உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!

கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ். இவர், ஆந்திராவின் தொழில் நுட்ப துறை அமைச் சராக உள்ளார். ஆந்திராவிற்கு முதலீ டுகளை கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப் பாக அருகே உள்ள, காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடாகாவின் தொழிற்சா லைகளை ஆந்திராவிற்கு கொண்டு வர முயற்சித்து வருகிறார்.பெங்களூரில் ஏராளமான போக்கு வரத்து பிரச்னை உள்ளதாக தொழி லதிபர்கள் வெளிப்படையாக புகார் செய்துள்ளனர். மேலும், கர்நாடகா வில் உள்கட்டமைப்பு போதிய அளவு இல்லை. மழை பெய்தால் பிரச்னை என்றும், தொழிலதிபர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 'ஆந்திராவின் அனந்தபூரில் உலக தரத்தில் வசதிகள் உள்ளன. நீங்கள் அங்கு உங்கள் தொழிற்சாலைகளைத் தொடங் கலாம்' என, அவர்களிடம் பேசியுள்ளார் லோகேஷ். இது, கர்நாடகாவின் அமைச்சரும், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங்க் கார்கேவை வெறுப்பேற்றியுள்ளது. ஆந்திரா ஒட்டுண்ணியாக மாறிவிட்டது என அவர் விமர்சித்துள்ளார். இதற்கிடையே இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. 'கர்நாடகாவில் தொழில் செய்வதில் ஏகப்பட்ட பிரச்னைகள்' என, மைசூரில் ரம் தயாரிக்கும் தொழிற்சாலையின் அதிபர் ஒருவர் சொல்லியிருந்தார். உடனே அவரை தொடர்பு கொண்டது ஆந்திரா அரசு. 'உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம்' என, நேசக்கரம் நீட்டியுள்ளார் லோகேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rajan A
அக் 05, 2025 14:48

பல நாடுகளில் இருந்து கம்பெனிகள் இந்தியாவிற்கு இடம் பெயறுகிறது அதை போல தானே இதுவும் பெங்களூர் மழையிலும், வாகன நெருக்கடியாலும் சந்தி சிரிக்கிறது. தொழிலதிபர்கள தானாக இடம் மாற்றம் செய்வார்கள். முதலில் மக்களுக்கு நன்மை பற்றி யோசிக்காமல் குழாயடி சண்டை செய்வதைக் நிறுத்த வேண்டும்


Chandru
அக் 05, 2025 12:32

Let there be a healthy competition. We in tamilnadu are missing a boom in the growth of industries due to a useless governance in TN


Barakat Ali
அக் 05, 2025 11:20

தேசியம் பேசும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது நாயுடு கட்சி.. ஆனால் பக்கத்து மாநிலத்துடன் ஒற்றுமை இல்லை .... பாஜக வேடிக்கை மட்டும் பார்க்குமோ ????


Indian
அக் 05, 2025 10:47

ப ஜா வுடன் சேர்த்த இப்படி தான் செய்ய தோணும்


Kumar Kumzi
அக் 05, 2025 16:05

என்ன செய்ய பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாக்கு போவதற்கு இடமில்லை


HoneyBee
அக் 05, 2025 10:42

பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடறான்... எல்லா வசதிகளும் கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன்னு இல்லாமல் செய்தால் எவனும் வேற மாநிலம் தேட மாட்டார்கள்


Rathna
அக் 05, 2025 10:32

தார் சாலைகள் எல்லாம் மீன் பிடிக்கும் குட்டைகளாக இருந்தால், இப்படி தான் கூப்பிடுவார்கள்.


Hari
அக் 05, 2025 09:38

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வேண்டாம் போனானாம் லண்டன் ஜப்பான் சிங்கப்பூர் மோரீஸ் அமெரிக்கா இலங்கை துபாய் ஏன் அங்கெல்லாம் கொங்கிரஸும் திமுக ம் இன்னும் தேச விரோதிகளும் பணத்தை குமிது வைத்துள்ளார்கள் ,athai எல்லாம் வெள்ளைப்பணமாக மாற்றும் வழி இதுதான்


chennai sivakumar
அக் 05, 2025 09:15

தமிழ் நாட்டில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறைய தொழிற்சாலைகள் ஶ்ரீ சிட்டி க்கு சென்றது மறந்து விட்டதா?? ஆந்திரா காரர்கள் கோல்டி என்று கிண்டல் வேறு. அவர்கள் ஓசை படாமல் தொழிற்சாலைகளை அமைத்து வேலை வாய்ப்புக்களை பெருக்குகிறார்கள். தனி மனித வருமானமும் உயர்ந்து கொண்டு இருக்கிறது. திரு. நாயுடு தலைமையில் கணினி துறை முன்னேற்றம். இப்போது அவர் மகன் அதை கையில் எடுத்து செய்கிறார். திரு. ரேட்டி தலைமையில் எத்தனை முன்னேற்றம் அடைந்தது என்று தெரியவில்லை. வெஸ்ட் பெங்காலை வேஸ்ட் பெங்காலாக மாறிக் கொண்டு வருகிறது. கர்நாடகா கதி எப்படி ஆகும் என்று தெரியவில்லை. பொறுத்து பார்ப்போம்.


Ramesh Sargam
அக் 05, 2025 08:31

போட்டி இருக்கவேண்டும். பொறாமை வேண்டாம். நாம் எல்லாம் முதலில் இந்தியர்கள் என்கிற எண்ணம் வேண்டும்.


VENKATASUBRAMANIAN
அக் 05, 2025 08:06

அவர் மாநிலத்தின் வளர்ச்சியை விரும்புகிறார். ஆனால் இங்கே எந்த வேலையும் செய்யாமல் சக்தி திட்டம் பற்றி பேசி காலத்தை ஓட்டுகிறார்கள். பெங்களூரில் எந்த சாலையும் சரியில்லை. போக்குவரத்து துறை தூங்குகிறார்கள். இதுதான் நிலைமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை