உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சட்டசபை தேர்தல்; இதுவரை ரூ.194 கோடி ரொக்கம், மது பறிமுதல்!

டில்லி சட்டசபை தேர்தல்; இதுவரை ரூ.194 கோடி ரொக்கம், மது பறிமுதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு , டில்லியில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில், ரூ.194 கோடி மதிப்புள்ள ரொக்கம், மது உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் தெரிவித்தார்.டில்லியில் நாளை (பிப்.,05) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்.,8ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நடைமுறைக்கு வந்தன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1zntxqbz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து டில்லி தலைமை தேர்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் கூறியதாவது: * சட்டசபை தேர்தலை முன்னிட்டு , டில்லியில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில், ரூ.194 கோடி மதிப்புள்ள ரொக்கம், மது உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. * இதுவரைக்கும், 6 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. சராசரியாக 36 நிமிடங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். * சி.விஜில் செயலி மூலம் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். * அமலாக்கத்துறை அதிகாரிகள் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
பிப் 04, 2025 18:08

யாருடைய பணம் ???? பாஜகவினுடையதா ???? ஆம் ஆத்மியினுடையதா ???? காங்கிரஸினுடையதா ????


Kasimani Baskaran
பிப் 04, 2025 14:11

மானங்கெட்ட தீம்க்கா அறிமுகப்படுத்திய திருமங்கலம் பாரமுலா இன்று இந்தியா முழுவதும் பிரபலம். பொதுமக்களின் பணத்தை கொள்ளை அடித்து தற்குரிகளுக்கு கொடுத்து ஓட்டுவாங்கி ஆளும் முறை. வெளங்கும்டோய்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை