உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு!

மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நிதி கமிஷனின் பரிந்துரையின்படி, வரி வருவாயில் மத்திய, மாநில அரசுகள் பகிரும் நடைமுறை அரசியல் சட்டப்படி அமலில் இருக்கிறது. குறிப்பிட்ட சில வரி வருவாயை நியாயமான மற்றும் சமமான அளவில் மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.அந்த வகையில், மாநிலங்களுக்கு வரி பகிர்வாக ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழகத்திற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்கூட்டியே தவணை தொகையை விடுவித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, உத்தரபிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீஹாருக்கு ரூ.10,219 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.7,976 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.7,644 கோடியும், மஹாராஷ்டிராவுக்கு ரூ.6,418 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.6,123 கோடியும் விடுவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Kulandai kannan
அக் 02, 2025 15:58

தமிழ்நாட்டில் ஏ வ்.....


ஆரூர் ரங்
அக் 02, 2025 15:05

மக்களுக்கு அல்வா.


Venkataraman Balasubramaniam
அக் 02, 2025 09:02

நிதி குழுவின் பரிந்துரைகள் மீதுதான் நிதி வழங்கப்படுகிறது. சும்மா மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வாரி வழங்குகிறது என்று ஒப்பாரி வைப்பதே இங்கு உள்ள அரசுக்கு பொழுது போக்கு


Gokul Krishnan
அக் 02, 2025 08:57

சரி இனியாவது பீகாரில் புதிய பாலங்கள் கட்டி முடித்தவுடன் இடிந்து விழாமல் இருக்குமா


vivek
அக் 02, 2025 09:33

இங்கே நடந்தது அங்கே நடக்காது...வீணா சொம்பு தூக்காதே


Gokul Krishnan
அக் 02, 2025 10:46

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது


sankaranarayanan
அக் 02, 2025 08:01

தமிழகத்திற்குத்தான் சாராயத்தண்ணீர் கை கொடுக்கிறதே அதுவே போதும் அதுவே மித மிஞ்சி இருக்கிறது தள்ளாடும் தமிழகத்திற்கு சாராயம் ஒரு வரப்பிரசாதம்


Indian
அக் 01, 2025 23:23

எல்லா பணமும் உபி , பீகார் கு கொடுத்து விட்டு தமிழ் நாட்டுக்கு ஒரு ஐம்பது ரூபா கொடுங்க போதும்.


vivek
அக் 02, 2025 05:59

ஆமாம் அந்த ஐம்பதை ஆட்டைய போட்டுடுவோம் கைலாசம்


தாமரை மலர்கிறது
அக் 01, 2025 22:43

தமிழகத்திற்கு ஆயிரம் கோடி கொடுத்தாலே போதும். அதிகம் கொடுத்தால் ஊழல் செய்யப்படும்.


உண்மை கசக்கும்
அக் 01, 2025 22:36

தமிழக அரசு, மாவட்ட நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு அறிக்கை கொடுக்க முடியுமா.


GMM
அக் 01, 2025 21:58

மத்திய அரசு, மாநில நிர்வாகம் நிதி பகிர்வு போல் மாநில பத்திர பதிவு போன்ற வருவாயில் உள்ளாட்சி அமைப்புகள் நிதி பகிர்வு தேவையில்லையா? மாநில நிதியில் ஒரு பகுதியை உள்ளாட்சி அமைப்புகள் நேரிடையாக மத்திய அரசிடம் இருந்து பெற சட்டம் இல்லையா? பல நகராட்சிகளில் நரக வாழ்க்கை.


Oviya Vijay
அக் 01, 2025 21:47

இவ்வாறான செய்திகளில் மக்களின் கண்கள் தம் மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதியை மட்டும் பார்க்காது. மற்ற மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதிகள் எவ்வளவு நம் மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நிதி எவ்வளவு என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும். அது இயற்கை. மாற்ற முடியாது. அவ்வாறு இருக்கையில் மேற்கண்ட செய்தியில் பாஜக ஆளும் மாநிலத்திற்கு எவ்வளவு நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள் நம் தமிழகத்திற்கு எவ்வளவு ஒதுக்கி இருக்கிறார்கள், நமக்கு மட்டும் எப்போதும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதும் மக்களின் மனதில் ஓடும். இதற்காகத் தான் திரும்ப திரும்ப நான் சொல்கிறேன். மத்திய அரசு முதலில் தமிழகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு விட்டு தமிழகத்தை ஆளுவது பற்றி கனவு காணுங்கள். குறிப்பு: நான் உங்களை கனவு காணுங்கள் என்று தான் சொல்கிறேனேயன்றி ஆளப் போகிறீர்கள் என்று கூறவில்லை... அதற்கு தமிழகத்தில் பாஜகவிற்கு எந்நாளும் வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்... இப்படியெல்லாம் பாகுபாடு பார்த்து காமெடி செய்துகொண்டு தமிழகத்தில் கட்சியை எப்படி வளர்க்கப் போகிறீர்கள். அடப்போங்கய்யா... நீங்களும் உங்களுடைய துக்கடா கட்சியும்...


vivek
அக் 02, 2025 06:00

ஓவியரே இதயம் பத்திரம் சொல்ல மறந்துஅடே


Oviya Vijay
அக் 02, 2025 07:50

அடடே!!! மறந்துட்டேன் பார்த்தீகளா... ஞாபகப் படுத்துனதுக்கு நன்றி


Manjunath B
அக் 02, 2025 08:24

தமிலக அரசு கோவை, கன்னியாகுமாரி, விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு ஏன் குறைவாக தருகின்றது?


vivek
அக் 02, 2025 09:34

ஆமாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை