உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை

டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. செங்கோட்டை அருகே, மாலை 6:52 மணிக்கு, சிக்னலில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இதில் அருகில் இருந்த ஆறு கார்கள், இரண்டு இ - ரிக் ஷாக்கள், ஒரு ஆட்டோ ஆகியவை தீப்பற்றி எரிந்தன. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்; 25க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், சில மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், 2,900 கிலோ வெடிபொருட்கள் சிக்கிய அதே நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். இந்நிலையில் இன்று (நவ., 11) கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் சென்ற பார்க்கிங், டோல்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது: சந்தேக நபரின் கார் பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்து வெளியேறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.அந்த காட்சிகளில் குண்டு வெடிப்பு நடந்த நேரத்தில் சந்தேக நபர் தனியாக இருக்கிறார். புலனாய்வாளர்கள் இப்போது தர்யாகஞ்ச் நோக்கி செல்லும் பாதையைக் கண்காணித்து வருகின்றனர், அதே நேரத்தில் அருகிலுள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து வரும் காட்சிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

abdul kareem
நவ 11, 2025 12:34

ஏதாவது பத்து பேர்களைப்பிடித்து இவர்கள்தான் காரணம் என்று கேஸை முடிப்பார்கள்


RK
நவ 11, 2025 11:22

இஸ்ரேல் பாணியில் இந்தியா நடக்க வேண்டும். தீவிரவாதிகளை கண்டதும் சுட்டு பொசுக்க வேண்டும்.


Raman
நவ 11, 2025 11:11

Criminals and those violate Indian Laws must be hunted down mercilessly to save our future generations... pseudo secularism must be uprooted and suspects must be kept in isolation for decades..


SUBBU,MADURAI
நவ 11, 2025 10:29

Delhi blast brings back the UPA era feel. Dear young people, This is what UPA era was like. Day after day after day....


vijay
நவ 11, 2025 12:23

அப்படின்னா , உ.பி.ஏ அரசை ஆதரிக்கிரீங்களா? உ.பி.ஏ அரசு தீவிரவாத தாக்குதல் நடந்த பின்னர் பதில் தாக்குதல் பாகிஸ்தான் மீதும், தீவிரவாத முகாம்கள் மீதும் நடத்தவில்லை, அதெற்கு என்ன சொல்றீங்க? இதற்குத்த்தான் CAA, NRC போன்ற சட்டங்கள் தேவை. ஆனால் கொண்டுவரமால் கலவரம், போராட்டம் செய்ய தூண்டியது யார் அதே உ.பி.ஏ கூட்டணி இப்போ இண்டி கூட்டணி காட்சிகள்தான் கட்சிகள்தானே. இதற்கு பதில் சொல்லு. உள்ளூர் துரோகிகளை, ஆதரிப்பவர்களை மதம் பார்க்காமல் களையெடுக்க முற்பட்டாக்க, அதற்கு முட்டுக்கட்டை போட்டு போராட்டம் பண்ண தூண்டுவது யார் ன்று நாடறியும். போப்பா..


திகழ்ஓவியன்
நவ 11, 2025 12:40

சரி உங்கள் RSS என்ன செய்து கொண்டு இருந்ததது அவர்கள் தானே காப்பாற்றி கொண்டு இருப்பவர்கள், ஷா வின் உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை