உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமல்ல; ராகுலுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்

ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமல்ல; ராகுலுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அலகாபாத்: 'ராணுவத்தையோ, ராணுவ வீரர்களையோ அவமதித்து பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், எம்.பி.,யுமான ராகுலுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2022 டிசம்பரில், 'பாரத் ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில், நாடு முழுதும் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, 'அருணாச்சல பிரதேச எல்லையில், நம் ராணுவ வீரர்களை சீன ராணுவத்தினர் அடிக்கின்றனர்' என தெரிவித்திருந்தார். ராகுலின் கருத்தை எதிர்த்து, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பின் இயக்குநர் உதய்சங்கர் ஸ்ரீவத்ஸவா போலீசில் புகாரளித்தார்.

ராகுல் மனு தாக்கல்

இதையடுத்து, ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான லக்னோ சிறப்பு நீதிமன்றம், ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது: மக்கள், பாரத் ஒற்றுமை யாத்திரை பற்றி கேட்பர்; அசோக் கெலாட், சச்சின் பைலட் பற்றி கூட கேட்பர். ஆனால், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்தது குறித்தோ, நம் ராணுவத்தினர் தாக்கப்பட்டது குறித்தோ கேள்வி எழுப்ப மாட்டார்கள். பின், ஏன் இந்த பேச்சு. இந்திய அரசியலமைப்பின் 19 - 1ன் 'ஏ' பிரிவின் கீழ் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டாலும், அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எந்தவொரு தனி நபரையோ அல்லது நம் ராணுவத்தையோ அவதுாறு செய்யும் உரிமையை, இந்த பிரிவு வழங்காது.

மனதளவில் பாதிப்பு

ராணுவம் அல்லது ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது. ராகுலின் கருத்துகள், நம் ராணுவத்தினரையும், அதை சார்ந்தவர்களையும் மனதளவில் பாதிக்கும் வகையில் உள்ளன. ஆகையால், லக்னோ சிறப்பு நீதிமன்ற சம்மனுக்கு எதிரான ராகுலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K.Uthirapathi
ஜூன் 05, 2025 12:53

வாசகர், A. கென்னடி அவர்களும, மற்றவர்களும் தெரிந்து கொள்ளுங்கள். மைக்கேல் இராஜிவ் கான் சார்லஸ் + சோனியா தம்பதிக்கு இலண்டன் நகரில் பிறந்தவர் "இராகுல்கான்மைக்கேல் சார்லஸ்". அதிகரத்தை பயன்படுத்தி இந்தியாவில் பிறப்பு சான்று. பெற்றோருக்கு முதலில் திருமணம் இலண்டன் சர்ச்சிலும், பின்னர் இந்து முறைப்படி இந்தியாவிலும் நடந்தது.


M Ramachandran
ஜூன் 05, 2025 12:08

கல்லு சிபிலு இதைய்ய அரிச்சுவடி பால்கனவுக்கு பாடம் எடுக்க கூடாதா? அதற்கும் பணம் வசூலிக்க சோனியாவிடம் பயமா ?


P.Sekaran
ஜூன் 05, 2025 10:46

மீண்டும் தான் ஒரு பப்பு சிறுபிள்ளை என்று நிரூபிக்கிறார். நீதிமன்றமும் சின்னபிள்ளையை எத்தனை தடவைதான் குட்டுவது. எப்பொழுதுதான் தான் ஒரு முதிர்ச்சி அடைந்த அரசியல்வாதி என்று நிரூபிப்பார் என்று தெரியவில்லை.


GMM
ஜூன் 05, 2025 10:32

ராணுவம் 24 மணி நேரம் பாதுகாக்க போய் தான் நாம் நிம்மதியாக வாழ்கிறோம். ஒரு வினாடி கண் அயர்ந்தால் எதிரிகள் நம்மை சூறையாடி விடுவர். ராணுவத்தை அவமதித்து கருத்து கூற கூடாது ராகுல். மேலும் காஷ்மீர் பகுதியில் பாக். ராணுவ தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் கேட்கும் போர்வையில் மொத்த விவரமும் பாக். அறிந்து கொள்ள சமீபத்தில் பேட்டி அளித்த ராகுல் தேச விரோத எண்ணம் தெரிகிறது.


A.Kennedy
ஜூன் 05, 2025 10:13

இவர் எல்லாம் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் எனக்கு அசிங்கமாக தெரிகிறது. நல்ல சுய நினைவோடு பேசமாட்டார் போல தெரிகிறது, புண்ணிய பூபி நம் பாரதத்தில் பிறந்து நாட்டுக்கும், நமக்கும் அவமானத்தை தேடி தருகிறார். இனியும் திருந்தினால் நன்று, அப்படி இல்லை என்றால் மக்கள் தான் நிராகரிக்க வேண்டும்.


Ganapathy
ஜூன் 05, 2025 09:21

என்ன ஒரு கீழானப்பிறவி...


Barakat Ali
ஜூன் 05, 2025 08:44

தேசவிரோத தமிழகம், கேரளம் அவரது பேச்சுக்களுக்காக அவரை மன்னிக்கக்கூடும் .... ஏன் ஆதரவு கூட கொடுக்கக் கூடும் .... ஆனால் வடமாநிலங்களில் காங்கிரசை அவரது பேச்சுக்கள் குழிதோண்டிப் புதைத்துவிடும் .... ஆனாலும் நீதிமன்றங்கள் மென்மையான தண்டனை கொடுத்து அவரைக் காப்பாற்றுகின்றன .... இந்நிலையும் பாஜகவுக்கு ஆதாயம் தரக்கூடியதே ....


K Seetharaam
ஜூன் 05, 2025 08:28

Ragul Gandhi Pappu always try to degrade India and Indian Govt., and get snub from entire Indian public. Only some lefties, misioneries, Luyten people encourage him.


V.Mohan
ஜூன் 05, 2025 08:26

மாநில அரசியலில் ஈடுபடுபவர்கள் கூட இந்த காலத்தில் டபுள் டிகிரி வாங்கி படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது கட்சி கொள்கைகளுக்காகவும், தலைவர்களுக்காகவும் சமயத்தில் பிதற்றலாக பேசுகின்றனர். ஆனால் கூடியவரை நாட்டைப்பற்றியும், ராணுவத்தை பற்றியும் தவறாக பேசுவதில்லை. ஆனால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட இந்த சுயநல நேரு குடும்ப வாரிசு நாட்டையும், ராணுவத்தையும் கேவலமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதை விட கேவலம் இந்தியாவுக்கு நாங்கள் தான் சுதந்திரம் வாங்கித்தந்தோம் எனப் பேசும் எந்த ஒரு படித்த, நாட்டை ஆண்ட காங்கிரஸ் தலைவரும் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு காட்டாமல் இருப்பது மிக கேவலம். படிக்காத, பட்டறிவோ நாட்டுப்பற்றோ இல்லாத ராகுலுக்கு பணிந்து சேவகம் செய்யும் காங்கிரஸ் தலைவர்களுக்கு வெட்கமே இல்லை என தெரிகிறது. ஹூம் நாடு உருப்பட்டு விடும்.


Kalyanaraman
ஜூன் 05, 2025 08:19

முக்கியமான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மர்ம மனிதர்களால் போட்டு தள்ளப்படுகிறார்கள். இந்த சீன ஏஜென்டுக்கு மர்ம மனிதர்களை அனுப்பக்கூடாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை