உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று காலை விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்!

இன்று காலை விண்ணில் பாய்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் நேற்று (டிசம்பர் 23) காலை 8.54 மணிக்கு தொடங்கியது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.ஏவுதளத்தில் செயற்கைக்கோள் தயாராக இருக்கும் படத்தை இஸ்ரோ சமூகவலைதளத்தில் வெ ளியிட்டுள்ளது. விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் றேற்று (டிசம்பர் 23) காலை 8.54 மணிக்கு தொடங்கியது. இந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது.இதன் எடை 6,500 கிலோ. இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M. PALANIAPPAN, KERALA
டிச 23, 2025 17:13

வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 23, 2025 14:55

1992 மே 6 முதல் 1994 மே 6 வரை இஸ்ரோ அமெரிக்க அரசின் தடைகளுக்கு உட்பட்டிருந்தது ..... கார்கில் போரின் போது குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா மறுத்ததைத் தொடர்ந்து, இஸ்ரோ தனது சொந்த செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பான IRNSS-ஐ தற்போது NaVIC உருவாக்கத் தலைப்பட்டது ......


joy
டிச 23, 2025 11:25

திட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை