உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி வழக்கில் அபாண்டம்; கொந்தளித்த தலைமை நீதிபதி!

அயோத்தி வழக்கில் அபாண்டம்; கொந்தளித்த தலைமை நீதிபதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

ஆகஸ்ட் 2017லிருந்து ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர் தீபக் மிஸ்ரா. ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர். பரபரப்பான வழக்குகளை விசாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர். ஓரின சேர்க்கை தப்பில்லை, சபரிமலை கோவிலில் வயதுக்கு வந்த பெண்கள் செல்லலாம் என பல தீர்ப்புகளை வழங்கியவர் இந்த மிஸ்ரா. பிரபலமான நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த அமர்வில் நம்ம ஊர் நீதிபதி பானுமதியும் இருந்தார். இவருடைய இன்னொரு தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.திருமணமான ஆணோ, பெண்ணோ வேறொருவருடன் உடல் உறவு கொண்டால் அதாவது இருவருடைய சம்மதத்துடன் இது நடந்தால் அது குற்றம் ஆகாது என தீர்ப்பளித்தார் மிஸ்ரா. இந்த தீர்ப்பிற்கு முன் வரை இந்த விஷயம் ஒரு குற்றம் என இந்தியன் பீனல் கோடில் இருந்தது. அதை நீக்கியவர் நீதிபதி மிஸ்ரா. 1993ல் மும்பை குண்டுவெடிப்பில் குற்றவாளியான யாகூப் மேமனிற்கு தூக்கு தண்டனையை உறுதி செய்ததும் நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வுதான். ஆனால் அது ஒரு நடு இரவு விசாரணை. இதைப் பற்றி தனியே எழுதுகிறேன்.இவருடைய பதவிக்காலத்தில் பல பிரச்னைகளை சந்தித்தார். இதுவரை எந்த ஒரு நீதிபதியும் சந்திக்காத பல இன்னல்கள். இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக உச்ச மன்ற ஐந்து சீனியர் நீதிபதிகள் மிஸ்ராவிற்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, 'மிஸ்ரா தன்னிச்சையாக செயல்படுகிறார்' என பேசினார்கள். 'எங்களுக்கு முக்கிய வழக்குகளை கொடுப்பதில்லை. மிகவும் சென்சிடிவ் வழக்குகளை ஜூனியர் நீதிபதிகளுக்கு கொடுத்துவிடுகிறார் மிஸ்ரா' என பல குற்றச்சாட்டுகளை இந்த 5 நீதிபதிகளும் சொன்னார்கள்.இது பெரும் பிரச்னையைக் கிளப்பியதோடு உச்ச நீதிமன்றத்தில் கோஷ்கள் ஏற்பட காரணமாயிற்று. இதில் வேடிக்கை என்னவென்றால் நீதிபதி மிஸ்ரா மீது குற்றம் சாட்டிய 5 பேரில் ஒருவரான நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியான பிறகு அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அது பொய் என நீதிபதிகள் குழுவால் விசாரணைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது.

