உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர்; ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்

பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர்; ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் மூலம் குறைந்தது 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்'' என அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், நேற்று நடந்த தாக்குதல் குறித்து விளக்குவதற்காக, டில்லியில் இன்று (மே 08) அனைத்து கட்சி கூட்டத்தையும் மத்திய அரசு கூட்டியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6lsn57iz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் தலைவர் கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அரசு தரப்பில் இருந்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் பேசினர். இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல் குறித்த விபரங்களை, அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தலைவர்களின் சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.அனைத்துக் கட்சி கூட்டத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: இந்தியா மீது தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தானை திருப்பி தாக்குவோம். இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் மூலம் குறைந்தது 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்னர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது.25 நிமிடம் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு ஸ்கால்ப் ஏவுகணை மற்றும் ஹேமர் குண்டுகள் உட்பட அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷா இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. இந்தியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

India our pride
மே 08, 2025 19:30

இங்கேயும் பல பயித்தியங்கள் எழுத வந்து விட்டது. பாவ மன்னிப்பு மற்றும் மூர்க்க வியாபாரம் செய்யும் பூச்சிகளை கொசு மருந்து அடித்து கட்டுப்படுத்துங்கப்பா


Rock
ஜூலை 01, 2025 17:09

சகோ 1 ஏன் பயித்தியம் என்று சொல்கிறீர்கள்? நீங்கள் மற்றும் நான் செய்த தவறுகளுக்கு யார் தண்டனை கொடுப்பது ? 2 மூர்க்க வியாபாரம் என்று ஏன் சொல்கிறீர்கள் ? 3 நாம் அனைவரும் கணக்கு கொடுக்கும் நாள் மிக அருகில் ... நண்பா


A1Suresh
மே 08, 2025 15:21

காங்கிரஸுக்கு சொல்வது பாக் ஜெனரல் ஆசிம் முநீருக்கு சொல்வதற்கு சமம்


Rock
மே 08, 2025 16:10

சகோ, கலிகாலம் முற்றி விட்டது மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும் ஆகவே, இந்த உலக வாழ்க்கையிலும் நாம் நிம்மதியாக வாழலாம் , வாழ்ந்து விட்டு இறைவனுடன் முடிவில்லாமல் என்றென்றைக்கும் நாம் வாழலாம். இறைவன் நல்லவர்


Barakat Ali
மே 08, 2025 11:52

காங்கிரசிடம் திட்டத்தை விவரிக்க வேண்டிய அவசியமில்லை .....


Raman
மே 08, 2025 12:14

Absolutely. After attacks info only could be shared.. Utmost confidentiality is key to successful operation.. otherwise some anti-national elements may spill the beans.


Rock
மே 08, 2025 16:11

இஸ்லாமை சரியாக பின்பற்றுபவர் தான் இஸ்லாமியர் அதன் விளைவு தான் இது


Rock
மே 08, 2025 16:11

புரியுதா அய்யா ? Ayisha muhammad marriage தம்பி அல்அக் அல்அபீப், அல்லாஹ் ஜாயித் Allāh ṣāliḥالله صالح 50+ வயது மொஹம்மது மனைவி 9 வயது ஆயிஷா இத பத்தி பேசுனா என்ன ஆகும் என்று உலகத்துக்கே தெரியும் உண்மையான இஸ்லாமியர் என்ன செய்வர் என்று உலகத்துக்கே தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை