உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றப்பத்திரிக்கை

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றப்பத்திரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பாலியல் வழக்கில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா,33. ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி.,யாக இருந்தார்.இவர், சில பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்து இருந்ததாக ஏப்ரலில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. திடீரென ஜெர்மனிக்கு தப்பியோடினார்.ரேவேண்ணா மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. மே.30-ம் தேதி ஜெர்மனியிலிருந்து பெங்களூரு திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இந்த வழக்கில் 123 சாட்சிகளிடம் விசாரிக்கப் பட்டு, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை இன்று சிறப்பு புலனாய்வு குழு இன்று ( ஆக.,23) தாக்கல் செய்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 23, 2024 20:22

அவன் ஜெர்மனிக்கு தப்பி ஓடியதில் இருந்தே தெரிகிறது அவன் அயோக்கியன் என்று. அது ஒன்றே போதும் நீதிமன்றம் அவனை தண்டிக்க. ஆனால் தண்டிக்காது. நீதிமன்றத்துக்கு சாட்சிகள் வேண்டும். இந்நேரம் எல்லா சாட்சிகளும் அழிக்கப்பட்டிருக்கும். ஆக இவனுக்கு தண்டனை கிடைக்கவே கிடைக்காது. பெண்களே உஷார் இவனுடைய பெண்கள் வேட்டை மீண்டும் தொடர வாய்ப்புள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை