உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போரை அரசியலாக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

போரை அரசியலாக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எர்ணாகுளம்: உலகளாவிய பிரச்னை நடக்கும் நிலையில், அதனை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மேற்காசியாவில் தற்போது நடப்பது குறித்து அனைவருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான நமது சகோதரர் மற்றும் சகோதரிகள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது எல்லாம் நமது நாட்டு மக்களுக்கு பிரச்னை வருகிறதோ, அப்போது அவர்களை பாதுகாக்க நாங்கள் அனைத்து சக்திகளையும் பயன்படுத்துகிறோம். இன்றைய இந்தியா, நாட்டு மக்களை பிரச்னையில் தள்ளாது. போரில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அளித்துள்ளோம்.வளைகுடாவில் உள்ள நமது நட்பு நாடுகள், நமது குடிமக்களின் நலன்களை பாதுகாத்து வருவது எனக்கு திருப்தி அளிக்கிறது. நமது தூதரகங்கள் 24 மணிநேரமும் அவர்களுக்கு உணவு, வசிப்பிடம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.உலகளாவிய பிரச்னை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேண்டும் என்றே, ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.இதனால், நமது மக்கள் அங்கு சிக்கிக் கொள்வார்கள். அவர்கள் மோடியை திட்டுவார்கள். இது தான் அவர்களின் எண்ணம்.70 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தீர்கள். தற்போது, உங்களுக்கு சேவை செய்ய பாஜ தலைமையிலான தேஜ கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். வளர்ந்த கேரள மாநிலத்தை நீங்கள் பார்ப்பீர்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

oviya vijay
மார் 11, 2026 21:20

பிணம் தின்னி அரசியல். சீக்கியர்கள் படுகொலை, தமிழ் ஈழ படுகொலை எல்லாம் தான்


MARUTHU PANDIAR
மார் 11, 2026 18:03

இவனுவளால அரைபைசாவுக்கு நாட்டுக்கு லாபம் கிடையாது. பெங்களூர் மற்றும் பிற இடங்களில் ஹோட்டல்களை மட்டுமே நம்பியுள்ள பணியாளர்கள் பாதி ப்படைவதை வைத்து அரசியல் செய்யும் நாதாரிகள் எல்லாவற்றுக்கும் மோடியைத் தான் டார்கெட் செய்து பிழைப்பு நடத்துகின்றன. தோஹாவின் ராட்சத LPG உற்பத்தி மையம் முடக்கப்பட்டது உலகத்துக்கே தெரியும். அப்புறம் கேஸ் எங்கிருந்து கிடைக்கும்? இந்த கான்கிராஸ் மற்றும் தோழமை நா...ரிகளுக்கும் மட்டும் தெரியாம போய்டுச்சா?


V Venkatachalam, Chennai-87
மார் 11, 2026 17:47

கான்+கிராஸ்க்கு இதை விட்டா மறுபடி எப்போ சான்ஸ் கிடைக்கும் ன்னு தெரியாது. அதாவது மறுபடி எப்போ போர் வரும்? அதுனால இப்பவே அரசியல் பண்ணு. ஈரானை ஆதரிப்பது பேசணும். அதுதான் நல்லா அரசியல் பண்றதா அர்த்தம்.‌


அரவழகன்
மார் 11, 2026 17:16

காங்கிரஸ் அரசியல் பண்ண என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் கோமாளி தனம் பண்ணுவதை வாடிக்கையாக்கி விட்டது..


இரானி
மார் 11, 2026 17:01

உலகளாவிய நாடுகளுக்கு சொகுசு விமானத்தில் போய் மெடல் வாங்கிட்டு, இப்போ இப்பிடி உள்நாட்டு காங்கிரஸ் என்னும் செத்த பாம்பை அடிக்கிறாரு.


Nathansamwi
மார் 11, 2026 16:56

எங்கடா இன்னும் காங்கிரஸ் பேர சொல்லலையே னு பாத்தோம் ...நீங்க பண்ண நல்லதா சொல்லி வோட்டு கேளுங்க ஜி ....எவ்ளோ நாள் அடுத்தவனை குறை சொல்லியே உங்க காலத்தை ஓட்டுவீங்க ...


vivek
மார் 11, 2026 17:43

திராவிட அண்டா நாதன்சாமி ஓசி பிரியாணிக்கு உருட்டுறான்


அப்பாவி
மார் 11, 2026 16:38

பின்னே அவியலாக்குவாங்களா?


vivek
மார் 11, 2026 16:33

இதை பார்லிமெண்டுக்கு போய் பேசலாமே? மேடையில் பேசி அரசியல் ஆக்குவதேன்?


vivek
மார் 11, 2026 17:59

அறிவிலி...பார்லிமென்ட்ல பேசுனா காங்கிரஸ் ஓடி போயிடுறான்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை