உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி,தோழியை உடன் அழைத்து வர தடை! வீரர்களுக்கு கடிவாளம் போடும் பி.சி.சி.ஐ.,

மனைவி,தோழியை உடன் அழைத்து வர தடை! வீரர்களுக்கு கடிவாளம் போடும் பி.சி.சி.ஐ.,

மும்பை: போட்டிகளின் போது, கிரிக்கெட் வீரர்கள் மனைவி, தோழி மற்றும் குடும்ப உறுப்பினர்களை உடன் அழைத்து வருவதற்கு தடை விதிக்க பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பின்னர், அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தது பெரும் அதிர்ச்சியையும், ரசிகர்களிடையே விமர்சனத்தையும் எழுப்பியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை இந்திய அணி இழந்திருக்க, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பையும் இழந்துவிட்டது. அணியின் வெற்றி சதவீதம் இப்படி இருக்கும் நிலையில், கேப்டன் ரோகித், பயிற்சியாளர் கம்பீர் இடையே மோதல், கருத்து முரண்பாடு இருப்பதாகவும் பேசப்படுகிறது. இந் நிலையில், போட்டிகளின் போது, கிரிக்கெட் வீரர்கள் மனைவி, தோழி மற்றும் குடும்ப உறுப்பினர்களை உடன் அழைத்து வருவதற்கு தடை விதிக்க பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது. பார்டர் கவாஸ்கர் போட்டி தோல்வியே பி.சி.சி.ஐ., இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்க காரணமாக அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அணியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து, பி.சி.சி.ஐ.,நிர்வாகிகள், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில், இனி போட்டிகளின் போது வீரர்கள் மனைவி, தோழி மற்றும் குடும்பத்தினரை உடன் அழைத்து வருவதை தடை செய்து விடலாம் என்று விவாதித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களில் இதுபோன்ற அனுமதிகளுக்கு தடை விதிக்கலாம் என்று பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு கிரிக்கெட் தொடர் 45 நாட்களை கடந்து இருக்கிறது என்றால் மனைவி, குடும்பத்துடன் அந்த வீரர் 14 நாட்கள் மட்டுமே தங்கிக் கொள்ளலாம். அதே தருணத்தில் குறுகிய கால கிரிக்கெட் தொடர் என்றால் வெறும் 7 நாட்கள் மட்டுமே தங்க அனுமதி தரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு தொடருக்காக செல்லும் போது ஒன்றாகவே பயணிக்க வேண்டும், அணி வீரர்கள் முன்னரே சென்ற பின்னர், தனியாக வந்து அணியில் இணைந்துக் கொள்ளக்கூடாது என்ற முடிவையும் பி.சி.சி.ஐ., எடுத்துள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Karthik
ஜன 14, 2025 21:36

மது, மாது,சூது வேறேன்ன??


viji
ஜன 14, 2025 20:21

கிரிக்கெட் விளையாட போறானுங்களா இல்ல குடும்பம் நடத்த போறாங்களா அப்ப இத்தனை நாள் என்ன பண்றாங்க இந்தியாவில்


Ramesh Sargam
ஜன 14, 2025 19:45

இனி கல்யாணம் ஆகாத இளம் வீரர்களை மட்டும் அணியில் ஆடவிடவேண்டும். மேலும் காதல், கத்தரிக்காய் என்று எந்தவித இடையூறும் இல்லாத வீரர்களை மட்டும் அணியில் சேர்க்கவேண்டும்.


சிவா
ஜன 14, 2025 19:33

இதை எல்லாம் செய்வதை விட எல்லா சீனியர் வீரர்கள் ரஞ்சி ட்ரோபி போட்டியில் கண்டிப்பா விளையாட ஒத்தரவு போடலாம்


வல்லவன்
ஜன 14, 2025 17:13

மனைவிக்கு நோ என்ட்ரி அப்போ இணைவி துணைவிக்கு


Kumar Kumzi
ஜன 14, 2025 15:01

பழசுகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பும்ரா தலைமையில் புதிய அணியை உருவாக்குங்கள்


Ray
ஜன 14, 2025 15:31

என்ன சொல்றார் பழசுகளை வீட்டுக்கு அனுப்பி விட்டா இல்லை வீட்டில் வைத்துவிட்டான்னு விளக்கணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை