உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவில் பகுதி நேர வேலையை உதறும் இந்திய மாணவர்கள்!

அமெரிக்காவில் பகுதி நேர வேலையை உதறும் இந்திய மாணவர்கள்!

புதுடில்லி: அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள குடியேற்றம் தொடர்பான விதிமுறைகள் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பார்க்கும் இந்திய மாணவர்கள் பலர் அதனை ராஜினாமா செய்து வருகின்றனர்.அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் டிரம்ப், குடியேற்ற விதிகளை கடுமையாக்கப் போவதாகவும், அதனை உடனடியாக அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு சட்டப்படி சர்வதேச மாணவர்கள் எப்-1 விசாவில் வந்தவர்கள் வாரத்திற்கு 20 மணி நேரம் கல்லூரி வளாகத்திற்குள் பணியாற்றலாம். ஆனால், பல மாணவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைறே்ற உணவகங்கள், கேஸ் ஸ்டேசன்கள், வணிக வளாகங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது டிரம்ப்பின் கெடுபிடி காரணமாக ஏராளமானோர், ஒருவர் பின் ஒருவராக இந்த பணியை துறக்க ஆரம்பித்து உள்ளனர். இந்த வேலை முக்கியம் என்றாலும், கடன் வாங்கி இங்கு வந்து படிக்க வந்துள்ளதால், எங்கள் எதிர்காலத்துடன் விளையாட விரும்பவில்லை என சோகத்துடன் கூறுகின்றனர்.இலினாய்சில் படிக்கும் அர்ஜூன் என்ற மாணவர் கூறியதாவது: கல்லூரி முடிந்ததும் எனது செலவுக்காக சிறிய வளாகத்தில் பணியாற்றி வந்தேன். தினமும் ஆறுமணி நேரம் பணியாற்றுவேன். ஒரு நாளைக்கு ரூ.600 வரை சம்பாதித்தேன். இது போதுமானதாக இருந்தாலும், விதிகளை அதிகாரிகள் கடுமையாக்கப் போவதாக அறிவித்ததும் இந்த பணியை ராஜினாமா செய்து விட்டேன். சுமார் 42.5 லட்சம் கடன் வாங்கி இங்கு வந்துள்ளேன் என்றார்.அதேபோல் நேஹா என்ற மாணவி கூறியதாவது: வேலைபார்க்கும் இடங்களில் சோதனை செய்யப் போவதாக தெரியவந்துள்ளது. இதனால் நானும், எனது நண்பர்களும் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளோம். இது கடினமான முடிவு என்றாலும், நாடு கடத்தும் அபாயத்தில் சிக்க விரும்பவில்லை. மாணவர் விசா ரத்தாவதை விரும்பவில்லை. ஏராளமான பெற்றோர், நிறைய தியாகம் செய்து இங்கு குழந்தைகளை அனுப்பி உள்ளனர்.மீண்டும் பணியில் சேர்வதற்கு முன்னர், நிலைமையை ஆய்வு செய்தே முடிவு செய்வோம். அதுவரை பணம் சேமித்தும், கடன் வாங்கியும், குடும்பத்திடம் பணம் பெற்றோரிடம் பணம் கேட்டும் முடிவு செய்வோம் எனக்கூறியுள்ளனர்.புதிய விதிமுறைகள் காரணமாக நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக மன அழுத்தத்திற்கு ஏராளமானோர் உள்ளாகி வருவதாக தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

s.kannan
ஜன 25, 2025 10:22

Indian students F1 visa are allowed to work for 20h per week within the campus. It is allowed as per the immigration rules. For these students no problem in working. only those students working out off campus will have a problem, because it is against the immigration rules even before trumph came to power. but no one was strictly followed. The students who are not following the rules will have problem.


Veeraraghavan Jagannathan
ஜன 25, 2025 09:00

அமெரிக்கா மற்றும் கனடா இனி இந்தியர்களின் கனவாக இருக்காது. இது இந்தியாவுக்கு நல்லது.


AMLA ASOKAN
ஜன 25, 2025 08:57

இவர்கள் இந்தியாவை விட்டு அமெரிக்கா செல்ல கரணம் என்ன ? இங்கு அந்த வாய்ப்போ , வேலையோ, பணமோ கிடைக்காது என்பது தான் . திரும்பி வந்த பின் அங்கு பார்த்த பகுதி நேர வேலை தான் இங்கு கிடைக்கும் . இன்றைய புதிய அமெரிக்க ஜனாதிபதி . மோடியின் நெருங்கிய நண்பர் என்று பீற்றிக்கொண்ட பழைய TRUMP அல்ல . கொள்கையில் உறுதிமிக்கவர் , செயல் வீரர் . மதத்தை வைத்து அரசியல் செய்பவர் அல்ல .


Tetra
ஜன 25, 2025 10:24

இதை சொல்லும் உங்கள் மதம் தெரிந்து விட்டது


Ganapathy
ஜன 25, 2025 11:04

ஆனா மதத்தை வெச்சு நீ அசிங்கமாக நக்கலா எழுதுகிறாய்.


Raj
ஜன 25, 2025 07:28

பெருமைக்கு போய் படிக்கும் மாணவர்கள் தான் அதிகம். அங்கே போய் பாத்ரூம், பலசரக்கு கடைகளில் வேலை செய்யவா 60 லட்சம் ரூ கடன் வாங்கி போய்கிறீர்கள் கேவலம். எத்தனை நல்ல யூனிவர்சிட்டிகள் இந்தியாவில் உள்ளன. என் பிள்ளை வெளிநாட்டில் படிக்கிறார் என்ற பெருமை. எத்தனை பெற்றோர் பிள்ளையை இழந்து இருக்கிறார்கள். துப்பாக்கி கலாச்சாரம் உள்ள அமெரிக்காவில் படிப்பது உயிருக்கு உத்ரவாதம் கிடையாது இப்போ.


Tetra
ஜன 25, 2025 10:26

நீங்கள்தான் சமூகத்தில் சிலருக்கு உயர் சாதி பட்டம் வழங்கி கல்வியும் வேலையும் மறுக்கிறீர்களே.


GUNA SEKARAN
ஜன 25, 2025 06:39

1-3 மணி நேரங்களே, பகுதி நேர வேலை செய்வார்கள்.


Ray
ஜன 25, 2025 05:29

சென்னையில் கொரோனா காலத்தில் கால் டாக்சி ஓட்டினார்கள் இன்றும் ஓட்டுவார்களா?


J.V. Iyer
ஜன 25, 2025 05:08

தான் வந்தோமா, படித்தோமா என்று இல்லாமல் பயங்கரவாத ஹமாஸுக்கு ஆதரவாக யார் இவர்களை போராடச்சொன்னார்கள்? கெட்டசகவாசம்தான் இவர்களை இந்த நிலைமைக்கு கொண்டுவந்திருக்கிறது. எல்லோரும் கனடா போனால், இதுபோன்ற குற்றச்செயலுக்கு ஆரத்தி வைத்து வரவேற்பார்கள். இவர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவாக போராடலாம்.


Matt P
ஜன 25, 2025 04:00

ஒரு நாளைக்கு ரூ.600 வரை சம்பாதித்தேன் என சொல்கிறார் . அது தவறாக தான் இருக்க முடியும். ஒரு மணி நேரத்துக்கு 10 $ கிடைத்தாலும் ஏற குறைய 800 ரூபாய் ஆகிறது. எப்படியும் 8 மணிநேர வேலை இருக்கும். 8 மணி நேரத்துக்கு 6400 ருபாய் கிடைக்க வேண்டும் ஒரு நாளைக்கு.


chennai sivakumar
ஜன 25, 2025 05:21

இது அச்சிடுதல் தவறாகவும் இருக்கலாம். 6000 ரூபாய் ஆக இருக்கும்


Matt P
ஜன 25, 2025 03:54

சட்ட விரோதமாக வேலை செய்வது தவறாக இருந்தாலும், சோதனை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வேலை செய்யும் வாய்ப்பை பயன்படுத்துகிறோம். இப்படி சோதனை செய்யப்போகிறார்கள் என்ற நிலை வரும்போது பயம் வருவது இயற்கை தான். அமெரிக்காஉள் வருவதற்கு முன்னே எப்படியாவது சட்ட விரோதமாக வேலை செய்யலாம்,சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் வருவதும் தவறு தானே.


Kundalakesi
ஜன 25, 2025 00:11

திருப்பி குடுக்கணும்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை