உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பா.ஜ.,வுக்கு சாதகம்! தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தகவல்

மஹாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பா.ஜ.,வுக்கு சாதகம்! தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தகவல்

புதுடில்லி: மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, அமைதியான முறையில் நேற்று முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை, நாளை மறுதினம் நடக்க உள்ள நிலையில், இரு மாநிலங்களிலும், பா.ஜ.,வுக்கு சாதகமான முடிவுகள் வரும் என, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மஹாராஷ்டிரா

மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., அடங்கிய, மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q110xevg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு ஆகியவை அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, பெரும் தெம்புடன் களமிறங்கியது.லோக்சபா தேர்தலில், இந்தக் கூட்டணி அதிக இடங்களில் வென்றதால், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.மேலும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்., கட்சிகள் பிளவுபட்டபின் நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க இக்கட்சிகளின் தலைவர்கள் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நேற்று ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. இதில், 60 சதவீத ஓட்டுகள் பதிவாகின.ஓட்டுப் பதிவுக்குப் பின் வெளியான கணிப்புகளில் பெரும்பாலானவை, மஹாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. அதே நேரத்தில், மஹா விகாஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்று கடும் போட்டியை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், மஹாயுதி கூட்டணி, 48 சதவீத ஓட்டுகளுடன், 150 - 170 இடங்களில் வெற்றி பெறும் என, 'மேட்ரிஸ்' நிறுவனத்தின் கணிப்பு தெரிவிக்கிறது.மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 42 சதவீத ஓட்டுகளுடன், 110 -  130 இடங்களில் வெற்றி பெறும் என, அது கூறியுள்ளது. மற்ற கட்சிகள், 10 சதவீத ஓட்டுகளுடன், 8 -- 10 இடங்களில் வெல்லும்.'பீபுள்ஸ் பல்ஸ்' என்ற அமைப்பு, பா.ஜ., கூட்டணிக்கு 175 - 195 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்., கூட்டணிக்கு 85 - 112 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 7 - 12 இடங்களும் கிடைக்கும் என, கூறியுள்ளது.இதுபோலவே, மற்ற அமைப்புகள் வெளியிட்டுள்ள கணிப்புகளும், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், காங்., தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வென்று, கடும் போட்டியை கொடுக்கும் என்றும் கூறியுள்ளன.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.மொத்தமுள்ள, 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.கடந்த 13ம் தேதி 43 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு நேற்றும் தேர்தல் நடந்தன. 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின.ஆளும் 'இண்டி' கூட்டணிக்கு எதிராக, பா.ஜ., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ., கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என, பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் கூறுகின்றன.'மேட்ரிஸ்' நிறுவனத்தின் கணிப்பின்படி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 42 - 47 இடங்களிலும், இண்டி கூட்டணி, 25 - 30 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.'பீபுள்ஸ் பல்ஸ்' நிறுவனம், பா.ஜ., கூட்டணிக்கு 44 -  53 இடங்களும், காங்.,கூட்டணிக்கு 25 - 37 இடங்களும் கிடைக்கும் என, கணித்துள்ளது.அதே நேரத்தில், இண்டி கூட்டணி, 53 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என, 'ஆக்சிஸ் மை இண்டியா' நிறுவனத்தின் கணிப்பு கூறுகிறது. பா.ஜ.,வுக்கு 25 இடங்கள் கிடைக்கும் என, அது கூறியுள்ளது.

சுயேச்சை வேட்பாளர் மரணம்!

மஹாராஷ்டிராவின் பீட் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட பாலாசாகேப் ஷிண்டே, அங்குள்ள ஓட்டுச் சாவடியில் ஓட்டளிப்பதற்காக நேற்று காத்திருந்தார். திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக, டாக்டர்கள் கூறினர்.மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின்படி, தேர்தலின்போது ஒரு வேட்பாளர் உயிரிழந்தால், அந்தத் தொகுதிக்கான ஓட்டுப் பதிவு ஒத்தி வைக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Anand
நவ 21, 2024 10:23

ஹைய்யா, அப்படியானால் புள்ளிஸ் க்ரூப் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு EVM மேலே குறை சொல்லி ஒரு வாரத்திற்கு ஊளையிடுவார்கள்.....


sankar
நவ 21, 2024 09:34

அறிவிருந்தா அவன் ஏன் திமுக கூட்டணியை ஆதரிக்க போறான்


Amar Akbar Antony
நவ 21, 2024 09:27

கருத்து கணிப்பை நம்பமுடியவில்லை உதாரணமாக இதற்கு முன்னர் நடந்த தேர்தலில் முடிவுகள் கருத்துக்கணிப்பை கறுப்பாக்கிவிட்டது


SUBBU,
நவ 21, 2024 07:23

EVM ஓட்டு மெஷினின் நம்பகத்தன்மை பற்றி பல்வேறு அரசியல் கட்சிகளும், பாமரன் போன்ற தனிநபர்களும் அந்த மெஷினில் ஒருவருக்கு போடும் ஓட்டை வேறொருவருக்கு மாற்ற முடியும் என்ற சந்தேகத்தை எழுப்பி அந்தந்த மாநிலங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். இதுபற்றி நீதிமன்றங்கள் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டன. தேர்தல ஆணையம் இந்த EVM ஓட்டு பெட்டிகளை இண்டர்நெட் எனும் இணையத்தின் வழியாகவோ அல்லது வயலெஸ் போன்ற கருவிகளைக் கொண்டோ வேறு எதன் மூலமாகவோ ஓட்டுக்களை மாற்றி ஜீபூம்பா போன்ற தில்லுமுல்லுகளை செய்ய முடியாது இது ஒரு கால்குலேட்டரை போன்றது எனவே இதை ஹேக் பண்ண முடியாது அப்படி ஹேக் பண்ண முடியும் என்று சொல்பவர்கள் யார் வேண்டுமானாலும் நேரில் வந்து EVM மெஷினை செய்முறையில் அப்படி ஓட்டுக்களை மாற்ற முடியும் என நிரூபித்து காட்டலாம் என சவால் விட்டு அதற்கான நாட்களையும் குறிப்பிட்டு வரச் சொன்னது. ஆனால் யாருமே அந்த EVM தவறானது என நிரூபிக்க வரவில்லை. இதையடுத்து 2001 ல் சென்னை உயர் நீதிமன்றம், 2004 ல் டெல்லி உயர்நீதிமன்றம் , 2003 ல் கர்நாடக உயர் நீதிமன்றம், 2002 ல் கேரள உயர் நீதிமன்றம், 2004 மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் பெஞ்ச் இந்தியாவில் தேர்தல்களில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொழில்நுட்பத் திறன் மற்றும் அதன் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர் மேலே சொன்ன அனைத்து உயர் நீதிமன்றங்களும் இந்தியாவில் உள்ள EVMகள் நம்பகமானவை மற்றும் முற்றிலும் சேதம் ஏற்படுத்த முடியாதவை என்று தீர்ப்பளித்துள்ளன. உச்சநீதிமன்றமும் இதை உறுதிப் படுத்தியுள்ளது. எனவே இங்கு EVM ஐ குறை சொல்லி கருத்தை போடுபவர்கள் இதை பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.


Barakat Ali
நவ 21, 2024 10:01

"யாருமே அந்த EVM தவறானது என நிரூபிக்க வரவில்லை" ....... இங்கே திராவிட மாடலின் கொத்தடிமைகள் கூவுவது விஷயம் தெரிந்தவர்களுக்காக அல்ல ..... திராவிடத்தை நம்பும் தமிழர்களை மடைமாற்றத்தான் .......


Kanns
நவ 21, 2024 07:10

Vested& Influenced Exit-Polls favouring BJP. Results Solely Based on AlliancesMaharashtra- ShivSena Original Jharkhand-Possibly BJP. However, BJP will Always Win if EVMs are there


sridhar
நவ 21, 2024 07:46

Then how did dmk win in TN. Have some sense.


raja
நவ 21, 2024 07:10

தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருங்கள்...இப்படித்தான் கருத்து கணிப்பில் ஹரியானாவில் காங்கிரஸ் வரும் என்று சொண்ணானுவோ ஆனால் வெற்றி பெற்றது பிஜேபி...


Barakat Ali
நவ 20, 2024 21:14

உத்தவ் தாக்கரேயின் துணைவியாருடன் துக்ளக்கார் ஆங்கிலத்தில் மாட்லாடியது நினைவுக்கு வருகிறது .....


Barakat Ali
நவ 20, 2024 21:11

கருத்துக்கணிப்புகள் பலிக்கும் பட்சத்தில் - தொடர்ந்து பாஜக அதிக வெற்றிகளைக் குவிப்பதால் தமிழக வாக்காளர்கள் சிந்திப்பார்களா ???? காரண காரியங்களை அலசுவார்களா ????


பாமரன்
நவ 20, 2024 21:01

மங்குனி அமிச்சரே அல்லது அமித் சேட்டு அவர்களே...கருத்து திணிப்புகளை பார்த்தா நமக்கு இருப்பது ரெண்டு ஆப்ஷன்ஸ்தானோ...?? கோணிப்பைகளை ரொப்பி வச்சிக்கிட்டு புள்ளை புடிக்க காத்திருத்தல்... அல்லது அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் மிஷின்களில் ஜீபூம்பா பண்ணுது... முதல் ஆப்ஷன் இப்போல்லாம் காஸ்ட்லியாவும்... மகாராஷ்டிராவில் தற்போதைய உத்தமர் அஜித்தை போன்று எப்பவும் ஓடி போகும் ஆட்களை வச்சிக்கிட்டு ரிஸ்க்கும் கூட... அதனால் ரெண்டாவது ஆப்ஷன்தான் சரி... ஹரியானா மபி முடிவுகள் மாதிரி மக்கள் வாயை ஆஆன்னு பொளந்ந்துக்கிட்டு இருக்கறப்ப நைசா ஆட்சி அமைச்சிடலாம்... என்ன சொல்றீங்க புள்ளை புடிக்கும் டிபார்ட்மெண்ட் ஹெட் சேட் அவர்களே....???


Duruvesan
நவ 20, 2024 22:58

விடியல் 200 சீட் சொன்னது இதை தான் அமைதியே


Raman
நவ 21, 2024 09:39

Your DMK broughtup speaks . Educate and then comment


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 20, 2024 20:47

கருத்துக்கணிப்புகள் மக்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பவை அல்ல .... அப்படியே மெய்யாவதுமில்லை ...... முடிவுகள் வெளியாகும் வரை பொறுத்திருப்போம் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை