உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிக்கு எதிராக வழக்கு

பீஹாரில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிக்கு எதிராக வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில், ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது.

எதிர்ப்பு

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், அக்., - நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.ஒவ்வொரு வாக்காளரின் ஓட்டுரிமையை உறுதி செய்யவும், பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.இந்நிலையில், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுசாரா அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

விசாரணை

அதில், 'தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகளை மீறுகிறது. 'மேலும் இந்த உத்தரவு தன்னிச்சையானது. பல லட்சம் வாக்காளர்களின் ஓட்டுரிமையை இது பறிக்கக் கூடும். இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GMM
ஜூலை 07, 2025 09:12

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகளை எப்படி மீறுகிறது. பல லட்சம் குடிமக்களின் ஓட்டுரிமை சட்ட பூர்வமானது. அந்நிய, கள்ள, இரட்டை வாக்குரிமை பெற்ற வாக்காளர்களின் ஓட்டுரிமையை நீக்க கூடும். அவர்கள் கள்ள குடியேறிகள். அல்லது பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள்? என்று மறைமுகமாக சீர் திருத்தம் சங்கம் உணர்த்துகிறது. மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆதாரம் அடிப்படையில் மட்டும் தான் விசாரிக்க முடியும்? தேர்தல் குழப்பம் ஏற்படுத்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் முயல்கிறது. மாவட்ட கலெக்டர் தன் எல்லையில் சீர் திருத்த உறுப்பினர்களை தேர்தல் நம்பிக்கையை குலைக்க சதியின் கீழ் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.


Kulandai kannan
ஜூலை 06, 2025 11:16

2003க்குப் பிறகு திருட்டுத்தனமாக நாட்டிற்குள் நுழைந்து ஆதார், வாக்காளர் அட்டை வாங்கியுள்ள வங்க தேச, ரோஹிங்கியா நபர்கள் நீக்கப் படுவார்கள். அதனால் புள்ளிக் கூட்டணிக்கு கோபம்.


குடிகாரன்
ஜூலை 06, 2025 06:43

அமைதி மார்க்கம் காரணமாக இருக்கலாம்


Padmasridharan
ஜூலை 06, 2025 06:06

ஏன் எதிர்க்கிறார்களென்று இந்த செய்தியில் கூறவில்லையே சாமி. .


முக்கிய வீடியோ