அயோத்தி வழக்கும், பார்லிமென்ட் தேர்தலும்

டிசம்பர் 2017ல் அயோத்தி கோவில் நிலப்பிரச்னை தொடர்பான வழக்கு முதலில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில்தான் விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் நீதிபதி மிஸ்ராவைத் தவிர, நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எஸ். அப்துல் நசீர் ஆகியோர் இருந்தனர். விசாரணை ஆரம்பித்த உடனேயே பிரச்னையைக் கிளப்பினார் கபில் சிபல். காங்கிரஸ்காரரான இவர் ஒரு முஸ்லிம் மனுதாரருக்கு ஆஜராகி வாதாடினார். 'இந்த வழக்கை 2019 பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்' என ஒரு குண்டைத் தூக்கி போட்டார் கபில் சிபல். நீதிபதிகள், மற்ற வக்கீல்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கபில் சிபல் தொடர்ந்தார், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என பாஜ தன் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது. தவிர, இந்த வழக்கு தினந்தோறும் இங்கு நடக்கும் போது வெளியே நாடு முழுக்க பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது,'' என்றார், சிபல். உடனே இன்னொரு வக்கீல் ராஜிவ் தவன். இவரும் ஒரு முஸ்லிம் மனுதார் சார்பாக வாதாடுபவர், “ தலைமை நீதிபதி மிஸ்ரா அடுத்த ஆண்டு 2018 அக்டோபரில் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் தீர்ப்பு அளிக்க வேண்டும். இந்த வழக்கில் ஏறக்குறைய 90,000 பக்கம் டாகுமென்ட்கள் உள்ளன…ஏன் அவசரப்பட வேண்டும்,'' என்பது அவரது கேள்வி. அதாவது 2019 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன் தீர்ப்பு வந்துவிடும். அது வரக் கூடாது என்பது இந்த வக்கீல்களின் வாதம். “இது என்ன பைத்தியக்காரத்தனமாக வாதமாக இருக்கிறதே” என நீதிபதிகள் இந்த வக்கீல்களின் வாதங்களை தள்ளுபடி செய்து வழக்கைத் தொடர்ந்தனர். கடைசியில் அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து தீர்ப்பு வழங்கியது தீபக் மிஸ்ரா அமர்வு. 5 நீதிபதிகள் அமர்வு தேவையில்லை என இவர்கள் தீர்ப்பளித்தாலும், பின்னால் தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோகோய் 5 நீதிபதிகள் அமர்விற்கு இந்த விவகாரத்தை அனுப்பினார். இதைப் பற்றி தனியே எழுதிகிறேன்.

பதவி நீக்கம் செய்யுங்கள் நீதிபதி மிஸ்ராவை

ஒரு பக்கம் அயோத்தி விவகாரம், இன்னொரு பக்கம் தலைமை நீதிபதி மிஸ்ரா மீது சக நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள்... நீதித்துறை தனித்து செயல்பட முடியவில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார் மிஸ்ரா என பல குற்றச்சாட்டுகளை வைத்து இவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ராஜ்ய சபாவில் சமர்ப்பித்தது காங்கிரஸ்.இதற்கு தலைமை தாங்கியவர் சீனியர் வக்கீல் கபில் சிபல். நீதிபதிகளை, உயர் நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ எதுவாக இருந்தாலும் பதவி நீக்கம் செய்வது சாதாரண விஷயம் கிடையாது. அது எளிதும் இல்லை.சம்பந்தப்பட்ட நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதோடு அதற்கான ஆதாரங்களுடன் 50 ராஜ்ய சபா அல்லது 100 லோக்சபா எம்பிக்கள் கையெழுத்திட்டு பார்லிமென்டில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு சபாநாயகரோ அல்லது ராஜ்ய சபாவின் தலைவரோ பதவி நீக்க தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு விவாதம் நடைபெறும். பிறகு நடக்கும் வாக்கெடுப்பில் எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.இது மிகப்பெரிய நடைமுறை. இதுநாள் வரை எந்த ஒரு நீதிபதியும் இப்படி பதவி நீக்கம் செய்யப்படவில்லை. பலருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சில வாக்கெடுப்பில் தோற்றுவிட்டது. ஒரு சில நீதிபதிகள் தானாகவே பதவி விலகிவிட்டனர்.

தீபக் மிஸ்ராவின் பதில்

நீதிபதிகளைப் பற்றி யாராவது விமர்சித்தாலோ அல்லது குற்றம் சாட்டினாலோ அரசியல்வாதிகள் மாதிரி நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் பக்க நியாயத்தை சொல்ல முடியாது. காரணம் நீதிபதிகள் யாரையும் சந்திக்க மாட்டார்கள். நீதிபதிகள் என்ன சொல்ல விரும்பினாலும் அவர்கள் எழுதும் தீர்ப்பில்தான் சொல்ல முடியும். இதுதான் நடைமுறை. நீதிபதி மிஸ்ராவிற்கு எதிராக சக நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மிஸ்ரா பதில் அளித்தார். எப்படி?நேரடியாக எதுவும் பேசாமல் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர் மூலமாக பதில் அளித்தார். மிஸ்ரா என்ன சொல்ல விரும்பினாரோ அதையெல்லாம் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என குற்றச்சாட்டுகளுக்கு ஆதார பூர்வமாக மறுப்பு அந்த ஆங்கில தினசரியில் வெளியானது. இது காங்கிரசுக்கு, குறிப்பாக கபில் சிபலுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவுதான் நீதிபதி மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம். இதுவரை எந்த ஒரு தலைமை நீதிபதிக்கும் எதிராக இப்படி ஒரு தீர்மானம் வந்ததே கிடையாது.இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இந்த தீபக் மிஸ்ராவின் மாமாதான் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா. இந்த ரங்கநாத் மிஸ்ரா, எந்த ஒரு நீதிபதியும் செய்யாத காரியத்தைச் செய்தார். பதவி ஓய்விற்கு பிறகு காங்கிரசில் சேர்ந்து 6 ஆண்டுகள் ராஜ்ய சபா எம்பியாக இருந்தார். உங்கள் சேனல் என் பெயரைக் கெடுத்துவிட்டதுஉச்ச நீதிமன்றத்தில் மீடியாவிற்கு இரண்டு பெரிய குளிர் சாதன அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு பத்திரிகையாளர்கள் அமர்ந்து வேலை செய்யலாம். இன்டர்நெட், தொலைபேசி, டிவி, மதிய சாப்பாட்டை சூடாக்கிக் கொள்ள வார்மர் என பல வசதிகளை பத்திரிகையாளர்களுக்கு செய்து கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.30க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் இங்கு வருவர். நீதிபதி மிஸ்ரா பத்திரிகையாளர்களிடம் தனியாக பேசுவதைத் தவிர்ப்பவர். ஓரிரண்டு நிருபர்களிடம் மனம் விட்டு பேசுவார். அதில் நானும் ஒருவன். ஆனால் எந்த ஒரு செய்தியையும் அவரிடமிருந்து வாங்க முடியாது. ஒரு நாள் திடீரென செகரட்ரி ஜெனரலிடமிருந்து போன்.- 'தலைமை நீதிபதி உங்களைப் பார்க்க விரும்புகிறார்' என்றார், அவர். நானும் எங்களுடைய ஹிந்தி சேனல் செய்தியாளர் ஆஷிஷ் பார்கவுடன் நீதிபதி மிஸ்ராவைப் பார்க்க சென்றோம். கோர்ட் ரூம் 1க்கு பின்னால் நீதிபதி மிஸ்ராவின் அறை. பலத்த செக்யூரிட்டி. செகரட்ரி ஜெனரல் எங்களை அழைத்து சென்றார்.அவரது அறையை ஒட்டி ஒரு சின்ன அறை. அங்குதான் பார்வையாளர்களை சந்திப்பார் மிஸ்ரா. உள்ளே சென்றோம். டீ வந்தது. அருந்தினோம். சிறிது நேரத்தில் உள்ளே வந்தார் மிஸ்ரா. கோட், டை சகிதமாக கருப்பு அங்கி இல்லாமல் ஸ்மார்ட் ஆக இருந்தார். வழக்கமான சம்பிரதாய பேச்சுகளுக்கு பிறகு அவர் என்னிடம் சொன்னார். “உங்கள் டிவி என் பெயரைக் கெடுத்துவிட்டது. எனக்கு மிகப் பெரிய களங்கம் ஏற்படுத்திவிட்டது,'' என்றார், வருத்தத்துடன்.எதற்காக அவர் இப்படி சொன்னார் என்பது எங்களுக்கு புரிந்துவிட்டது. எங்கள் டிவி விவாதத்தில் கலந்து கொண்ட ஒரு மூத்த வழக்கறிஞர் நீதிபதி மிஸ்ராவை கண்டபடி பேசிவிட்டார். இந்த விவாதம் லைவ் ஆக இருந்ததால் அவருடைய பேச்சை எடிட் செய்ய முடியவில்லை. நெறியாளர் எவ்வளவோ முயற்சித்தும் அந்த வக்கீலைக் கட்டுப்படுத்த முடியவில்லை, மிஸ்ராவை ஒரு வழியாக்கிவிட்டார். இதை மனதில் வைத்துதான் அவர் அப்படி சொன்னார்.“எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோர்ட்டில் நடப்பதை நாங்கள் தவறாக ரிப்போர்ட் செய்தால் சொல்லுங்கள். ஆனால் இந்த விவாதத்தில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை முடிவு செய்வது நிகழ்ச்சியை நடத்தும் பெண்மணிதான்,'' என்றோம், நாங்கள். ஆனால் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. “உங்களுடைய டிவி அதிபர் பிரணாய் ஏன் இப்படி செய்துவிட்டார்” என குமுறினார். அவர் கேட்ட அடுத்த கேள்வி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏன் காங்கிரஸ் எதிர்க்கிறது?

“ஏன் காங்கிரஸ் என்னை எதிர்க்கிறது? என்னைப் பதவி நீக்கம் செய்வதில் ஏன் குறியாக இருக்கிறார்கள்? நான் என்ன தப்பு செய்தேன்” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டார் நீதிபதி தீபக் மிஸ்ரா. நானும் ஆஷிஷும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஆஷிஷ், “ சார், நீங்க கவர்ன்மெண்டிற்கு (பாஜ அரசுக்கு) சாதகமாக செயல்படுகிறீர்கள் என்பது காங்கிரசின் குற்றச்சாட்டு,” என்றார்.மிஸ்ரா என்னைப் பார்த்தார். “உண்மைதான் சார். நீங்கள் மத்தியில் உள்ள பாஜ அரசுக்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் நினைக்கிறது,” என்றேன், நான். ஒரு பத்து வினாடிகள் அறையில் அமைதி நிலவியது. “ஏதாவது ஒரு ஆர்டரோ அல்லது ஜட்ஜ்மென்டோ காட்டுங்கள், நான் அரசுக்கு உதவியிருக்கிறேன் என்று...” இப்படி சற்று கோபத்துடனே சொன்னார் நீதிபதி மிஸ்ரா.“இதுவரை எத்தனையோ தீர்ப்புகள் வழங்கியுள்ளேன். முக்கிய வழக்குகளில் அரசுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்கியுள்ளேன்,” என தொடர்ந்தார். “அயோத்தி வழக்கில் நீங்கள் பாஜ அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்துவிடுவீர்கள் என் காங்கிரஸ் பயப்படுகிறது,” என்றார் ஆஷிஷ். “வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் போது எப்படி தீர்ப்பு இப்படித்தான் வரப் போகிறது என அவர்கள் சொல்ல முடியும்,” என்றார் மிஸ்ரா.“இதுவரை நான் அளித்த தீர்ப்புகள் என்னுடையது மட்டுமல்ல... என்னுடன் அமர்ந்த சக நீதிபதிகளும் ஒத்துக்கொண்டு அதில் கையெழுத்திட்டுள்ளனரே... அதில் என்னை மட்டும் குறி வைப்பது ஏன்,” என கேள்வி எழுப்பினார் மிஸ்ரா.“சில காங்கிரஸ் வக்கீல்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை. அதனால் கட்சி தலைமையிடம் நீங்கள் மத்திய அரசுக்கு உதவுகிறீர்கள் என போட்டு கொடுத்துவிட்டனர்,” என்றோம் நாங்கள்.பின்னர் பல விஷயங்களைப் பற்றி பேசினார். ஆனால் அவருக்கு எதிராக பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேன் என கறாராக இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு நாங்கள் வெளியே வந்துவிட்டோம். எதற்கு நீதிபதி தீபக் மிஸ்ரா மீது காங்கிரஸ் அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தது என்பது இதுவரை புரியவில்லை. கடைசியில் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து டிஸ்மிஸ் செய்துவிட்டார் ராஜ்ய சபா தலைவர் வெங்கய்யா நாயுடு.- அ.வைத்தியநாதன் அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.தொடர்புக்கு: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Keshavan.J
ஜன 30, 2026 08:32

ஐயா, நீங்க உண்மையில கணிதத்துல ரொம்ப பலவீனமா இருக்கீங்க. 40% 100% வாக்குல இருந்து வருவது இல்லை . 70% வாக்குல இருந்து ௪௦%. இதே லாஜிக், கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 41% வாக்கில் ஜெயிச்சுது. அதனால திமுக கூட்டணி 100% வாக்கில் 41% ஜெயிச்சுதுன்னு அர்த்தமில்லை. இதை சொல்வதால் நான் விஜய் சப்போர்ட்டர் அல்ல. விஜய் ஒரு தேவை இல்லை. கமலஹாசனை போல காணாமல் போய்விடுவார்.


ராஜாராம்,நத்தம்
ஜன 30, 2026 09:58

ஐயா, கேஷவரே இந்த செய்திக்கும் உங்க கருத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்குவீர்களா?


Kasimani Baskaran
ஜன 30, 2026 04:22

மூத்த வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் சில நேரங்களில் மேட்ச் பிக்சிங் போல வழக்கு நடத்தி இருக்கிறார்கள். வில்சன் போன்ற சமூக தீவிரவாதிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் - பொய் சொன்னால் கூட ஓகே என்று நீதிமன்றம் விட்டு விடுவதுதான் காரணம்.


KAS
ஜன 29, 2026 20:41

Kannan, DMK has always been against Tamil Nadus interest. There are many examples சச்ச தீவு, Killing innocent Tamils when LTTE was destroyed, Though part of Central Govt. in NDA as well as UPA Govts. did NOTHING for Cauvery water sharing..... etc. etc. DMK IS ANTI TAMIL AND ANTI NATIONAL. YOUR COMMENTS ARE RUBBISH.


Rajasekar Jayaraman
ஜன 29, 2026 18:39

ஆக மொத்தமாக பழைய நீதி அரசர்கள் கான் கிராசின் கைக்கூலிகள் என்பது புரிகிறது.


SUBBU,MADURAI
ஜன 29, 2026 12:05

இவரைப்பற்றி நான் படித்தவரை இந்த நீதிபதி தீபக் மிஸ்ரா நேர்மையானவர்தான். ஆனால் பல தேசதுரோக வக்கீல்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தியாவில் 166 பேர் கொல்லப்பட்ட 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவனான தஹாவூர் ராணா, ஏப்ரல் 2025 ம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். இவன் பாகிஸ்தானில் பிறந்து பாகிஸ்தான் இராணுவத்தில் டாக்டராக பணியாற்றியவன். அதன் பிறகு கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் குடியுரிமை பெற்று அந்த நாடுகளுக்கு தப்பி ஓடியவன். தற்போது அவன் இந்திய ​​நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கை வாதாடுவற்கு தனக்கு விருப்பமான வழக்கறிஞர்களின் பெயர்களை கொடுத்திருக்கிறான். அவர்கள் முறையே கபில்சிபல், அபிஷேக்மனுசிங்வி, பிரசாந்த் பூஷன் போன்ற பிரபல காங்கிரஸ் வக்கீல்களே! இந்தியாவிலும் யார் தங்களை சிறப்பாக பாதுகாக்க முடியும் என்பது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கே நன்றாக தெரிந்திருக்கிறது என்பதுதான் சோகமான உண்மை!


Rathna
ஜன 29, 2026 11:29

எல்லா ஹிந்து விரோத வழக்குகளிலும் காங்கிரஸ் மற்றும் கபில் சிபல் முன்னிலை வகித்தனர். அயோத்தி வழக்கில் இக்பால் அன்சாரி என்ற ஒரு இஸ்லாமிய பிரிவுக்கு ஆதரவாக பல தவறான உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நீதிமன்றம் முன்னால் எடுத்து வைத்தவர் கபில் சிபல் காங்கிரஸ் MP. ராமர் கோவில் இடிக்கப்பட்டு அதன் அஸ்திவாரத்தில் மற்றும் அதன் தூண்கள் போன்ற பல பொருட்களை வைத்து மசூதி எழுப்பப்பட்டது என்பதை மறைத்து அப்போதைய ASI அலுவலர் KK. முகமத் என்ற கேரள முஸ்லீம் நபர் வழங்கிய அனைத்து ஆதாரங்களும் தவறு என்ற தோற்றத்தை அப்போதைய அரசின் துணையோடு உண்டாக்கியவர் அவர்.


ram
ஜன 29, 2026 10:54

இதில் குறிப்பிட்ட பெண் நீதிபதி ஒரு கிரிப்டோ ஆனால் பதவியில் இருக்கும் வரை ஹிந்து, இதிலிருந்து இவரின் தீர்ப்புகள் எப்படி இருந்திருக்கும் என்று தெரியும்.


Arul Narayanan
ஜன 29, 2026 10:11

பெரியப்பா அல்லது சித்தப்பா அல்லது அப்பா அண்ணன் முறையாக இருக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜன 29, 2026 07:46

காவிரி வழக்குத் தீர்ப்பில் நதிநீர் என்பது ஓட்டு மொத்த தேசத்தின் சொத்து. அதன்மீது எந்த மாநிலமும் தனி உரிமை கொண்டாட முடியாது என தமிழக மக்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது நீதியரசர் மிஸ்ரா. ஆனால் கர்நாடக காங்கிரசும் திராவிஷ ஆட்கள் மூலம் அவர்மீது சுமத்திய அவதூறுகள் ஏராளம்.


kannan
ஜன 29, 2026 08:14

மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன என்று கேட்டு, தீர்ப்பை நீர்த்துப்போகச்செய்தது பாஜக அல்லவா? தமிழ்நாடு கேட்டது தன்னாட்சி அமைப்பு, ஆனால் கிடைத்தது என்ன? மீண்டும் கர்னாடக அரசின் கையில் தண்ணீரைத் திறந்துவிடும் அதிகாரம் இருக்கும் படி செய்தது ஆளும் பாஜக அரசல்லவா? நெஞ்சாரப் பொய்தனை சொல்லவேண்டாம். நீங்கள் உண்ணும் உணவும் சுவாசிக்கும் காற்றும் தமிழ்நாட்டில் அல்லவா?


ஆரூர் ரங்
ஜன 29, 2026 11:57

45 ஆண்டுகளாக மத்திய அரசு செய்த எல்லாவிதமான சமரசத்துக்கும் இரு மாநிலங்களும் உடன்படவில்லை. மத்திய அரசு எப்படிப்பட்ட ஸ்கீமை உருவாக்கிக் கொடுத்தாலும் கர்நாடகா ஏற்றுக் கொண்டிருக்க போவதில்லை. வீம்பு அரசியல்தான் செய்திருக்கும். மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே கசப்புணர்வே உருவாகியிருக்கும். அதே நேரத்தில் கோர்ட் தானே ஒரு திட்டத்தை உருவாக்கி தீர்ப்பளித்ததால் கர்னாடக அரசு வேறு வழியின்றி ஏற்றது. இன்றும் அணைகள் திறப்பதற்கான கட்டுப்பாடு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வசமே உள்ளது. மிஸ்ரா அவர்களின் தீர்ப்புக்கு அப்போது பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லையே. தி.மு.க காங்கிரஸ் ஆட்சியில் துரோகம் மட்டுமே நடந்தது.


kannan
ஜன 29, 2026 07:29

1 காவிரி நீர் பங்கீடு தீர்ப்பு – 2018 பெஞ்ச் தலைமையில்: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா என்ன நடந்தது: •காவிரி நீர் தீர்ப்பாயத்தின் முடிவை உச்சநீதிமன்றம் பெரும்பாலும் உறுதி செய்தது •ஆனால் தமிழ்நாட்டின் நீர் பங்கு சற்று குறைக்கப்பட்டது •குடிநீர் தேவைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது தமிழ்நாட்டின் பார்வை: •அரசியல் ரீதியாக, இந்த முடிவு தமிழ்நாட்டுக்கு சாதகமாக இல்லை என்று பலர் விமர்சித்தனர் •ஆனால் சட்டப்படி, இது மாநிலங்களுக்கு இடையிலான சமநிலை தீர்ப்பு ******** 2 ஜெயலலிதா – சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கு 2017 தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்: •நீதிபதி பினாகி சந்திர கோஷ் •நீதிபதி அமிதவ ராய் அந்த நேரத்தில் CJI: தீபக் மிஸ்ரா என்ன நடந்தது: •ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, வழக்கு விரைவாக முடிக்கப்பட்டது •சசிகலா குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டார் •இதனால் அவர் முதல்வராக ஆக முடியாமல் போனார் முக்கிய புள்ளி: •இந்த தீர்ப்பை மிஸ்ரா எழுதவில்லை •ஆனால் வழக்கு ஒதுக்கீடு, வேகம் போன்றவை தலைமை நீதிபதியாக இருந்த அவரின் நிர்வாக கட்டுப்பாட்டில் நடந்தது •இதன் அரசியல் தாக்கம் தமிழ்நாட்டில் மிகப் பெரியது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை