உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்

பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: அடுக்குமாடி குடியிருப்பு வழங்குவதாக மக்களிடம் இருந்து, 927 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த பெங்களூரு தனியார் நிறுவனத்தின், 423.38 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹலசூரில், 'ஓசோன் அர்பானா இன்ப்ரா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு வழங்குவதாக கூறி, பொதுமக்களிடம் இருந்து, 927.22 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் வீடுகளை வழங்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை, தனிப்பட்ட நோக்கங்களுக்காக அந்நிறுவனம் பயன்படுத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றமும் நடந்தது தெரியவந்ததால், ஈ.டி., எனும் அமலாக்கத்துறை விசாரிக்கிறது. நிறுவன உரிமையாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவானது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி, நிறுவனத்திற்கு சொந்தமான, 10 இடங்களில் ஈ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில், இந்நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படாத, 92 வீடுகள், 'அக்வா 2' என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, 13 வீடுகள், 4.50 ஏக்கர் வணிக நிலம்; மூடிகெரேயின் கண்ணேஹள்ளி கி ராமத்தில் வாசுதேவன். அவரது மனைவி பெயரில் உள்ள, 179 ஏக்கர் நிலம் என, 423.38 கோடி ரூபாய் மதிப்பிலான, அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
அக் 06, 2025 12:50

வசூலிச்சதில் பாதிக்கு மேலே சாப்புட்டாங்க. மீதியைத் தான் முடக்க முடிஞ்சுது.


Ramesh Sargam
அக் 06, 2025 09:57

இந்த நிறுவன போன்று பல திருட்டு நிறுவனங்கள் பெங்களூரில் உள்ளன. அதன் உறிமையாளர்களையும் சீக்கிரம் கண்டுபிடித்து சிறையில் அடைக்கவேண்டும், சொத்துக்கள் முடக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக்கொடுக்கவேண்டும்.


VENKATASUBRAMANIAN
அக் 06, 2025 08:22

அதுசரி பணம் கொடுத்தவர்களின் நிலைமை. இந்த வழக்கு முடிய 10 வருடங்களுக்கு மேல் ஆகும். அதுவரை வட்டி குட்டி போடும். இதற்கு யார் பொறுப்பு. நமது நீதிமன்ற செயல்பாடுகளின் விளைவு.


Iyer
அக் 06, 2025 08:42

சரிதான். வாழ்க்கை முழுதுமாக சேமிப்பை வீட்டில் INVEST செய்துவிட்டு தவிக்கும் மக்களின் பணத்தை திருப்பித்தர உடனே நடவடிக்கை எடுக்கணும். FAST TRACK COURT களின் மூலம் இதுபோன்ற வழக்குகளை சீக்கிரம் விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்கணும்.


GUNA SEKARAN
அக் 06, 2025 07:52

பெயர் கேரளாவிலும் அதிகம், கர்நாடகாவிலும் உண்டு.


Mecca Shivan
அக் 06, 2025 07:30

ஆட்டு மூளை இருந்த நீ இப்படித்தான் யோசிப்பே


Iyer
அக் 06, 2025 06:38

இதில் கர்நாடக காங்கிரஸ் அரசு மந்திரி யாரும் கூட்டா என்பதை விசாரிக்கவேண்டும். காங்கிரஸ் உள்கை இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க முடியாது.


Barakat Ali
அக் 06, 2025 05:18

[நிறுவன உரிமையாளர் வாசுதேவன் ] ...... பிறகு எப்படி டுமீலனை கன்னடத்தான் துரத்தி அடிக்காம விடுவான் ????


Field Marshal
அக் 06, 2025 06:47

நீங்க எந்த நாட்டில் பிறந்தாலும் அரேபிய பெயர் வெச்சுக்கறது வழக்கம் ஆச்சே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை