உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5வது முறையும் ஜெயம்...! ஜம்மு காஷ்மீர் தேர்தலில் சம்பவம் செய்த காம்ரேட்

5வது முறையும் ஜெயம்...! ஜம்மு காஷ்மீர் தேர்தலில் சம்பவம் செய்த காம்ரேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்; ஜம்மு காஷ்மீர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் யூசூப் தாரிகாமி குல்காம் தொகுதியில் ஐந்தாவது முறையாக வென்று அசத்தி உள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. உமர் அப்துல்லா புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.இந்த தேர்தலில் பல சுவராஸ்யங்கள் இருந்தாலும் குல்காம் தொகுதி வெற்றி அனைவரையும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் யூசுப் தாரிகாமி ஐந்தாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக வென்று உள்ளார். இம்முறை அவர், 7,838 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார்.இதற்கு முன்பே இதே தொகுதியில் அவர், 1996, 2002, 2008, 2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 2 தசாப்தங்களாக தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் தாரிகாமி இம்முறை வெற்றி பெறுவது என்பது சற்றே கடினம் என்று கூறப்பட்டது. அவரை எதிர்த்து அடிப்படைவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி வேட்பாளராக சுயேட்சையாக களம் இறங்கிய சயர் அகமது ரேசியை காரணம் காட்டுகின்றனர். கடும் போட்டியை அவர் அளித்தாலும் இறுதியில் தாரிகாமியே வெற்றி பெற்றார்.இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களுக்கே ஓட்டளிக்க வேண்டும் என்று ஜமாத் அமைப்பின் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்தனர். அதையும் கடந்து தாரிகாமி வெற்றி பெற்றுள்ளார்.தமது வெற்றி குறித்து தாரிகாமி கூறி உள்ளதாவது; குல்காம் மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அங்குள்ள மக்கள் குல்காமுக்காகவும், காஷ்மீருக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் போராடினர். அரசுக்கு ஒத்துழைத்தவர்களை தோற்கடித்துள்ளனர்.ஏராளமான வன்முறைகளுக்கு பின்னர் இது இஸ்லாமுக்கும், மற்றவர்களுக்கும் எதிரான ஒன்றாக கட்டமைக்கின்றனர். இது இஸ்லாமியத்தின் இழப்பு கிடையாது. ஏமாற்றும் அரசியல் செய்பவர்கள், இரட்டை அரசியல் நிலைப்பாட்டை கடைபிடித்தவர்களுக்குதான் இழப்பு.ஒரு பக்கம், மக்கள் பா.ஜ.,வை முற்றிலும் நிராகரித்துள்ளனர். அதே நேரம் மறுபக்கம் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்துள்ளனர். இவ்வாறு தாரிகாமி கூறி உள்ளார்.1990களில் பிரிவனைவாத கொள்கையில் ஜமாம் இ இஸ்லாமி முன்னணியில் இருந்தது. பின்னர் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறி தேர்தல் கள அரசியலில் கால் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Oru Indiyan
அக் 09, 2024 12:46

கம்யூனிஸ்ட் கட்சி ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாங்கிய வாக்கு நோட்டாவை விட குறைவு மக்களே.


Sivagiri
அக் 09, 2024 12:45

ஆக , சைனா எபெக்ட் - அங்கேயும் வேலை செய்யுது ? , நோட் பண்ணிக்கோங்கப்பா , அங்கிட்டும் இல்லாம இங்கிட்டும் இல்லாம , இரண்டு பூனைகளுக்கு பங்கு பிரித்து வைத்த நாய் கதை ஆயிடாம . . ?


Narayanan
அக் 09, 2024 12:23

இருபது ஆண்டுகள் ஒரு எம் எல் ஏ அனுபவம் பெற்ற ஒருவர் 29 தொகுதிகளில் வென்ற பிஜேபியை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று ஒரு அப்பட்டமான பொய்யை எப்படி சொல்கிறார் ? 6 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரசை கொண்டாடுகிறார்கள் . வெட்கமாக இல்லை ? ஒரு வலுவான எதிர்க்கட்சியை பார்த்து ஒரு தொகுதியில் வென்ற கம்யூனிஸ்ட்காரர் அப்படி பேசலாமா ? ஒரு காலத்தில் வலுவாக இருந்த கம்யூனிஸ்ட் இன்று எங்கோ ஓரிரு இடத்தில்தான் இருக்கிறது . உணர்ந்து பேசுவது சிறப்பு .


Ramesh Sargam
அக் 09, 2024 12:02

பாஜக தனித்து நின்று பல இடங்களில் வெற்றிபெற்றதை எல்லோரும் மறைத்து பேசுகிறார்கள். அது அவர்களின் தோல்வி.


Jss
அக் 09, 2024 11:52

whatever this commie says is just a nonsense.The commies are getting decimated election after election. W.B is proof. They cannot win a panchayat member if they contest on their own. They have to piggy back on some local party to win the election. They can talk big but people rejection of them sure and sound.


Rasheel
அக் 09, 2024 11:51

என்ன வளர்ச்சி திட்டங்கள் செய்தாலும், மத வெறி காஷ்மீரில் வெற்றி கண்டு உள்ளது.


sundarsvpr
அக் 09, 2024 10:57

மாநில கட்சி தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றுஉள்ளது. உண்மை . தேசிய கட்சிகள் இடையே ஜம்மு காஸ்மீரில் ராகுல் தலைமை காங்கிரஸ் படு தோல்வி. நரேந்திரன் தலைமை பி ஜெ பி கணிசமான வெற்றி. -மக்கள்காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் எதிர்பார்க்கிறார்கள். ஸ்டாலின் தலைமையில் அகில பாரத அளவில் பி ஜெ பி க்கு எதிர்த்து ஒரு கூட்டணிதான் தற்போது தேவை.


lana
அக் 09, 2024 10:39

ஒத்த சீட் வென்ற உண்டியல் குலுக்கி 29 சீட் வென்ற bjp கட்சி ஐ பார்த்து சொல்கின்றனர் மக்கள் bjp ஐ விரட்டி விட்டனர் என்று. நம்புங்கள் நம்பினால் தான் சோறு மற்றும் இரு நூறு.


Narayanan
அக் 09, 2024 12:27

என்னதான் இருந்தாலும் கம்யூனிஸ்ட் பார்ட்டி திராவிடியன் கூட்டாளி அல்லவா அந்த காற்று அடிக்கத்தான் செய்யும் . பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சிகள்தான் தற்போதய இந்தி கூட்டணி .விளங்கிடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை