உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை; உண்மையை ஒப்புக்கொண்டார் கெஜ்ரிவால்!

3 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை; உண்மையை ஒப்புக்கொண்டார் கெஜ்ரிவால்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 5 ஆண்டுகளில் 3 வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டேன் என டில்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார்.டில்லியில் வரும் 2025ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 5 ஆண்டுகளில் 3 வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டேன் என அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார். அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது யமுனை நதியை சுத்தம் செய்தல், ஒவ்வொரு வீட்டிற்கு சுத்தமான குடிநீர், டில்லியின் சாலைகளை ஐரோப்பிய தரத்திற்கு மாற்றியமைத்தல் ஆகிய 3 வாக்குறுதிகள் அளித்தேன். ஆனால் இந்த மூன்று வாக்குறுதிகளையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதல் 2 ஆண்டுகள் கோவிட் தொற்றுநோயால் கழிந்துவிட்டது.எங்கள் கட்சியினர் ஒவ்வொருவராக போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்னும் ஒரு வாய்ப்பு

இந்த சவால்கள் இருந்த போதிலும், தனது அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றாத 3 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். கடந்த 75 ஆண்டுகளில் ஏழைகளின் குழந்தைகள் நல்ல கல்வியை பெறுவார்கள் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. நாங்கள் அதை நிறைவேற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., பதிலடி

இது குறித்து, பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பிரமுகர் அமித் மாளவியா கூறியதாவது: 'கோவிட் தொற்று மற்றும் தலைவர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டதால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் கைது செய்யப்படவில்லை. ஆனால் டில்லி மக்களுக்கு சுத்தமான தண்ணீர் ஏன் வழங்கவில்லை? டில்லி ஆம்ஆத்மி அரசு தனிப்பட்ட ஆடம்பரங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அமித் மாளவியா குற்றம் சாட்டி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K S Anand
டிச 15, 2024 22:12

ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுவது உறுதி. வரலாறு காணாத வெற்றியாக இருக்கும்.


ஆரூர் ரங்
டிச 15, 2024 11:26

40 கோடியில் சொகுசு பங்களா கட்டிக் கொள்வேன் என சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றினீரே.


Azar Mufeen
டிச 14, 2024 22:42

தரமான கல்வியை கொடுத்ததுதான் நீங்க செய்த பெரும் தவறு,காமராஜர் கல்வியை கற்று கொடுத்ததினாலதான் கடவுளை பற்றிய பிம்பங்கள் உடைந்து போய் ஜாதி, மத மோதல்கள் குறைந்தது, இப்போ பாருங்க அல்லாஹ் அக்பர், ஜெய் ஸ்ரீ ராம்னு சொல்லி மக்களை பிரிக்க முடியாதுல.


வைகுண்டேஸ்வரன் , chennai
டிச 15, 2024 09:56

எங்கிருந்தோ வந்து இங்க எங்கள் வரி பணத்தில் குளிர் காய்ந்து உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் ....


ஆரூர் ரங்
டிச 15, 2024 11:24

காமராசர் காலத்திலேயே ஹிந்தியும் குடிமைப் பயிற்சிக் கல்வியும் பயிற்றுவிக்க பட்டது. அதையும் எதிர்த்தார்களே. இப்போ சமச்சீர் அறிவிலிகளையே அதிகரிக்கிறது.


Muguntharajan
டிச 14, 2024 20:28

நம் நாட்டில் இந்த மாதிரி இது வரை எந்த கட்சி முதலமைச்சராவது பேசியது உண்டா?


சாண்டில்யன்
டிச 14, 2024 18:16

முட்டுக் கட்டைகள் முட்டுக் கட்டை போடுவதை கண்டிக்கும் விதமாக டில்லிவாசிகள் முட்டு கட்டைகளை மீண்டும் இன்னும் படுதோல்வி அடைய செய்ய வேண்டும் மந்திரிகளையும் முதல்வரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்காவிட்டால் சொன்னபடிசெய்திருக்கும் ஆம் ஆத்மி உண்மையை ஒப்புக் கொள்ள தைரியம் வேண்டும் பிஜேபிக்கு அது கிடையாது பிறர்மீது பழிபோடுவதே அதன் ஜென் இந்த நாடு இப்படிப்பட்ட கேவல அரசியலை இதற்குமுன் கண்டதேயில்லை


vijai
டிச 14, 2024 17:14

இன்னொரு வாய்ப்பு கொடுத்து சுத்தமா நிறைவிடுவேன்


Rajan
டிச 14, 2024 17:14

ஊழல் செய்யமாட்டேன், எளிமையாக இருப்பேன், மக்களுக்கு நல்லது செய்வேன் இந்த மூன்று வாக்குறுதிகள் தானே?


சாண்டில்யன்
டிச 14, 2024 18:26

அந்த ஓன்றையும் செய்ததாக நிரூபிக்கவும் 1. தேர்தல் நிதி பத்திரத்துக்கு கணக்கு கேட்க முடியாதுன்னு சட்டம் போடவில்லை 2. பல லக்ஷம் மதிப்பிலான ஆடைகள் அணியவில்லை 3. நீட் தேர்வு முதல் அனைத்து அனைத்திந்திய தேர்வுகளிலும் வினாத்தாள் கள்ளத்தனமாக விற்பனை செய்து கொள்ளையடிக்கவில்லை ஏழை மாணவர்கள் வாழ்வையே பாழாக்க வில்லை.


r ravichandran
டிச 14, 2024 16:30

ஏற்கனவே இரண்டு முறை வாய்ப்பு கொடுத்து உச்ச நீதி மன்றம் ஜாமின் கொடுக்கும் போது இவர் அரசு கோப்புகளில் கையொப்பம் இட கூடாது, முதல் அமைச்சர் அலுவலகத்தில் நுழைய கூடாது நிபந்தனை விதித்தது . இதுவே இவருக்கு உள்ள நற்சாட்சி பத்திரம்.


வைகுண்டேஸ்வரன், chennai
டிச 14, 2024 16:27

கெடுக்காமல் நிறைவேற்றிய வாக்குறுதி = மது பான கொள்கை


Anonymous
டிச 14, 2024 15:25

ஐயா, நீங்க ஆணியே புடுங்க வேணாம், புடுங்குன வரைக்கும் போதும் சாமி, இன்னொரு வாய்ப்பு கொடுத்து, நீங்க வாக்குறுதி நிறைவேத்தி,........ செஞ்சவரைக்கும் போதுமுமப்பா.......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை