உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; டில்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; டில்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது டில்லி நிருபர்

டில்லி கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ், இன்று (டிசம்பர் 25) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5dh4ahx5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாட்டு கொட்டகையில், கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில், குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் இடம் பெற்றன. வீடுகளிலும், ஸ்டார் தொங்கவிட்டு, குடில் அலங்காரம் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து, மக்கள் பண்டிகையை வரவேற்றனர்.அந்தவகையில், டில்லியில் கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பிரார்த்தனையில் கலந்து கொண்ட பிறகு, பாதிரியார்களிடம் கலந்துரையாடினார்.முன்னதாக, ''கிறிஸ்துமஸ் உணர்வு நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும், நல்லெண்ணெத்தையும் ஊக்குவிக்கட்டும்'' என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

பேசும் தமிழன்
டிச 25, 2025 17:23

உண்மையிலேயே இவர் தான் அனைவருக்குமான தலைவர்.... நாட்டின் அனைத்து மக்களையும் மதித்து நடப்பவர்.... ஆனால் இங்கேயும் இருக்கிறார்களே .... ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஆட்களுக்கு மட்டும் வாழ்த்துக்கள் சொல்லி கொண்டு !!!


KR india
டிச 25, 2025 13:57

தனக்கு தீங்கிழைத்த எதிரியை கூட மன்னித்த பெரும்மாண்பின், உச்சமான தியாகத்தின் திருவுருவமாக கருதப்படும், அகிம்சை நாயகர், புண்ணிய ஆத்மா இயேசு பிரான் அவதரித்த இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் கிறிஸ்துவ நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி அவர்கள் பிரார்த்தனையில் பங்கேற்றது வரவேற்கத்தக்கது. முன்பு, கேரளாவில், BJP -NDA கூட்டணி சார்பாக P.C.தாமஸ் என்பவர் பாராளுமன்ற தேர்தலில் வென்றார். சமீபத்தில் கூட கத்தோலிக்க கிழக்கு மரபுவழித் திருச்சபை மற்றும் Syro-Malabar Catholic and Orthodox Church போன்றவை பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததை நினைவு கூற வேண்டும். எனினும், பிற கிறிஸ்துவ சபையினர் மற்றும் பெரும்பாலான கிறிஸ்துவ நண்பர்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் BJP இன்னும் பெற வில்லை என்பதையும் உணர்ந்து, அவர்களின் அன்பை பெற முயற்சிக்க வேண்டும். மதநல்லிணக்கம் வாழ்க நன்றி


ஆரூர் ரங்
டிச 25, 2025 12:32

கோவாவிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் கிறித்தவர்கள் பெருமளவில் வாக்களித்ததால்தான் அங்கெல்லாம் பிஜெபி ஆட்சி அமைந்துள்ளது. கேரளத்தில் கூட இது போன்று ஆதரவு கிடைக்கிறது. கிறித்தவர்களிலும் நேர்மையாக நாட்டுப்பற்றுடன் சிந்திப்பவர் பலருண்டு.


திகழ்ஓவியன்
டிச 25, 2025 13:14

SIR வோட்டு திருட்டு, வடக்குக்கு படிப்பறிவு இல்லாதது தான் காரணம்


Rathna
டிச 25, 2025 11:55

நீங்கள் என்ன சோப்பு போட்டாலும் ஒரு வோட்டு கூட உங்களுக்கு வராது. ஏன் என்றால் வழிபட்டு தலங்கள் அவர்கள் வோட்டு போடுவதை தீர்மானிப்பதால்.


Keshavan.J
டிச 25, 2025 13:44

78% ஹிந்துக்களில் 60% வோட்டு போட்டால் போதும் மினாரிட்டி வோட்டை வைத்து..


RAMAKRISHNAN NATESAN
டிச 25, 2025 11:42

மதம் மாற்றம் செய்ய, கிறிஸ்தவ போதனைகளை பரப்ப முயலும் கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்குச் செல்வதில்லை? ஹிந்துக்களுக்கு மட்டும் மேன்மை தரவேண்டும் என்கிற நல்லெண்ணமா ?


திகழ்ஓவியன்
டிச 25, 2025 11:37

வடநாட்டில் XMAS DECORATION எல்லாம் அடித்து நொறுக்குவதை போல வீடியோ எல்லாம் வருது


guna
டிச 25, 2025 11:49

எல்லாம் உன் திருட்டு கும்பல் பண்ற வேலையா


RAMAKRISHNAN NATESAN
டிச 25, 2025 11:50

அப்படிச் செய்பவர்கள் உன் மார்க்கத்தினராகத்தான் இருப்பார்கள் ......


venkat
டிச 25, 2025 11:50

வழக்கம் போல பொய்களை பரப்பி , மக்களை பயமுறுத்தி, தன் வயிறு வளர்க்கும் அரசியல்வியாதிங்க .. ஏமாளி தமிழனும் அதை நம்புகிறான்..


oviya vijay
டிச 25, 2025 12:29

திருப்பரங்குன்றம் மலையில் mamisa பிரியாணி எம் எல் ஏ வின் கு‌ம்ப‌ல் சாப்பிட்டது மத நல்லிணக்க நடவடிக்கை...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 25, 2025 19:30

உன்னோட க கும்பல் தான் அதை செய்வதாம்


R. SUKUMAR CHEZHIAN
டிச 25, 2025 11:33

நமது பிரதமர் இந்த மதமாரிகளுக்கும் மதமாற்ற கும்பல்களுக்கும் எவ்வளவு நன்மைகள் செய்தாலும் எல்லோரையும் சமமாகப் பார்தாலும் இத்த கும்பல்கள் பிரதமருக்கும் பாஜகவுக்கு எதிராக தான் ஓட்டு போடும் என தெரிந்தும் சர்சுக்கு போனது வியப்பும் ஆச்சரியமும் இல்லை இது தான் நடுநிலை மற்றும் சனாதன தர்மத்தின் பண்பு. வாழ்க சனாதன தர்மம். ஜெய் ஹிந்த்.


T.Senthilsigamani
டிச 25, 2025 11:08

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் டில்லியில் சர்ச்சில் பிரதமர் மோடி பிரார்த்தனை. நல்ல செய்தி. அயோத்தி ராமர் கோவில் செல்லும் மோடி சர்ச் சென்றும் பிரார்த்தனை செய்கிறார். இது தான் மத நல்லிணக்கணம் .ஆனால் இங்கு திராவிட கழிசடைகள் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொல்லி சர்ச் செல்லும். நோன்பு கஞ்சி குடிக்க மசூதி செல்லும் ஆனால் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லாது. கோவில்கள் செல்லாது கேட்டால் மதச்சார்பின்மை என குதர்க்கமான பதில் வரும். திராவிட இளிவரல்களை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும். அப்போது திராவிட மாயை அழியும் .தமிழகம் தாமரை மலரும் மலரும் காட்சியை காணும் .


Parthasarathy A K
டிச 25, 2025 11:01

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரார்த்தனை நாட்டில் உண்மையான மத நல்லிணக்கத்தினை உண்டாக்கும்


சத்யநாராயணன்
டிச 25, 2025 11:00

எங்கும் சிவமயம் எல்லாம் சிவமயம் சனாதன தர்மம் வாழ்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை