உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏழைகள் கேள்வி கேட்பதை பா.ஜ., விரும்பவில்லை: ராகுல்

ஏழைகள் கேள்வி கேட்பதை பா.ஜ., விரும்பவில்லை: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, 'நம் நாட்டில் ஆங்கிலம் பேசுவோர் வெட்கப்படும் சூழல் விரைவில் உருவாகும். அப்படியான சமூகத்தின் உருவாக்கம் வெகுதொலைவில் இல்லை. மொழிகளை நம் கலாசாரத்தின் மீதான ஆபரணங்களாக கருதுகிறேன். நம் மொழிகள் இன்றி, நாம் உண்மையான இந்தியராக இருக்க முடியாது; தாய் மொழியே, நம் நாட்டின் அடையாளம் எனத் தெரிவித்து இருந்தார்.இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஆங்கிலம் தடையல்ல, அது அனைவரையும் இணைக்கும் பாலம்ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல. அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதுஆங்கிலம் என்பது சங்கிலி அல்ல. சங்கிலியை உடைக்கும் கருவிஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை. இதனால், ஏழைகள் ஆங்கிலம் கற்பதை அவர்கள் விரும்பவில்லை. இன்றைய உலகில், உங்கள் தாய்மொழியை போல் ஆங்கிலம் பேசுவதும் அத்தியாவசியம். அதன் மூலமே வேலை உறுதி செய்யப்படும். நம்பிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு இந்திய மொழிக்கும் ஆன்மா, கலாசாரம் மற்றும் அறிவு உள்ளது. அவற்றை நாம் போற்ற வேண்டும். அதேநேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும்.உலகத்துடன் போட்டி போடவும், அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பற்கான இந்தியாவை உருவாக்க இதுவே பாதை. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 26, 2025 10:11

உங்கள் முப்பாட்டனார் நேரு சொன்னார் வறுமையே வெளியேறு, உங்கள் பாட்டி இந்திரா காந்தி சொன்னார் வறுமையே வெளியேறு, உங்கள் தகப்பனார் ராஜீவ் சொன்னார் வறுமையே வெளியேறு.. ஆனால் வறுமை வெளியேறவில்லை. வெறும் கோஷங்களால் வறுமை வெளியேறாது, இப்போது இந்தியா மோடிஜியின் ஆட்சியில் உலக பொருளாதாரத்தில் நான்காவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது .. ஏற்றுமதியில் இந்தியா சாதனை புரிகிறது ..நம்மிடமிருந்து பிரிந்து சென்ற நாடு உலகத்திற்க்கு யாரை ஏற்றுமதி செய்கிறது என்று பாருங்கள்


vadivelu
ஜூன் 23, 2025 06:50

சுதந்திரம் அடைந்தும் ஏழைகள் ஏன் இன்னும் இருக்கிறார்கள் ? சிந்தியுங்கள் ராகுல்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 26, 2025 10:28

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் ஏழைகளே கிடையாது. பாலாறும் தேனாறும் ஓடியது. இந்தியா சொர்க்க பூமியாக இருந்தது. ராகுல் காந்தி ஏழைகளை கோடீஸ்வரர்களை போல் சமமாக நடத்தினார். காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகள் பணக்காரர்களை போல் ஒன்றாக அரண்மனையில் வாழ்ந்தனர். குடிசை என்பதே கிடையாது .. சாதாரணமானவர்கள் கூட ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தனர் ..உருட்டு பப்பு ..உருட்டிக்கொண்டே இருங்கள் பப்பு ..


ராஜ்
ஜூன் 21, 2025 11:43

பப்புவின் பிதற்றல்கள்ன்னு ஒரு புத்தகம் எழுதினால் ஆயிரம் பக்கம் வரும்


Lion Drsekar
ஜூன் 21, 2025 10:01

தேர்தல் வரும்போது எல்லா முக்கிய பிரமுகர்களும் மக்களைப்பெற்றியே பேசுவார்கள், தேர்தல் முடிந்ததும் எப்படி வாரிப்போடலாம், என்று சிந்திப்பார்கள், இதுதான் இன்றைய மரபு, எங்காவது ஒரு ஏழை முக்கிய பிரமுகர்களை நேரில் எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் சந்திக்கமுடியுமா, பேசத்தான் முடியுமா, ஆள்பவர்கள் வாழ்வியல் முறையே தனி, அவர்கள் வாழப்பிறந்தவர்கள், நாம் அவர்களின் வாழ்க்கைக்காக வாழப்பிறந்தவர்கள், வந்தே மாதரம்


M Ramachandran
ஜூன் 21, 2025 01:15

இன்னொரு சுமைய்ய தமிழ் நாட்டிற்கு அது இன்ப நிதி. அச்சுவடு தெரியாத கொத்தடிமை அடிமை களை நம்பி அரசியலுக்கு வருவது. விதி வலியது. இதுக்கு போறதா காலம்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 20, 2025 23:15

ஆஹா ஆஹா இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே


ஆரூர் ரங்
ஜூன் 20, 2025 22:13

நேற்று வெளிவந்த சர்வேயில் நாடு முழுவதும் ஆங்கிலத்தை விட ஹிந்தி வழியில்தான் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். ஜப்பான் சீனா பிரான்ஸ் ஜெர்மனியில் கூட அவரவர் தாய்மொழியில்தான் எல்லாப் பாடங்களையும் படிக்கிறார்கள். ஆங்கிலத்திலல்ல.


theruvasagan
ஜூன் 20, 2025 22:13

அறியாமை என்கிற ஏழ்மைத்தனம் கொண்ட பப்பு போன்றவர்கள் கேணத்தனமான கேள்விகள் கேட்டால் யாருக்குத்தான் பிடிக்கும்.


ஆரூர் ரங்
ஜூன் 20, 2025 22:07

1965 ஜனவரி முதல் ஹிந்தி மட்டுமே நாட்டின் ஆட்சி மொழி, ஆங்கிலத்திற்கு இடமேயில்லை என சட்டம் போட்டது காங்கிரசு ஆட்சிதான். அதனை எதிர்த்து தான் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்கியது.


Ramesh Sargam
ஜூன் 20, 2025 22:07

ராகுல் ஏழையா?


shyamnats
ஜூன் 25, 2025 07:29

ஹெரால்ட் கேஸ் 146 கோடி முதலீடு உள்ள கான் கிராஸ் குடும்பம், ஏழை குடும்பம். பப்புவின் உளறல்களுக்கு நோ எண்டு கார்டு போலும். எனினும் பி ஜே பி வளர்ச்சிக்கு , பப்புவும் அவரது உளறல்களும் தேவை.