதிகாரத்திற்கு வர வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ஆசை கிடையாது. நாட்டிற்கு சேவை செய்யவே அவர் விரும்பினார். இந்தியாவை நம்பர் 1 நாடாக மாற்ற முயற்சித்தார். அவரது உணவு முன்பு கேமரா உள்ளது. சிறையில் அவருக்கு இன்சுலீன் வழங்க மறுக்கின்றனர். அங்கேயே அவரை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். கெஜ்ரிவால் தைரியமானவர். சிறையிலும் நாட்டைப் பற்றியே சிந்திக்கிறார். இவ்வாறு சுனிதா பேசினார்.ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: அரசியல்சாசனத்தை முடித்து விடுவோம் என பா.ஜ.,வினர் திரும்பத் திரும்ப பேசி வருகின்றனர். அதனை எழுதியவர் அம்பேத்கர். யாராலும் அழிக்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. நாட்டின் மக்கள் உங்களுக்கு முடிவு கட்டுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Azar Mufeen
ஏப் 22, 2024 08:42

முதல் முறை முதல்வரானதும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றமுடியாமல் போனதற்காக முதல்வர் பதவியை தூக்கி எறிந்த ஒரே நேர்மையான தலைவர் கெஜ்ரிவால் அவர்களே


பேசும் தமிழன்
ஏப் 22, 2024 08:03

ஊழல் செய்வது எங்கள் உரிமை என்று கூறுகிறார்களா.... புள்ளி வைத்த இண்டி கூட்டணி ஆட்கள்???


சுலைமான்
ஏப் 21, 2024 20:21

ராகுலை பப்பு என்று பிணராய் விஜயன் மறைமுகமாக சாடி இருக்கிறார். இன்னுமா நீங்க அந்த பப்புவை நம்பி இருக்கீங்க


J.V. Iyer
ஏப் 21, 2024 18:57

கொள்ளையர்களுக்கு வக்காலத்தா? இவர்களை சிறையில் தள்ளவேண்டும் நாடு குட்டிச்சுவராகி விட்டது


தமிழ்வேள்
ஏப் 21, 2024 18:50

நாளை சிறைக்கு போகும் திருட்டு பயல்கள் இன்று சிறையில் உள்ள திருடர்களுக்கு ஆதரவு இவர்களை விரட்டி வெளுக்க வேண்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 21, 2024 17:50

கூட்டணி ஒற்றுமை சந்தி சிரிக்கிறது வேறு மாநிலங்களில் பிரச்சாரத்திற்கு வரவேண்டாம் என்று திமுகவுக்கு அன்பு வேண்டுகோள் கெஜ்ரிவாலை ஆதரித்து நடக்கும் ராஞ்சி கூட்டத்திற்கு ராகுல் போகாமல் அடம் கர்நாடகாவில் லவ் ஜிகாத் மூடி மறைக்க முயற்சி கொல்கத்தாவில் மம்தா இந்தியா கூட்டணியை துவக்கியது நான்தான் ஆனால் அந்த கூட்டணி வங்காளத்தில் கிடையாது


வாய்மையே வெல்லும்
ஏப் 21, 2024 16:17

போகாத ஊருக்கு வழி தேடும் கூட்டணி இதுல அனேகர் ஊழல் என்பது நாடறியும்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