உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.22 ஆயிரம் கோடி வெளிநாட்டு சொத்துக்கள்; கண்டுபிடித்தது வருமான வரித்துறை!

ரூ.22 ஆயிரம் கோடி வெளிநாட்டு சொத்துக்கள்; கண்டுபிடித்தது வருமான வரித்துறை!

புதுடில்லி: வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டாமல், வெளிநாடுகளில் இந்தியர்கள் வைத்திருந்த 22,000 கோடி ரூபாய் மதிப்புக்கான சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. வெளிநாட்டிலுள்ள சொத்துக்களை வருமானவரி தாக்கல் படிவத்தில் குறிப்பிட தவறும் நபருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.இந்தியாவில் வருமானம் பெறும் ஒவ்வொரு நபரும் தங்களது வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். தற்போது, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதித்தால் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை. வருமான வரி தாக்கல் செய்யும் போது, வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்கள், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை சிலர் கணக்கில் காட்டுவதில்லை. இது சட்டப்படி குற்றம். வெளிநாட்டிலுள்ள சொத்துக்கள் மற்றும் வருமானத்தையும் தெளிவாக வருமான வரி தாக்கல் படிவத்தில் வெளிப்படுத்த வேண்டும். இதில் தவறு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வருமான வரித்துறை அபராதம் விதித்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருவாய், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறை பல்வேறு வகைகளில் தகவல் திரட்டி வருகிறது.அந்த வகையில், இந்தியர்களுக்குச் சொந்தமான 22,000 கோடி ரூபாய் மதிப்புக்கான வெளிநாட்டு சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் நிலங்கள், வெளிநாட்டு வருமானம் ஆகியவை அடங்கும். வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதும், அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு விட்டனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கிற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தை, வருமான வரி தாக்கல் செய்யும்போது தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இதனை மீறுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

P.Sekaran
பிப் 19, 2025 13:14

இவர்கள் வெளி நாட்டு சொத்துக்களை முடக்க முடியாது சர்வதேச சட்டம் இடம் அளிக்காது என்ற காரணத்தால் தான் எல்லா அரசியல் வாதிகளும் சிதம்பரம், ஆளும் அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் எம்பிக்கள் எல்லோரும் வெளி நாட்டில் முதலீடு சொத்துக்கள் கம்பெனிகள் வைத்துள்ளார்கள். இவர்கள் உள்நாட்டு வருமான வரியையே ஒழுங்காக வசூலிக்க முடியவில்லை.மீறி கோர்டுக்கு போனால் சட்டத்திலிருந்து ஜாமின் வாங்கி வெளியில் வந்து விடுகிறார்கள். இதெல்லாம் சரிசெய்ய அதிக காலம் ஆகும். இங்கே சம்பாதித்த கணக்கில் காட்டப்படாத காசை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று முதலீடு செய்கிறார்கள். எவ்வளவு முதலீடு செய்கிறார்களோ. அதற்கு மேலாக வசூல் செய்ய வேண்டும். இங்கு வரி ஏமாற்றினால் அதிக மடங்கு வரி போடுகிறார்களே அதே போல் செய்ய வேண்டும் நம் நாடு செல்வ நாடாக மாறிவிடும் இது நடக்காத காரியம்


R sampath
பிப் 19, 2025 00:02

யார் அவர்கள் என்பதை ஏன் வெளி இடவில்லை. அதில் அரசியல் வாதிகள் இருப்பார்கள்.


R sampath
பிப் 19, 2025 00:05

வருமான வரித்துறைஇன் உளவுத்துறை இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டு இருந்தது


Uuu
பிப் 18, 2025 16:12

ஒன்றிய அரசு நு சொல்லும் முட்டாள்கள் எப்போதும் திருட்டு கூமுட்டைகளை பெரிதாக நினைப்பார்கள் அது அவர்களின் பகுத்தறிவு


Sainathan Veeraraghavan
பிப் 18, 2025 14:03

THOSE WHO HAVE ILLEGALLY AMASSED BILLIONS OF RUPEES AND PARKED THE FUNDS IN FOREIGN COUNTRIES ARE ASKED TO PAY A PALTRY PENALTY OF 10 LACS OF RUPEES. WHY THE CENTRAL GOVERNMENT HAD NOT FORFEITED THE ENTIRE ILLEGAL WEALTH. BEST PUNISHMENT WILL BE TO SEIZE THE ILLEGAL WEALTH IN ITS ENTIRETY AND BRING THE MONEY BACK TO EXCHEQUER.


Sridhar
பிப் 18, 2025 13:46

நம்ம ஆளுங்க நக்கலா சிரிச்சிட்டு இருப்பானுங்க. என்னய்யா கண்டுபிடிசீங்க, சும்மா தம்மாத்தூண்டு பணத்த கண்டுபிடிச்சிட்டு இவ்வளவு அலட்டிக்கிறீங்க. நாங்க இதுவரை ஒரு லச்சம் கோடிய கடந்து வெற்றிகரமா அடுத்த இலக்கை நோக்கி பயணிச்சிட்டு இருக்கோம். எங்கள பிடிக்க துப்பில்ல, தொட்டு பார், சீண்டி பார்னு சவாலெல்லாம் விடமாட்டோம். எங்க வேலைகள் ரகசியமா அதுமேனிக்கு நடந்துகிட்டு இருக்கும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 13:00

ஒன்றிய அரசின் எல்லாத் துறைகளுமே, திறமையற்ற, நேர்மையற்ற துறைகள் தான். ஆனால், பாஜக வை கண்மூடித்தனமா, ஏன், வெறித்தனமா ஆதரிக்கறது ன்னு அதுவும் காரணமே இல்லாம ஆதரிக்கறது ன்னு முடிவு பண்ணி விட்டவர்கள் இவை எல்லாவற்றையும், பாதிக்கப்பட்டால் கூட, வலியை மறைத்துக் கொண்டு ஆதரிப்பார்கள்.


Sudha
பிப் 18, 2025 12:18

திறமையற்ற, நேர்மையற்ற துறை வருமான வரி துறை. இதன் செயல்பாடுகளை நீதி மன்றங்கள் விசாரிக்க வேண்டும், எதன் அடிப்படையில் சோதனைகள் செய்யப்படுகிறது, ஒரு வட்டத்திற்குள் இருக்கும் அனைத்து தொழில் மையங்களும் வருமான கணக்குகள் வைத்துள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு, இந்திய பொருளாதாரம் எங்கோ சென்றுவிடும்


zak
பிப் 18, 2025 12:01

அரசியல் வாதிகளாய் வெளி நாட்டில் சொத்து வைத்துள்ளான்


zak
பிப் 18, 2025 11:59

அரசியல்வாதிகளாய் அதிக சொத்து வெளி நாட்டில் வைத்துள்ளார்


சமீபத்திய செய்தி