உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெட்ரோலில் எத்தனால் கலப்பது மைலேஜை பாதிக்காது: வாகன தயாரிப்பாளர்கள் உறுதி

பெட்ரோலில் எத்தனால் கலப்பது மைலேஜை பாதிக்காது: வாகன தயாரிப்பாளர்கள் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பெட்ரோலில் எத்தனால் கலப்பது, வாகனங்களில் மைலேஜை பாதிக்காது என தொழில்துறை அமைப்புகள், வாகன தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால், வாகனங்களின் மைலேஜ் குறையும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இத்தகைய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. எத்தனால் கலப்பதால் வாகன எரிபொருள் மைலேஜை பாதிக்காது என தொழில்துறை அமைப்புகள் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனத்தினர் உறுதி அளித்துள்ளனர்.இது குறித்து தொழில்துறை அமைப்பினர் கூறியதாவது: பெட்ரோலில், எத்தனால் கலப்பது, சுற்றுச்சூழல் ரீதியாக மிகப்பெரிய பலனை அளிக்கின்றன. எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதில் வாகனத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அதை சரி செய்து தருவதற்கு கார் தயாரிப்பாளர்கள் வாரண்டி அளித்துள்ளனர். பழைய வாகனமாக இருந்தாலும் இந்த வாரண்டி செல்லும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதிப்பில்லை!

'' 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் எந்த வாகனங்களும் பழுதடைந்ததாக எந்த புகாரும் இல்லை. வாகன எஞ்சின்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது'' என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாந்த் பானர்ஜி உறுதி செய்தார்.

எந்த பாதிப்பும்…!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் விக்ரம் குலாட்டி கூறியதாவது: எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களில் மைலேஜை பாதிக்கும் என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இதுவரை, எந்த அறிவியல் ஆய்வறிக்கையோ, அறிவியல் நிபுணர்களோ எத்தனால் கலந்த பெட்ரோல் மிகவும் ஆபத்து என்று ஆய்வில் உறுதி செய்யவில்லை. இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன், இந்தியன் பெட்ரோலியம் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து நடத்திய சோதனைகளிலும் எந்த பாதிப்பும் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

CO2 உமிழ்வு

இந்திய பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பின் ஆலோசகர் ரவி கூறியதாவது: பெட்ரோலில் எத்தனால் கலப்பது கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க உதவுகிறது என்பதை ஒப்புக்கொண்டார். ''சுற்றுச்சூழல் நன்மைகளை பொறுத்தவரை, கரும்புகளிலிருந்து மட்டுமல்ல, உபரி அரிசி, சோளம், சேதமடைந்த உணவு தானியங்களில் இருந்து எத்தனால் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது எத்தனால் கலப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது'' என வாகன உற்பத்தியாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எத்தனால் கலப்பு என்பது என்ன?

எத்தனால் என்பது புதுப்பித்தக்க உயிரி எரிபொருள்; இதை பெட்ரோலில் கலப்பதன் மூலம் காற்று மாசு குறைகிறது. சர்வதேச தர அடிப்படையில் இது செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு 5 ஆண்டுகள் முன்னதாகவே இந்த எத்தனால் கலப்பை இந்தியா செய்து சாதனை படைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

A Mothilal
ஆக 31, 2025 20:01

கரும்பு ஆலை அரசியல் முதலாளிகளுக்கு பாதிப்பு இல்லை. வாகன உரிமை மக்களிடமிருந்து கொள்ளை இலாபம்.


என்றும் இந்தியன்
ஆக 31, 2025 18:54

எனது ஹூண்டாய் i10 வண்டியில் பெட்ரோல் 1 லிட்டர் 10 கிமீ கொடுத்தது இப்போது 1 லிட்டர் பெட்ரோல் 20% எத்தனால் கலப்புக்கு பின் 8 கிமீ கொடுக்கின்றது ஆனால் எந்த வித ஸ்டார்டிங் ப்ரோப்ளேம் இல்லை


Saravana Kumar
ஆக 31, 2025 16:07

No i am using in 2 wheeler, it causes sediment white color dust in carburator and induce starting problem and and engine off while running in signals


Thravisham
ஆக 31, 2025 14:39

பிரேசில் நாட்டில் 100% எத்தனால் வண்டிகளுக்கு உபயோகப் படுத்தப் படுகிறது. மைலேஜில் எந்தவித பாதிப்பும் இல்லை


Sridhar
ஆக 31, 2025 13:44

ஆய்வுகள் மிகத்தெளிவாக மைலேஜ் 4% வரை குறையும் என்று கூறுகின்றன. அதைத்தவிர, பழைய வண்டிகளில் என்ஜின் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆராய்ச்சி அறிக்கைகள் மிகத் தெளிவாக இருக்கும்போது, பாதிப்பே இல்லை என மறுப்பது அறிவார்ந்த செயல் இல்லை. எத்தனால் கலப்பால் நன்மைகள் பல இருக்கின்றன என்பதை மறுக்கமுடியாது. அதே சமயம் அதை வாடிக்கையாளர்கள் மீது திணிப்பது நல்ல செயல் அல்ல. வேண்டுமானால் E20 ஐ டீசல் போன்று ஒரு தனி எரிபொருளாக கொடுக்கலாம். விருப்பப்பட்டவர்கள் வாங்கிகொள்ளலாம். வெளிநாடுகளில் பெட்ரோலிலேயே நிறைய வகைகளை கொடுக்கிறார்கள். அவரவர் வாகனங்களுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களும் வாங்கிக்கொள்கிறார்கள். மேலும் எத்தனால் கலப்பின் விளைவாக கிடைக்கும் விலைகுறைப்பை நுகர்வோரிடம் பகிரவேண்டும். அதே விலைக்கு கொடுப்பது அக்கிரமம். கட்கரியின் குடும்பம் எத்தனால் தயாரிப்பில் ஈடுபட்டு நிறைய பணம் சம்பாதித்து வருவதே ஆளும்கட்சிக்கு பெரும் கெட்டபெயரை கொடுத்துவரும் வேளையில், அவர் இவ்வாறு நடந்துகொள்வது ஆளும்கட்சி மீது பெரும் வெறுப்பை உருவாக்கும்.


ஆரூர் ரங்
ஆக 31, 2025 14:51

பெட்ரோல் வாகன பெருக்கத்தால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் விலையைக் குறைத்து நெருக்கடியை அதிகரிக்க விரும்பவில்லை. விலையைக் குறைப்பது மின் வாகனங்களுக்கு மாற மாட்டார்கள். முன்பை விட சூப்பர் நெடுஞ்சாலைகள், வணிக சுங்கச்சாவடி அகற்றம் போன்ற நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் செலவைக் குறைத்துள்ளது தெரியுமா?. இறக்குமதி கச்சா எண்ணெய்தான் அன்னியச் செலாவணி கரைய முக்கிய காரணம்.


Sridhar
ஆக 31, 2025 15:09

எத்தனால் கலப்பதால் சுற்றுசூழல் பாதிப்பு குறைவதாகத்தானே சொன்னார்கள்? அதை அதிகம் பயன்படுத்தினால் என்ன தவறு? "விலைகுறைந்தால் மின்சார கார்கள் விற்பனை குறைந்துவிடும்" - அப்போ E20 விற்பனை ஆகவேண்டாமா? விவசாயிகளின் நலம்? எல்லா வாகனங்களையும் மின்சாரமயமாக்குதல்தான் நம் கொள்கை என்றால், எத்தனால் விவசாயிகள் என்ன செய்வார்கள்? கம்பெனிகள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதால், இப்போது இவர்கள் என்ன சொன்னாலும் அது சந்தேகத்துக்கு இடமளிக்கும்.


Balaji Sekar
ஆக 31, 2025 12:45

நீங்கள் 24crt, 22crt, 20crt மற்றும் 18crt மற்றும் 16crt தங்கம் வாங்கும்போது, ​​தங்கம் அப்படியே இருக்கிறதா அல்லது விலை அப்படியே இருக்கிறதா? இல்லை, E20 எரிபொருள் மைலேஜை பாதிக்கலாம். எத்தனால் பெட்ரோலை விட குறைந்த ஆற்றல் அடர்த்தியைக் கொண்டுள்ளது, அதாவது இது ஒரு யூனிட் தொகுதிக்கு குறைந்த ஆற்றலை வழங்குகிறது. இது மைலேஜில் சிறிது குறைவை ஏற்படுத்தும், வாகன வகை மற்றும் E20 எரிபொருளுடன் அதன் இணக்கத்தன்மையைப் பொறுத்து 6% குறைப்பு இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எத்தனால் விலையும் மிகவும் மலிவானது. E20 விலை ஏன் குறைந்தது 1/5 குறைக்கப்படவில்லை? 80ரூ


Nada raja
ஆக 31, 2025 12:12

எத்தனை நாள் பெட்ரோல் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை நான் எனது வண்டியில் பயன்படுத்துவதில் இருந்து உணர்கிறேன்


Nada raja
ஆக 31, 2025 12:11

உண்மைதான் எத்தனால் கலந்த பெட்ரோல் மைலேஜ் பாதிக்காது


புதிய வீடியோ