உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  அய்யப்ப பக்தர் மயங்கி பலி

 அய்யப்ப பக்தர் மயங்கி பலி

மூணாறு: சத்திரம், புல்மேடு வனப்பாதை வழியாக சபரிமலை சென்ற ஆந்திராவைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் மயங்கி விழுந்து இறந்தார். ஆந்திராவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 25 பேர் கொண்ட குழு சத்திரம், புல்மேடு வழியாக வனப்பாதையில் நேற்று முன்தினம் நடந்து சென்றனர். அங்குள்ள சீதக்குளம் பகுதிக்குச் சென்ற போது, மல்லிகார்ஜுனரெட்டி, 42, என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அதுபோல, இந்த பாதையில் சபரிமலைக்கு நடந்து சென்ற, சேலத்தை சேர்ந்த அமிர்தலிங்கம், 57, திருப்பதியைச் சேர்ந்த ஜிதேந்திரன், 42, ஆகியோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சன்னிதானம் தீயணைப்பு துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 22, 2025 00:39

வருத்தமான செய்தி. பக்தரின் ஆன்மா அய்யனின் காலடியில் இளைப்பாறட்டும். ஐயனே போற்றி. பக்தரின் குடும்பத்தினருக்கு அய்யன் ஆறுதல் அளிக்கவேண்டும். ஐயனே போற்றி.


மேலும் செய்திகள்