உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்., முன்னாள் எம்.பி.,க்கு ஆயுள் தண்டனை

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்., முன்னாள் எம்.பி.,க்கு ஆயுள் தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கடந்த 1984 அக்., 31 ல் காங்., மூத்த தலைவரும், அப்போதைய பிரதமருமான இந்திராவை, சீக்கிய பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.டில்லி கன்டோன்மென்ட் பகுதியில் பல சீக்கியர்கள், வன்முறை கும்பல் தாக்குதலில் உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=00hofpfl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த ஆண்டு நவ., 1 ல் சரஸ்வதி விஹாரில் தந்தை மற்றும் மகன் கொலை செய்தது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், சஜ்ஜன் குமாரை குற்றவாளி என அறிவித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கில், அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இன்று சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.சீக்கியர் கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சஜ்ஜன் குமார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Rasheel
பிப் 25, 2025 21:36

ஒரு இன அழிப்பை ஒரு கட்சி நியாய படுத்தி இருக்கிறது. இதே தான் காஷ்மீரில் பண்டிட்களுக்கும் நடந்தது. 1984ல் சீக்கிய அழிப்பு 1989-90ல் காஷ்மீர் ஹிந்துக்கள் அழிப்பு எந்த செய்தியிலும் வராமல் அமுக்கப்பட்டது. இது தான் உண்மை.


Nagarajan D
பிப் 25, 2025 21:02

அடடா என்ன ஒரு வேகம் நீதித்துறையின் வேகத்தால் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்... 1984 ஆம் வருடம் நடந்த ஒரு கொடும் செயலுக்கு 2025 வருடம் ஒரு கேவலமான தீர்ப்பு தருவதற்கு ஏன் அப்படி ஒரு துறை நாட்டிற்கு தேவை... இது தான் இறுதித்தீர்ப்பா என்றால் அதுவும் இருக்காது. அந்த குற்றவாளியே இப்பவோ அப்பவோ என்று இருக்கான் அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் என்ன தூக்கு தண்டனை கொடுத்தால் என்ன? நீதி துறை வெட்க்கிதலைகுனிய வேண்டும் இவ்வளவு தாமதமாக ஒரு தீர்ப்பு தருவதற்கு


Ramesh Sargam
பிப் 25, 2025 20:41

இப்பொழுது மேல் நீதிமன்றம், அதாவது உயர்நீதி மன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் அவரின் வயதை காரணம் காட்டி அந்த ஆயுள் தண்டனையை குறைக்கும். நமது நீதிமன்றங்களின் செயல்பாடுகள் நமக்கு தெரியாதா?


nb
பிப் 25, 2025 17:39

இது ஒரு தண்டனையா


veeramani hariharan
பிப் 25, 2025 17:36

He should have been given sentence hanged until death


எவர்கிங்
பிப் 25, 2025 17:28

கமல் நாத் தப்பிவிட்டானே? இந்தியச் சட்டங்கள் வீண்....


ஆரூர் ரங்
பிப் 25, 2025 16:41

இடையில் வந்த காங்கிரஸ் திமுக குற்றவாளியை தப்பிக்க விட ஏதுவாக வழக்கைக் கிடப்பில் போட்டதும் பல சாட்சிகள் பயத்தால் சாட்சி சொல்லத்தயங்கியதும் வழக்கு தாமதமாகக் காரணம் . ஒரு சீக்கிய பிரதமர் கூட தன் சொந்த இனம் பாதிக்கபட்டதை எண்ணி செயல்படவில்லையே .


S.Martin Manoj
பிப் 25, 2025 16:05

ஆனால் கொடூரமான இரண்டு குற்றவாளிகளை நீதிமன்றம் தண்டிக்காமல் விட்டுவிட்டது


Rasheel
பிப் 25, 2025 21:39

நீ கோத்ராவை குறிப்பிடுகிறாய் என்பது தெரியும். ஆனால் கோத்ராவில் என்ன நடந்தது என்பது உனக்கு தெரியாமல் இல்லை. ஏன் பொய் பிதற்றுகிறாய்.


கல்யாணராமன்
பிப் 25, 2025 16:00

ஆனதுதான் ஆனது இன்னும் ஒரு பத்து வருடம் வழக்கை இழுத்துக்கொண்டு போயிருக்கலாம். அதற்குள் இவர் செத்து போயிருப்பார். பிறகு வழக்கை தள்ளுபடி செய்து தமாஷ் பண்ணியிருக்கலாம்.


Shekar
பிப் 25, 2025 15:26

ஏற்கனவே காடு கூப்பிடுற வயசு, இதுல ஆயுள் தண்டனை அப்படின்னா எத்தனை வருஷம் எஜமான். தண்டனையை முற்றிலும் அனுபவிக்கவில்லை என்றால் மீதி அடுத்த ஜென்மத்துக்கும் கேரி பார்வர்ட் ஆகுமா எஜமான்.


சமீபத்திய செய்தி